Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளிக்கவும்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 4 : The World after World War II

   Posted On :  24.07.2022 06:18 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

சுருக்கமாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : வரலாறு : இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: சுருக்கமாக பதிலளிக்கவும்

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 

1. சீனாவில் 1911 ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்று காரணிகளைக் குறிப்பிடுக.

• மஞ்சு வம்சத்தின் சிதைவு 1908 ஆம் ஆண்டு பேரரசின் பாதுகாவலராயிருந்த பேரரசியார் தாவேகரின் மரணத்தோடுத் துவங்கியது.

• புதிய பேரரசர் இரண்டு வயதே நிரம்பியர் என்ற நிலையில் மாகாண ஆளுநர்கள் சுதந்திரமாகச் செயல்படலாயினர்.

• உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி 1911 ஆம் ஆண்டு ஏற்பட்டு அதன் பாதிப்பு பல மட்டங்களில் பரவியது.

 

2. மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.

1933 ஆம் ஆண்டு வாக்கில் சீன பொதுவுடைமை கட்சியின் மீது முழுக் கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது.

• ஒரு நீண்டப் பயணத்தை முன்னெடுத்து 100,000 பொதுவுடைமை இராணுவத்தினர் 1934 இல் கிளம்பினர்.

• இவ்வாறு கிளம்பிய 100,000 பேரில் வெறும் 20,000 பேர் மட்டும் 1935 இன் பிற்பகுதியில் 6000 மைல்களைக் கடந்து ஷேனிப் பகுதியை சென்றடைந்தனர்.

 

3. பாக்தாத் உடன்படிக்கை அறிந்ததை எழுதுக.

• துருக்கி, ஈராக், பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் 1955 இல் ஏற்படுத்திய ஒப்பந்தமே பாக்தாத் ஒப்பந்தம் என்றழைக்கப்படுகிறது.

• அமெரிக்க ஐக்கிய நாடு இவ்வுடன்படிக்கையில் 1958 இல் இணைந்ததோடு, இவ்வொப்பந்தம் மத்திய உடன்படிக்கை அமைப்பு என்று மாற்றியழைக்கப்பட்டது.

 

4. மார்ஷல் திட்டம் என்றால் என்ன?

• மேற்கு ஐரோப்பிய நாடுகளை தன் செல்வாக்கினுள் வைத்துக்கொள்ள ஐக்கிய அமெரிக்க நாடு மார்ஷல் திட்டத்தை உருவாக்கியது.

• இத்திட்டம் இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்காக அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்தது.

 

5. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.

• ஐக்கிய அமெரிக்க நாட்டின் தலைமையில் கூடிய முதலாளித்துவ நாடுகளை உலக அரசியலில் முதலாம் உலக நாடுகள் என்றும் சோவியத் நாட்டின் தலைமையில் கூடிய பொதுவுடைமை நாடுகளை இரண்டாம் உலக நாடுகள் என்றும் வழங்கப்பட்டன.

• இவ்விரு பிரிவிலும் சேராமல் வெளியிலிருந்த நாடுகளை மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்பட்டன.

 

6. கியூபாவின் ஏவுகணைச் சிக்கல் எவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டது?

• காஸ்ட் ரோவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர கியூபாவின் விமான தளங்களை அமெரிக்கா குண்டு வீசித் தாக்கியது.

• அமெரிக்காவின் போர் கப்பல்கள் கியூபாவை சுற்றி வளைத்தன.

• சோவியத் நாடு கியூபாவில் ஏவுகணைகளை ரகசியமாக நிறுவப் போவதாய் கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசிற்கு உளவுத்துறை தகவல் கொடுத்தது.

• இறுதியாக சோவியத் குடியரசுத்தலைவர் குருசேவ் ஏவுகணைகளைத் திரும்பப் பெற்றதால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

 

Tags : The World after World War II | History | Social Science இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 4 : The World after World War II : Answer briefly The World after World War II | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் : சுருக்கமாக விடையளிக்கவும். - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்