Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | உரைநடை: அயோத்திதாசர் சிந்தனைகள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: அயோத்திதாசர் சிந்தனைகள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam

   Posted On :  16.07.2023 10:27 pm

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்

உரைநடை: அயோத்திதாசர் சிந்தனைகள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் : உரைநடை: அயோத்திதாசர் சிந்தனைகள்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அயோத்திதாசர் ---------- சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

அ) தமிழக

ஆ) இந்திய

இ) தென்னிந்திய

ஈ) ஆசிய

[விடை : இ) தென்னிந்திய]

 

2. அயோத்திதாசர் நடத்திய இதழ் ……………..

அ) ஒருபைசாத் தமிழன்

ஆ) காலணாத் தமிழன்

இ) அரைப்பைசாத் தமிழன்

ஈ) அரையணாத் தமிழன்

[விடை : அ) ஒருபைசாத் தமிழன்]

 

3. கல்வியோடு ------- கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.

அ) சிலம்பமும்

ஆ) கைத்தொழிலும்

இ) கணிப்பொறியும்

ஈ) போர்த்தொழிலும்

[விடை : ஆ) கைத்தொழிலும்]

 

4. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது -----------

அ) ஆழ்ந்த படிப்பு

ஆ) வெளிநாட்டுப்பயணம்

இ) இதழியல் பட்டறிவு

ஈ) மொழிப்புலமை

[விடை : அ) ஆழ்ந்த படிப்பு]

 

5. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது --------------

அ) வானம்

ஆ) கடல்

இ) மழை

ஈ) கதிரவன்

[விடை : இ) மழை]

 

குறுவினா

1. அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் யாவை?

விடை

அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் :

(i) நல்ல சிந்தனை

(ii) சிறப்பான செயல்

(iii) உயர்வான பேச்சு

(iv) உவப்பான எழுத்து

(v) பாராட்டத்தக்க உழைப்பு

 

2. ஒரு சிறந்த வழிகாட்டி எவ்வாறு இருக்கவேண்டும் என அயோத்திதாசர் கூறுகிறார்?

விடை

ஒரு சிறந்த வழிகாட்டி :

ஒரு சிறந்த வழிகாட்டி மக்களுள் மாமனிதராக, அறிவாற்றல் பெற்றவராக, நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும் என்று அயோத்திதாசர் கூறுகிறார்.

 

3. திராவிட மகாஜன சங்கம் எவற்றுக்காகப் போராடியது?

விடை

திராவிட மகாஜன சங்கம் சாலைகள் அமைத்தல், கால்வாய்கள் பராமரித்தல், குடிகளின் பாதுகாப்புக்குக் காவல்துறையினரை நியமித்தல், பொது மருத்துவமனைகள் அமைத்தல், சிற்றூர்கள் தோறும் கல்விக்கூடங்கள் ஏற்படுத்துதல் போன்றவற்றுக்காகப் போராடியது.

 

சிறுவினா

1. அயோத்திதாசரின் இதழ்ப்பணி பற்றி எழுதுக.

விடை

அயோத்திதாசரின் இதழ்ப்பணி :

(i) அயோத்திதாசர் 1907ஆம் ஆண்டு சென்னையில் ஒரு பைசாத் தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்.

(ii) ஓர் ஆண்டிற்குப்பின் அவ்விதழின் பெயரைத் தமிழன் என மாற்றினார்.

(iii) உயர்நிலையையும் இடைநிலையையும் கடைநிலையையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றைத் தெளிவுபடுத்துவதே இவ்விதழின் நோக்கம் என்று அயோத்திதாசர் குறிப்பிட்டார்.

(iv) இவர் தமிழன் இதழ் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி மைசூர், கோலார், ஐதராபாத், இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் பகுத்தறிவுச் சிந்தனை, இன உணர்வு, சமூகச் சிந்தனை ஆகியவற்றை ஊட்டினார்.

(v) இவர் தமது நூல்கள் மூலமாகவும் தமது சீர்திருத்தச் சிந்தனைகளை வெளியிட்டார்.

