Home | 4 ஆம் வகுப்பு | 4வது தமிழ் | அறிவுநிலா: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 9 | 4 ஆம் வகுப்பு தமிழ் - அறிவுநிலா: கேள்விகள் மற்றும் பதில்கள் | 4th Tamil : Term 3 Chapter 9 : Arivu Nelaa

   Posted On :  03.08.2023 12:19 am

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 9 : அறிவுநிலா

அறிவுநிலா: கேள்விகள் மற்றும் பதில்கள்

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 9 : அறிவுநிலா: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

வாங்க பேசலாம்


நீங்கள் அறிந்திருக்கும் புதிர்க்கதைகளுள் ஒன்றை வகுப்பில் பகிர்ந்து கொள்க.

விடை

ஓர் ஊரில் விறகுவெட்டி ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஏழ்மையில் இருந்தான். அவனுடைய அப்பாவிற்குக் கண் தெரியாது. அவனுக்குத் திருமணம் ஆகி நீண்ட நாட்களுக்குப் பிறகும் குழந்தை இல்லை. எப்போதும் அவன் கவலையுடன் இருப்பான். ஒருநாள் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு தன் வறுமையை எண்ணியபடியே உறங்கிவிட்டான். கொஞ்ச நேரம் உறங்கியபின் விழித்தெழுந்தான். அடுத்த வேலை உணவிற்கு விறகு வெட்டி எடுத்துச் சென்றால்தான் என்ற நிலைமை. சுறுசுறுப்பானான்.

மரத்தை வெட்ட தன் வாளை எடுத்தான். அப்போது அம்மரம் விறகு வெட்டியே! நில் என்னை வெட்டாதே! நான் ஓர் அதிசய மரம். என் நிழலில் யார் அமர்கிறார்களோ அவர்களுக்கு உதவி செய்வேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். நான் தருகிறேன். ஆனால் ஒரு வரம்தான் கேட்க வேண்டும் என்று கூறியது.

விறகு வெட்டி எனக்கு என்ன கேட்பது என்று தெரியவில்லை. வீட்டிற்குச் சென்று என் குடும்பத்தினரிடம் கேட்டு நாளை வந்து கேட்கிறேன் என்றான். மரமும் சரி என்று கூறியது. விறகு வெட்டி வீட்டிற்குச் சென்ற நடந்தவற்றைக் கூறினான்.

விறகு வெட்டியின் தந்தை தனக்குப் பார்வையில்லாமல் மிகவும் சிரமப்படுவதாகக் கூறினார். தாய் வீடு பெரிய மாடி வீடாக இருக்க வேண்டும் என்று கூறினார். மனைவி, ‘நமக்குக் குழந்தை வேண்டும் என்று கூறினாள். மூவருடைய தேவையை எவ்வாறு ஒரு வரத்தினால் பூர்த்தி செய்வது என்று சிந்தித்தான் விறகு வெட்டி.

அடுத்தநாள் விறகு வெட்டி விடியற்காலையில் எழுந்தான். காட்டிற்குச் சென்று அந்த அதிசய மரத்திடம் ஒரு வரம் கேட்டான். மரமும் கொடுத்தது. விறகு வெட்டியும் மகிழ்ந்தான்.

அவன் கேட்டவரம்

என் மகனை நான் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் காட்சியை என் பெற்றோர் வீட்டு மாடியிலிருந்து பார்க்க வேண்டும் என்பதுதான் விறகு வெட்டி கேட்ட வரம்,

தந்தைக்குப் பார்வை கிடைத்துவிட்டது.

தாய் கேட்டதைப் போல் மாடி வீடு கிடைத்தது.

அவனுக்கு மகனும் பிறந்து விட்டான்.

 

சிந்திக்கலாமா!

இக்கதையில் வரும் அண்ணனைப்போல் நீ இருந்தால், தம்பிக்கு என்ன செய்திருப்பாய்? கூறுக.

விடை

இக்கதையில் வரும் அண்ணனைப் போல் நான் இருந்தால் என் தம்பிக்கு நல்லதைச் செய்வேன் பசுவை அவனிடம் கொடுப்பேன். மேலும் அவனைத் தனியே இருக்க வேண்டாம், என்னுடன் சேர்ந்தே இரு என்று கூறுவேன்.

