இரண்டாம் உலகப்போர் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும் | 10th Social Science : History : Chapter 3 : World War II
V. சுருக்கமாக விடையளிக்கவும்.
1. முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய
சர்வாதிகாரிகள் யாவர்?
• முசோலினி (இத்தாலி)
• ஹிட்லர் (ஜெர்மனி)
• பிராங்கோ (ஸ்பெயின்)
2. ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார்?
• ஜெர்மனி பெருமளவு அவமானப்படுத்தப்பட்டதாக நிலவிய கருத்தைப் பயன்படுத்தி,
• தனது வல்லமை மிக்க சொற்பொழிவாற்றும் திறமையாலும் உணர்ச்சிமிக்கப்
பேச்சுக்களாலும்,
• ஜெர்மனியை அதன் ராணுவப் புகழ்மிக்க முந்தைய காலத்திற்கு மீண்டும்
அழைத்துச் செல்வதாகவும் கூறி அடால்ப் ஹிட்லர் மக்களைத் தன்பக்கம் ஈர்த்தார்.
3. முத்துத் துறைமுக நிகழ்வை வரி.
• 1941 டிசம்பரில் ஹவாயிலுள்ள
அமெரிக்கக் கப்பற்படைத்தளமான முத்துத் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப்படைகள் முன்னறிவிப்பின்றி
பெரும் தாக்குதலைத் தொடுத்தன.
• இத்தாக்குதலில் பல போர்க்கப்பல்களும் போர் விமானங்களும் அழிக்கப்பட்டன.
• அமெரிக்க வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
• இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஜப்பான் மீது போர்ப் பிரகடனம் செய்தது.
• சீனாவும் பிரிட்டனும் அமெரிக்காவுடன் இணைந்தன.
4. பெவரிட்ஜ் அறிக்கை குறித்து நீ அறிந்தது என்ன?
• பெவரிட்ஜ் அறிக்கையை 1942 ஆம் ஆண்டில் இங்கிலாந்து வெளியிட்டது.
• அவ்வறிக்கையில், பொது நலனுக்குப்
பெருந்தடைகளாக உள்ள வறுமை நோய் ஆகியவற்றை வெற்றிகொள்ள, பொதுமக்களுக்கு
அதிக வருமானத்தை அளிப்பது, உடல் நலப்பாதுகாப்பு, கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு
ஆகியவற்றை வழங்கும் பல திட்டங்கள் தொகுப்பாக இடம் பெற்றிருந்தன.
5. பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
• உலக வங்கி
• பன்னாட்டு நிதி அமைப்பு
6. பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?
• உலக அளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பைப் பேணுவது.
• நிதி நிலையை உறுதியானதாக வைத்திருத்தல்.
• பன்னாட்டு வணிகத்திற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது.
• வேலைவாய்ப்பினைப் பெருக்குவது.
• நீடித்தப் பொருளாதார வளர்ச்சி.
• உலகம் முழுவதும் வறுமையை ஒழிப்பது என்பனவாகும்.