 

2. அரசியல் விடுதலை பற்றிய அயோத்திதாசரின் கருத்துகள் யாவை?

விடை

அரசியல் விடுதலை பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள் :

(i) விடுதலை என்பது வெறும் ஆட்சிமாற்றம் மட்டுமன்று.

(ii) அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையவேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.

(iii) “சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக்கூடாது;

(iv) மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அஃது அமையவேண்டும்.

(v) மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது என்று ஆணித்தரமாகக் கூறினார் அயோத்திதாசர்.

 

நெடுவினா

வாழும் முறை, சமத்துவம் ஆகியன பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக.

விடை

வாழும் முறை :

(i) மக்கள் வாழவேண்டிய முறை பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள் சிறப்பானவையாகும்.

(ii) மக்கள் அனைவரும் அன்புகொண்டு வாழவேண்டும்; கோபம், பொறாமை, பொய், களவு போன்றவற்றைத் தம் வாழ்விலிருந்து நீக்கி வாழவேண்டும்.

(iii) பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யக்கூடாது. மேலும் மதியை அழிக்கும் போதைப் பொருள்களைக் கையாலும் தொடுதல் கூடாது.

(iv) ஒரு குடும்பத்தில் அன்பும் ஆறுதலும் நிறைந்தால் அக்குடும்பம் வாழும் ஊர் முழுவதும் அன்பும் ஆறுதலும் பெறும்.

(v) ஊர்கள் அன்பும் ஆறுதலும் பெறுமானால் நாடு முழுவதும் அன்பும் ஆறுதலும் பெற்றுத் திகழும்.

(vi) இத்தகைய நாட்டில் புலியும் பசுவும் ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தும் என்பவை அயோத்திதாசர் கருத்துகள் ஆகும்.

சமத்துவம் :

(i) அயோத்திதாசர், மக்கள் அனைவரும் சம உரிமை பெற்றுச் சமத்துவமாக வாழ வேண்டும் என்று விரும்பினார்.

(ii) கல்வி, வேளாண்மை, காவல்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.

(iii) ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றிலும் எல்லா வகுப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

(iv) இவற்றில் இந்து, பௌத்தர், கிறித்துவர், இசுலாமியர், ஆங்கிலோ இந்தியர், ஐரோப்பியர் போன்ற அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் அயோத்திதாசர்.

 

சிந்தனை வினா

ஒரு சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகள் யாவை?

விடை

ஒரு சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகள்:

(i) அரசாங்கம் கூறும் சட்டத்திட்டங்களைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிதல்.

(ii) சண்டை சச்சரவுகள் இன்றி வாழ்தல், ஒற்றுமையைப் பேணுதல்.

(iii) பொது இடங்களைச் சரியான முறையில் பயன்படுத்துதல்.

(iv) சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல்களான மரங்களை வெட்டுதல், நெகிழியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர்த்தல்.

(v) நமது தமிழ்ப் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை அடுத்த தலைமுறையினருக்கு அறிவுறுத்தல் .

(vi) பெரியோரை மதித்தல், இறை வழிபாடு போன்றவற்றை கடைப்பிடித்தல் ஆகிய உயர்பண்புகள் அடிப்படைப் பண்புகளாகும்.

 


கற்பவை கற்றபின்

 

 

சமூகச் சீர்திருத்தத்திற்குப் பாடுபட்ட சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக.

விடை

சமூகச் சீர்திருத்தத்திற்குப் பாடுபட்டவர்கள் :

1. மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி

2. எஸ். தர்மாம்பாள்

3. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

4. ஈ.வே.ரா. பெரியார்

5. பாரதியார்

6. நிவேதிதா தேவி

7. பாரதிதாசன்.

8. அம்பேத்கர்

Tags : Chapter 8 | 8th Tamil இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam : Prose: Ayothidhasan sindhanaigal: Questions and Answers Chapter 8 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் : உரைநடை: அயோத்திதாசர் சிந்தனைகள்: கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்