 


படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

 

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ''தினமும்' என்ற சொல்லின் பொருள்

அ) நாள்தோறும்

ஆ) வேலைதோறும்

) மாதந்தோறும்

ஈ) வாரந்தோறும்

[விடை : அ) நாள்தோறும்]

 

2. ''பனிச்சறுக்கு' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பனி + சறுக்கு

ஆ) பனிச் + சறுக்கு

இ) பன + சறுக்கு

ஈ) பன் + சறுக்கு

[விடை : அ) பனி + சறுக்கு]

 

3. 'வேட்டை + நாய்' - இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

அ) வேட்ட நாய்

ஆ) வேட்நாய்

இ) வேட்டைநாய்

ஈ) வேட்டநாய்

[விடை : இ) வேட்டைநாய்]

 

வினாக்களுக்கு விடையளிக்க.

1. ஓராண்டு நிலத்தில் உழைத்தவர் யார்?

விடை

ஓராண்டு அண்ணனுடைய நிலத்தில் தம்பி உழைத்தார்.

 

2. பெரியவர் சொன்ன புதிர்கள் எத்தனை?

விடை

பெரியவர் சொன்ன புதிர்கள் மூன்று. அவை,

முதல் புதிர் மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது?

இரண்டாவது புதிர் மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது?

மூன்றாவது புதிர் அதிக விரைவாகச் செல்வது எது?

 

3. புதிருக்குச் சரியான பதிலளித்தவர் யார்?

விடை

புதிருக்குச் சரியான பதிலளித்தவர் தம்பி.

 

4. பெரியவர் பசுவை யாருக்குக் கொடுத்தார்?

விடை

பெரியவர் பசுவைத் தம்பிக்குக் கொடுத்தார்.

 

5. கவின்நிலா பெரியவருக்குக் கொடுத்த பரிசு என்ன?

விடை

கவின்நிலா பெரியவருக்குக் கொடுத்த பரிசு சிட்டுக்குருவி.

 

எதிர்ச்சொல்லுடன் இணைப்போமா?


 

இணைந்து செய்வோம்

விளையாடலாம் வாங்க ! தூண்டில் மீன் விளையாட்டு!

மீன் வடிவத்தில் அட்டைகளை வெட்டிக் கொண்டு அட்டையில் பின்வரும் சொற்களை எழுதிக் கொள்ள வேண்டும். அட்டையில் குண்டுசியைக் குத்தி, வகுப்பறையின் நடுவில் வட்டமிட்டு அதில் அட்டைகளை பரப்பி வைக்க வேண்டும். ஒரு குச்சியின் நுனியில் நூலின் ஒரு முனையைக் கட்ட வேண்டும். மறுநுனியில் காந்தத்தை வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். வகுப்பறையில் பெரியதொரு வட்டமிட்டு வட்டத்தில் ஓர் அம்புக்குறி இடவேண்டும். வட்டத்தில் மாணவர்களை ஓடவிட வேண்டும். ஆசிரியர் ஊதலை ஊதியவுடன் மாணவர்கள் வட்டத்தில் நிற்க வேண்டும். அம்புக்குறி இட்ட இடத்தில் எந்த மாணவர் நிற்கிறாரோ அவர், தூண்டில் மூலம் ஓர் அட்டையை எடுத்து, அதில் உள்ள சொல்லுக்குப் பன்மைச்சொல் கூற வேண்டும்.

எடுத்துக்காட்டு : முட்டை - முட்டைகள்

புதிர் வீடு கோழி நாய் துணி

குச்சி வண்டி பரிசு முயல் குருவி

விடை

புதிர் – புதிர்கள்

வீடு – வீடுகள்

கோழி – கோழிகள்

நாய் – நாய்கள்

துணி – துணிகள்

குச்சி – குச்சிகள்

வண்டி – வண்டிகள்

பரிசு – பரிசுகள்

முயல் – முயல்கள்

குருவி – குருவிகள்

 

கலையும் கைவண்ணமும்

வரைந்து வண்ணமிட்டு மகிழ்வோம் !

