இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை -----------
அ) கல்வெட்டுகள்
ஆ) செப்பேடுகள்
இ) பனையோலைகள்
ஈ) மண்பாண்டங்கள்
[விடை : இ) பனையோலைகள்]
2. பானை ----------- ஒரு சிறந்த கலையாகும்.
அ) செய்தல்
ஆ) வனைதல்
இ) முடைதல்
ஈ) சுடுதல்
[விடை : ஆ) வனைதல்]
3. 'மட்டுமல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மட்டு + மல்ல
ஆ) மட்டம் + அல்ல
இ) மட்டு + அல்ல
ஈ) மட்டும் + அல்ல
[விடை : ஈ) மட்டும் + அல்ல]
4. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) கயிற்றுக்கட்டில்
ஆ) கயிர்க்கட்டில்
இ) கயிறுக்கட்டில்
ஈ) கயிற்றுகட்டில்
[விடை : அ) கயிற்றுக்கட்டில்]
பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
1. முழுவதும்
2. மட்டுமல்லாமல்
3.அழகுக்காக
4. முன்பெல்லாம்
விடை
1. முழுவதும் – பாடநூல் முழுவதும் வாசித்தால்தான் தெளிவு கிடைக்கும்.
2. மட்டுமல்லாமல் – ஏட்டுக் கல்வி மட்டுமல்லாமல் தொழில் கல்வியும்
கற்க வேண்டும்.
3. அழகுக்காக – பல அரங்குகளில் சுடுமண் சிற்பங்களை அழகுக்காக
வைத்திருப்பார்கள்.
4. முன்பெல்லாம் – முன்பெல்லாம் மண்பாண்டங்களை அதிகம் பயன்படுத்தினார்கள்.
குறுவினா
1. எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள் எனக் கூறுகிறோம்?
விடை
மண் பொம்மைகள் செய்தல், மரப்பொம்மைகள் செய்தல், காகிதப்பொம்மைகள் செய்தல், தஞ்சாவூர்த்தட்டு செய்தல், சந்தன மாலையும் ஏலக்காய் மாலையும் செய்தல், மாட்டுக்கொம்பினால் கலைப் பொருட்கள் செய்தல் ஆகியவற்றை
எல்லாம் கைவினைக் கலைகள் எனக் கூறுகிறோம்.
2. மண்பாண்டம். சுடுமண் சிற்பம் -ஒப்பிடுக.
விடை
மண்பாண்டம் :
களிமண்ணை ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து மெல்லிய
மணல் மற்றும் சாம்பல் சேர்த்து சக்கரத்தால் செய்வது மண்பாண்டம்.
சிற்பம்
களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் சுட்டு
எரித்து எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள்.
3. பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?
விடை
குழந்தைகளுக்கான கிளுகிளுப்பை பொம்மைகள், பொருள்களை வைத்துக்கொள்ள உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய், பனை
மட்டை நாரிலிருந்து கயிறு,
கட்டில், கூடை
போன்றவை செய்யப்படுகின்றன.
சிறுவினா
1. பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையைக் கூறுக.
விடை
(i) பிரம்பு என்பது ஒரு தாவரம். முதலில் பிரம்புகளை
நெருப்பில் காட்டிச் சூடுபடுத்த வேண்டும்.
(ii) சூடான பிரம்பை நட்டு வைத்திருக்கும் இரண்டு பாறைகளுக்கு
இடையே செலுத்தி வளைக்க வேண்டும். அது வேண்டிய வடிவத்தில் கம்பி போல வளையும்.
(iii) பின்னர் அதனை தண்ணீரில் நனைத்து வைத்து விட்டால், அப்படியே நிலைத்து விடும். பிறகு அவற்றை இணைத்துச்
சிறு ஆணிகளை அறைந்தும், சிறு
பிரம்பு இழைகளைக் கொண்டும் தேவையான பொருட்களாக மாற்ற வேண்டும்.
2. மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.
விடை
மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும்
துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய், தொட்டில், பாடை
ஆகியவை அனைத்தும் மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் ஆகும்.
