Home | 4 ஆம் வகுப்பு | 4வது தமிழ் | எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 2 | 4 ஆம் வகுப்பு தமிழ் - எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 4th Tamil : Term 2 Chapter 2 : Elurum eppadiye irundhuVittal

   Posted On :  27.07.2023 06:09 am

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்

எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்: கேள்விகள் மற்றும் பதில்கள்

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

வாங்க பேசலாம்


"பணத்தையா சாப்பிடமுடியும்?" என்ற இளமாறனுக்கு நீங்களாக இருந்தால் என்ன விடை சொல்வீர்கள்?

விடை

நான் கூறும் விடை :

பணத்தைச் சாப்பிட முடியாது. ஆனால் விவசாயத்தை மேம்படுத்த முடியும். உழவுத்தொழில் சிறப்பதற்கான பணியைச் செய்வேன். வீட்டில் கால்நடைகளை வளர்த்து இயற்கை உரத்தைப் பயன்படுத்துவேன். செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதிமொழியேற்பேன்.

 

சிந்திக்கலாமா?

நம் நாட்டில் பல தொழில்கள் நடைபெறுகின்றன. உழவுத்தொழில் செய்ய யாரும் விரும்பவில்லையெனில் உலகம் என்னவாகும்?

விடை

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்று திருவள்ளுவரே கூறியுள்ளார். பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும், உழவுத்தொழிலே சிறந்தது. அத்தகைய உழவுத்தொழில் நடைபெறவில்லையெனில் நம் அனைவருக்கும் உண்ண உணவு இருக்காது. உணவுக்குப் பதிலாக காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளுக்கும் மாத்திரையை விழுங்கி உயிர் வாழ வேண்டிய நிலைதான் ஏற்படும்.

 

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

 

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. 'பாய்ந்தோடும்' இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பாய் + தோடும்

ஆ) பயந்து + ஓடும்.

இ) பாய்ந்து + ஓடும்

ஈ) பாய் + ஓடும்

[விடை : இ) பாய்ந்து + ஓடும்]

 

2. காலை + பொழுது இச்சொற்களைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது

அ) காலைப்பொழுது

ஆ) காலைபொழுது

இ) காலபொழுது

ஈ) காலப்பொழுது

[விடை : அ) காலைப்பொழுது]

 

3. பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்லை?.

அ) மலை

ஆ) காடு

இ) நெகிழி

ஈ) நிலம்

[விடை : இ) நெகிழி]

 

4. குனிந்து- இச்சொல் குறிக்கும் பொருள்

அ) வியந்து

ஆ) விரைந்து

இ) துணிந்து

ஈ) வளைந்து

[விடை : ஈ) வளைந்து]

 

5. தன்+ உடைய இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது.

அ) தன்னுடைய

ஆ) தன்உடைய

இ) தன்னுடைய

ஈ) தன்உடையை

[விடை : அ) தன்னுடைய]

 

வினாக்களுக்கு விடையளிக்க

1. செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

விடை

 நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து நோய்கள் வருகின்றன.

உணவுகள் உயிர்ச்சத்தின்றி இருக்கின்றன.

மண் வளம் அழிக்கப்படுகிறது.

 

2. நிலத்தைத் தெய்வமாக வணங்கவேண்டும் எனத் தாத்தா கூறக் காரணம் என்ன?

விடை

நெல், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய் வித்துகள், காய்கள், பழங்கள் எனப் பலவகையான உணவுப் பொருள்களை நிலம் கொடுப்பதால், நிலத்தைத் தெய்வமாக வணங்க வேண்டும்.

 

3. 'எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்' என இளமாறன் ஏன் கூறினான்?

விடை

இளமாறன் தன் தாத்தா கூறியவற்றைச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய அப்பா வயலுக்குச் சென்று வந்தாயா? உன் தாத்தாவை வயலுக்குப் போக வேண்டாம் என்று சொன்னால் அவர் எங்கே கேட்கிறார்?” என்று கூறினார்.

 

சொந்த நடையில் கூறுக

உமக்குப் பிடித்த காய்கள், பழங்கள் எவை? ஏன்?

விடை

எனக்குப் பிடித்த காய்கள், பழங்கள் : கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பாகற்காய், முள்ளங்கி, காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பூசணிக்காய், எல்லா வகையான கீரைகள், அன்னாசிப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம், திராட்சைப்பழம், பப்பாளிப்பழம் ஆகிய அனைத்தும் எனக்குப் பிடித்தவை.

இவற்றை உண்பதற்கான தனித்தனிக் காரணங்கள் ஏதும் இல்லை. காய்கறிகளிலும் பழங்களிலும் தனித்தனி மருத்துவக்குணம் உள்ளது.

பொதுவாகக் காய்கறிகளையும் பழங்களையும் உண்பதால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. உயிர்ச்சத்து மற்றும் தாது உப்புகள் கிடைக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது. அதனால் நோயற்ற வாழ்வு வாழ இயலும்.

