பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 3 : Nadu Athai Nadu
(இயல் 3 : உரைநடை உலகம் : தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர்)
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம் ________
அ) தூத்துக்குடி
ஆ) காரைக்குடி
இ) சாயல்குடி
ஈ) மன்னார்குடி
[விடை : இ. சாயல்குடி]
2. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் ________
அ) இராஜாஜி
ஆ) நேதாஜி
இ) காந்திஜி
ஈ) நேருஜி
[விடை : ஆ. நேதாஜி]
3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்
அ) இராஜாஜி
ஆ) பெரியார்
இ) திரு.வி.க
ஈ) நேதாஜி
[விடை : அ. இராஜாஜி]
குறு வினா
1. முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?
❖ வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளை உண்டாக்கியவர்.
❖ உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி.
- என்று முத்துராமலிங்கத்தேவரைப் பெரியார் பாராட்டியுள்ளார்.
2. முத்துராமலிங்கத்தேவரின் பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடைவிதிக்கப்படக் காரணம் யாது?
❖ முத்துராமலிங்கத்தேவர், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் வீர உரையாற்றினார்.
❖ அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்தனர்.
❖ இதனால், அவரைப் பலமுறை ஆங்கில அரசு கைது செய்தது.
❖ மேலும், வாய்ப்பூட்டுச் சட்டம் முலம் மேடைகளில் அரசியல் பேசக் கூடாது என்று அவருக்குத் தடைவிதித்தது.
3. முத்துராமலிங்கத்தேவர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக.
❖ முத்துராமலிங்கத்தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்.
❖ சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகிய பலதுறை ஆற்றல் உடையவராக விளங்கினார்.
சிறு வினா
1. நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் கொண்ட தொடர்புப் பற்றி எழுதுக.
❖ நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார்.
❖ அவரைத் தம் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.
❖ முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்று 06.9.1939 இல் நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
❖ நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர்.
❖ விடுதலைக்குப் பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார்
2. தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத்தேவர் செய்த தொண்டுகள் யாவை?
❖ 1938 காலகட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார்.
❖ மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார். அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.
❖ உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப்பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார்.
❖ பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார்.
சிந்தனை வினா
சிறந்த தலைவருக்குரிய பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்? –
❖ உரிமைக்காகப் போராடுதல்
❖ ஒழுக்கம் காத்தல்
❖ மக்கள் நலம் காத்தல்
❖ பிறர்நிலையில் தன்னை வைத்துப் பார்த்தல்
❖ பொதுநல வாழ்வு
❖ பேச்சாற்றல்
❖ மனித நேயம்
❖ சாதி, மத, இன, மொழி ஆகியன பாராமை
❖ நாட்டுப் பற்று
❖ தியாக உணர்வு
ஆகியன சிறந்த தலைவருக்குரிய பண்புகளாக நாங்கள் கருதுகின்றோம்.
கற்பவை கற்றபின்
நாட்டுக்கு உழைத்த சிறந்த பிற தலைவர்கள் பற்றிய செய்திகளைத் திரட்டி எழுதுக.
காந்தியடிகள்:
அகிம்சை வழியில் நாட்டு விடுதலைக்குப்பாடுபட்டவர். வெள்ளையனே வெளியேறு இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு முதலியன.
நேதாஜி:
இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்.
வ. உ. சிதம்பரனார்:
நம் நாட்டிற்காகச் சுதேசக் கப்பல் வாங்கியவர். நாட்டுமக்களுக்காக சிறையில் செக்கிழுத்தவர்.
ஜவஹர்லால் நேரு:
காந்தியடிகளுடன் இணைந்து நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டவர்.
பூலித்தேவன்:
ஆங்கிலேயரை எதிர்த்து தன்பகுதியை வென்றவர். விடுதலைப் போரின் முதல் முழக்கமிட்டவர்.
வீரபாண்டிய கட்டபொம்மன்:
ஆங்கிலேயருக்கு வரி கொடுக்கமாட்டோம் என்று ஆங்கிலேயரை எதிர்த்தவர்.