நெடுவினா
தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
விடை
மண்பாண்டக் கலை :
● குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி
ஆகிய அனைத்துப் பொருட்களும் சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்டவை.
● பக்குவப்படுத்தப்பட்ட களிமண், மெல்லிய மணல் சாம்பல் ஆகியவற்றைக் கலந்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
● சக்கரத்தின் நடுவே வைத்து உரிய வடிவத்தால் அதைக்
கொண்டு வர வேண்டும். பிறகு அடிப்பகுதியில் நூல் அல்லது ஊசியால் அறுத்து எடுத்து காயவைக்க
வேண்டும். பிறகு உரிய மண்பாண்டம் தயாராகிவிடும்.
● மண்பாண்டங்களில் சமைத்த உணவு உடலுக்கு நல்லது.
● திருவிழாக் காலங்களிலும் சமயச் சடங்குகளிலும்
மண்பானைகள் இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மூங்கில் கலை :
(i) மூங்கில்
கொண்டு பல கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றன.
(ii) மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய், தொட்டில், பாடை
ஆகிய அனைத்தும் மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் ஆகும்.
(iii) முன்பு
எல்லாம் திருமணத்தின் போது சீர்த்தட்டுகளாகப் பயன்படுத்தினர்
பனையோலைக் கலை :
(i) பனையோலையில்
பல கைவினைப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
(ii) குழந்தைகளுக்கான
கிளுகிளுப்பை பொம்மைகள்,
பொருள்களை வைத்துக் கொள்ள உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய், பனை
மட்டை நாரிலிருந்து கயிறு,
கட்டில், கூடை
போன்றவை செய்யப்படுகின்றன.
பிரம்புக் கலை :
(i) பிரம்பு
என்பது ஒரு தாவரம்.
(ii) முதலில்
பிரம்புகளை நெருப்பில் காட்டி சூடுபடுத்த வேண்டும். சூடான பிரம்பை நட்டு வைத்திருக்கும்
இரண்டு பாறைகளுக்கு இடையே செலுத்தி வளைக்க வேண்டும்.
(iii) அது
வேண்டிய வடிவத்தில் கம்பி போல வளையும். பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்து வைத்து விட்டால், அப்படியே நிலைத்து விடும். பிறகு அவற்றை இணைத்துச்
சிறு ஆணிகளை அறைந்தும்,
சிறு பிரம்பு இழைகளைக் கொண்டு கூட்டியும் தேவையான
பொருட்களாக மாற்ற வேண்டும்.
(iv) பிரம்பு
மிகவும் குளிர்ச்சியானது. எனவே அதில் அமர்வது உடல்நலத்துக்கு நல்லது.
(v) மேலும்
பிரம்புப்பொருள் வீட்டுக்கு அழகையும் கொடுக்கும்.
சிந்தனை வினா
கைவினைக்கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள
தொடர்பு குறித்து எழுதுக.
விடை
(i) கைவினைப் பொருட்கள் அனைத்தும் இயற்கையான பொருளால்
தயாரிக்கப் படுபவை.
(ii) செயற்கையான பொருளோ தீங்கு விளைவிக்கும் இரசாயனமோ
இதில் பயன்படுத்தப்படுவது இல்லை.
(iii) இயற்கையாகக் கிடைக்கும் களிமண், பனை ஓலை, மூங்கில், பிரம்பு ஆகியவற்றை முதன்மைப் பொருளாகக் கொண்டு
கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றன.
(iv) கைவினைக் கலைகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய
பொருட்களின் மீதத்தைப் பூமியில் புதைத்தாலும், அவை மக்கி விடும். இதனால் சுற்றுப்புறத்திற்கு
எந்தத் தீங்கும் ஏற்படாது.
கற்பவை கற்றபின்
1. உங்கள் பகுதியில் கிடைக்கும் களிமண், பனையோலை போன்ற பொருள்களைப் பயன்படுத்திக் கைவினைப்பொருள்களைச்
செய்து காட்சிப்படுத்துக.
விடை
2. பனையோலையால் செய்யப்படும் பல்வேறு கைவினைப்பொருள்களின் படங்களைச்
சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.
விடை