 

அகரமுதலி பார்த்துப் பொருளறிக.

மாசு அழுக்கு, குற்றம், மாறுபாடு

வேளாண்மை உழவு

 

சொற்களை இணைத்துத் தொடரை நீட்டித்து எழுதுக.

படித்தேன்

நான் படித்தேன்

நான் நேற்று படித்தேன்

நான் நேற்று பாடம் படித்தேன்

நான் நேற்று தமிழ்ப்பாடம் படித்தேன்

வரைந்தாள்

கமலா வரைந்தாள்

கமலா படம் வரைந்தாள்

கமலா கிருஷ்ணர் படம் வரைந்தாள்

கமலா அழகாக கிருஷ்ணர் படம் வரைந்தாள்


நிறுத்தக் குறியீடுக

1. நெல் கம்பு கேழ்வரகு போன்றவை தானியங்கள்

விடை

நெல், கம்பு, கேழ்வரகு போன்றவை தானியங்கள்.

 

2. வெண்டைக்காய் உடலுக்கு நல்லது

விடை

 வெண்டைக்காய் உடலுக்கு நல்லது.

 

3. ஆகா பயிர் அழகாக உள்ளதே

விடை

ஆகா, பயிர் அழகாக உள்ளதே!

 

4. அடப்பாவமே அப்படின்னா நாம எதைத்தான் சாப்பிடுவது

விடை

அடப்பாவமே! அப்படின்னா, நாம எதைத்தான் சாப்பிடுவது?

 

புதிய சொற்களை உருவாக்கலாமா?

விடை

பல், ஊர், பால், வாய், நாடு, பாடு, ஏடு,

தலை, காலை, கலை, கண், காண், ஊண்,

பார், காய், தண், வாள், வாடு, தடு, காடு,

ஓடு,நாய்,நார், நாள், நாகம், காகம்,

பாகம், பாகல், வாள், ஊற்று, காற்று, பற்று.

 

படத்தைப் பார்த்து விடுகதைகள் உருவாக்குக.

விடை :

ஒரு வீட்டுக்கு இரண்டு வாசற்படி. அது என்ன? மூக்கு

விடை :

பெட்டியை திறந்தால் வெள்ளை முத்துகள் அது என்ன? வெண்டைக்காய்

 

அகர வரிசைப்படுத்துக

தேன், தாளம், தௌவை, துடுப்பு, தென்னை, தையல், தோழமை, தீ, தூய்மை, தொகை, திட்டம், தளிர்


விடை

தளிர்,  தாளம், திட்டம், தீ, துடுப்பு, தூய்மை, தென்னை, தேன், தையல், தொகை, தோழமை, தௌவை

 

சொல்லக்கேட்டு எழுதுக

1. இயற்கை வேளாண்மை

2. உயிர்ச்சத்துகள்

3. செயற்கை உரங்கள்

4. நெல் மணிகள்

5. நண்டுகள்

 

கலையும் கைவண்ணமும்

வண்ணம் தீட்டுவோமா!


 

செயல் திட்டம்

உங்கள் வீட்டில் உருவாகும் காய்கறிக்கழிவுகளையும் மட்கும் குப்பைகளையும் பயன்படுத்தி, இயற்கை உரம் தயார் செய்க. அந்த உரத்தை வீட்டிலோ பள்ளியிலோ உள்ள தாவரங்களுக்குப் பயன்படுத்துக.

 

குழுவாக விளையாடலாமா?

படத்தில் உள்ளதுபோல் அட்டைகளைத் தயார் செய்து கொள்க.

முதல் அட்டையை அசையாமல் இருக்குமாறு வைத்துக்கொள்க.

இரண்டாவது அட்டை மட்டும் சுழலுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். மேல் பக்கமாகக் கடிகார முள் போன்று செய்துவைத்துக் கொள்க.

மாணவர் ஒருவரை அழைத்து, முதல் அட்டையிலிருந்து ஏதாவது ஒரு படத்தின் பெயரைக் கூறச் சொல்லவேண்டும், அந்த மாணவரையே இரண்டாவது அட்டையையும் சுழற்றச் சொல்ல வேண்டும். கடிகார முள்ளிற்கு நேராக முதல் அட்டையில் கூறிய படத்திற்குப் பொருத்தமான படம் வந்தால் அவர் வெற்றி பெற்றதாகவும், இல்லையெனில் அடுத்தடுத்த சுற்றுக்கு வாய்ப்பு வழங்கியும் விளையாட்டைத் தொடரலாம்.


 

அறிந்து கொள்வோம்

திருக்குறள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

- உழவு, குறள் 1033

Tags : Term 2 Chapter 2 | 4th Tamil பருவம் 2 இயல் 2 | 4 ஆம் வகுப்பு தமிழ்.
4th Tamil : Term 2 Chapter 2 : Elurum eppadiye irundhuVittal : Elurum eppadiye irundhuVittal: Questions and Answers Term 2 Chapter 2 | 4th Tamil in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால் : எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 2 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்