பாதி என்னிடம் மீதி உன்னிடம் வரைந்து வண்ணம் தீட்டு


 


மொழியோடு விளையாடு



 

புகைவண்டி

1. புகை

2. வண்டி

3. கை

4. வடி

5. வகை

6. கைவண்டி

கதைப்பாட்டு

1. கதை

2. பாட்டு

3. கட்டு

4. தை

5. பாடு

6. பாதை

பருத்தி ஆடைகள்

1. பருத்தி

2. ஆடைகள்

3. படை

4. ஆள்

5. பரு

6. ஆடை

 

அறிந்து கொள்வோம்

விடுகதைகளுக்கு ஒன்பது வடிவங்கள் உள்ளன.

1. புதிர்

2. சொல் விளையாட்டு

3. மாற்றெழுத்துப் புதிர்

4. வினோதச் சொற்கள்

5. எழுத்துக் கூட்டு

6. விகடம்

7. ஓவியப் புதிர்

8. சொற்புதிர்

9. நொடிவினா

 

சொல்லுக்குள் சொல் கண்டுபிடி!

கொடுக்கப்பட்ட சொல்லின் பொருள் கட்டத்திலுள்ள எழுத்துகளுள் ஒளிந்திருக்கிறது கண்டுபிடித்து எழுதுக.


ஓவியம்

விண்மீன்

 

செயல் திட்டம்

உங்கள் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கேட்டு, 20 விடுகதைகள் எழுதி வருக

விடை

1. ஒற்றைக் காதுக்காரன், ஓடி ஓடி வேலி அடைக்கிறான். அது என்ன?

பதில் : ஊசி

2. புறப்பட்டது தெரிகிறது; போன சுவடு தெரியவில்லை . அது என்ன ?

பதில் : புயல்

3. பார்த்தால் கல்; பல் பட்டால் நீர். அது என்ன?

பதில் : பனிக்கட்டி

4. பிடி இல்லாத குடையைத் தொட முடியவில்லை . அது என்ன ?

பதில் : வானம்

5. மனிதன் போடாத பந்தலிலே மலர்ந்து கிடக்கின்றன பூக்கள். அது என்ன?

பதில் : நட்சத்திரம்

6. மட்டை உண்டு, கட்டை இல்லை; பூ உண்டு, மணமில்லை. அது என்ன?

பதில் : வாழை

7. மூடாத வாய்க்கு முழ வால். அது என்ன?

பதில் : அகப்பை

8. முகம் பார்த்து வளரும்; முடிவில்லாமல் தொடரும். அது என்ன?

பதில் : சொந்தம்

9. திரி இல்லாத விளக்கு; உலகம் எல்லாம் தெரியும். அது என்ன?

பதில் : சூரியன்

10. சின்னத் தம்பி , குனிய வச்சான். அது என்ன?

பதில் : முள்

11. அள்ள முடியும்; ஆனால் கிள்ள முடியாது அது என்ன?

பதில் : தண்ணிர்

12. அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது அது என்ன?

பதில் : காற்று

13. ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை ?

பதில் : பூமி

14. பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்; விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்.

பதில் : வானம்

15. தாளைக் கொடுத்தால் தின்னும்; தண்ணிர் குடித்தால் மடியும்.

பதில் : நெருப்பு

16. நித்தம் கொட்டும்; சத்தம் இல்லை

பதில் : கண்இமை

17. பக்கத்திலுள்ள பட்டணத்தைப் பார்க்க முடியவில்லை.

பதில் : முதுகு

18. நூல் நூற்கும்; இராட்டை அல்ல, ஆடை நெய்யும், தறியும் அல்ல.

பதில் : சிலந்தி

19. சூடுபட்டுச் சிவந்தவன், வீடுகட்ட உதவுவான்.

பதில் : செங்கல்

20. பட்டையைப் பட்டையை நீக்கி, பதினாறு பட்டையை நீக்கி, முத்துப் பட்டையை நீக்கி, முன்னே வாராள் சீமாட்டி

பதில் : வாழைப்பூ

Tags : Term 3 Chapter 9 | 4th Tamil பருவம் 3 இயல் 9 | 4 ஆம் வகுப்பு தமிழ்.
4th Tamil : Term 3 Chapter 9 : Arivu Nelaa : Arivu Nelaa: Questions and Answers Term 3 Chapter 9 | 4th Tamil in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 9 : அறிவுநிலா : அறிவுநிலா: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 3 இயல் 9 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 9 : அறிவுநிலா