பணம் | மூன்றாம் பருவம் அலகு 5 | 3 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி (பணத்தின் கூட்டலும் கழித்தலும்) | 3rd Maths : Term 3 Unit 5 : Money
பயிற்சி
1. செங்கோதை புத்தகப் பையை ₹.210.30 க்கும் ஒரு விளையாட்டுக் காலணியை ₹.260.20 க்கு வாங்குகிறார் அவர் கடைக்காரரிடம் 500 ரூபாயைக் கொடுத்தார் எனில் கடைக்காரர் அவருக்குத் தர வேண்டிய மீதித் தொகை எவ்வளவு?
தீர்வு:
பணத்தைக் கூட்டுதல்
புத்தகப் பையின் விலை = ரூ 210.30
காலணியின் விலை = ரூ 260.20
மொத்த விலை = ரூ 470.50
பணத்தைக் கழித்தல்
செங்கோதை கடைக்காரரிடம் கொடுத்த தொகை = ரூ 500.00
மொத்த விலை = ரூ 470.50
கடைக்காரர் தர வேண்டிய தொகை = ரூ 29.50
2. குமரனின் தந்தை அவன் மாமாவிடமிருந்து ₹200.00 க்குச் சில்லறை வாங்கி வரச் சொன்னார். அவனுடைய மாமா ஒரு நூறு ரூபாய் தாளையும் ஒரு ஐம்பது ரூபாய் தாளையும் அவனிடம் கொடுத்தார். எனில் மாமா அவனுக்கு மேலும் தர வேண்டிய தொகையானது எவ்வளவு?
தீர்வு:
பணத்தைக் கூட்டுதல்
குமரன் மாமா கொடுத்தது = 100.00
= 50.00
மொத்த தொகை = 150.00
பணத்தைக் கழித்தல்
குமரனின் தந்தை கொடுத்த தொகை = 200.00
குமரனின் மாமா கொடுத்த தொகை =150.00
குமரனின் மாமா தர வேண்டிய மீதித் தொகை = 50.00