விலங்குகளின் வாழ்க்கை | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 3rd Science : Term 3 Unit 2 : Animal Life

   Posted On :  28.05.2022 09:59 pm

3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : விலங்குகளின் வாழ்க்கை

வினா விடை

3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : விலங்குகளின் வாழ்க்கை : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியா? தவறா?, ஓரிரு வாக்கியங்களில் விடையளி, பொருத்துக, ஓரிரு வாக்கியங்களில் விடையளி , வரையறு, சிந்தித்து விடையளி, மாணவர்கள் செயல்பாடு, செயல் திட்டம்

விலங்குகளின் வாழ்க்கை (மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல்)


மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கொசுவைப் போல உணவை உறிஞ்சும் உயிரினம் 

அ) கரப்பான் பூச்சி

ஆ) கிளி

இ) வண்ணத்துப்பூச்சி

விடை : இ) வண்ணத்துப்பூச்சி 


2. கரடி சில நேரம் பூசணிக்காயையும், சில நேரம் மீனையும் உண்ணும். எனவே, அது

அ) ஊன் உண்ணி

ஆ) அனைத்துண்ணி

இ) தாவர உண்ணி

விடை : ஆ) அனைத்துண்ணி 


3. கொட்டைகளை உடைத்து விதைகளை உண்ண ஏற்ற அலகினைப் பெற்ற பறவை எது? 

அ) குருவி

ஆ) ஆந்தை

இ) மீன்கொத்தி

விடை : அ) குருவி 


4. ஊன் உண்ணும் விலங்குகள் சிறப்பான -------- பெற்றுள்ளன. 

அ) கடைவாய்ப்பல்

ஆ) தந்தம்

இ) கோரைப்பற்கள்

விடை : இ) கோரைப்பற்கள் 


5. யானை ஒரு -----------

அ) தாவர உண்ணி 

ஆ) ஊன் உண்ணி  

இ) அனைத்துண்ணி

விடை : அ) தாவர உண்ணி 


6. ஊன் உண்ணியைத் தேர்ந்தெடு. 

அ) மான்  

ஆ) சிங்கம்   

இ) ஒட்டகச்சிவிங்கி

விடை : ஆ) சிங்கம் 


7. உணவுச் சங்கிலியில் பாம்பிற்கு முன்வரும் விலங்கு எது? 

அ) கழுகு

ஆ) தவளை   

இ) புல் 

விடை : ஆ) தவளை 


8. உணவுப்பழக்கத்தின் அடிப்படையில் கரடியைப் போன்று உணவு உண்ணும் விலங்கு 

அ) ஒட்டகம்

ஆ) மான்   

இ) கோழி 

விடை : இ) கோழி


9. வாழிடத்தின் அடிப்படையில் பொருந்தாதது எது? 

அ) மான்

ஆ) மீன்   

இ) நரி 

விடை : ஆ) மீன் 


10. பின்வருவனவற்றுள் மாறுபட்ட உணவுப்பழக்கம் கொண்டது எது? 

அ) யானை

ஆ) பசு

இ) நாய் 

விடை : இ) நாய்



II. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. __________ (காடு/இலை) ஒரு சிறிய வாழிடம்.

விடை: இலை 

2. வண்ணத்துப்பூச்சி  பூவிலிருந்து __________ (தேனை/நீரை) உறிஞ்சுகிறது.

விடை: தேனை 

3. உளி போன்ற அலகைப் பெற்றுள்ள பறவை __________ (குருவி/மரங்கொத்தி)

விடை: மரங்கொத்தி 

4. கிளி __________ (எலியை/தானியங்களை) உணவாக உண்ணும்.

விடை: தானியங்களை 

5. உணவுச் சங்கிலி எப்பொழுதும் __________ (தாவரத்தில்/விலங்கில்) தொடங்கும்.

விடை: தாவரத்தில்



III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி. 

1. நிலமும் நீரும் பொதுவான வாழிடங்கள் ஆகும். வாழிடம் என்பது என்ன?

ஒர் உயிரினம் (நிலம் மற்றும் நீரில் வாழும் விலங்குகள்) வாழும் இடமே வாழிடம் எனப்படும். 

(ஒர் உயிரினம் உயிர்வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, நீர், இருப்பிடம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் போன்றவை அதன் வாழிடத்தில் காணப்படுகிறது.)


2. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

அ. நில வாழ் விலங்குகள் : எறும்பு , பூனை, சிங்கம். 

ஆ. நீர் வாழ் விலங்குகள் : மீன், நண்டு, டால்பின்.


3. விலங்குகள் இடம்விட்டு இடம் நகர்வது ஏன்?

• விலங்குகளால் தமக்கு வேண்டிய உணவைத் தாமே தயாரிக்க முடியாது. அவை தமது உணவிற்காகத் தாவரங்களையோ, (அல்லது) தாவரங்களை உண்ணும் பிற விலங்குகளையோ சார்ந்து உள்ளன. 

• விலங்குகள் உணவிற்காக இடம் விட்டு இடம் நகருகின்றன.


4. வண்ணத்துப்பூச்சி தேனை உணவாக எடுத்துக்கொள்ளும். அதுபோன்று மண்புழு எதை உணவாக உண்ணும்? 

மண்புழுவானது மண்ணிலுள்ள கரிமக்கழிவுகள் மற்றும் நுண்ணுயிரிகளை உணவாக உட்கொள்கின்றன. 


5. தாவர உண்ணி, ஊன் உண்ணி - வேறுபடுத்துக. 

தாவர உண்ணி

தாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகளை தாவர உண்ணிகள் என அழைக்கப்படுகின்றன.

எ.கா: மான், பசு, ஆடு.

ஊன் உண்ணி 

இறைச்சியை உணவாக உட்கொள்ளும் விலங்குகளை ஊன் உண்ணிகள் என அழைக்கப்படுகின்றன. 

எ.கா: சிங்கம், புலி, சிறுத்தை .


6. மனிதன் ஒர் அனைத்துண்ணியா? ஊன் உண்ணியா?

• மனிதன் ஓர் அனைத்துண்ணி. 

• ஏனென்றால், மனிதன் அனைத்து வகை உணவுகளையும் (தாவரங்களையும், விலங்குகளையும்) உண்பதால் மனிதன் அனைத்துண்ணி என அழைக்கப்படுகிறான்.


7. உணவுச் சங்கிலிக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

புல் வெட்டுக்கிளி தவளை பாம்பு கழுகு 


8. பின்வருவனவற்றுள் சரியான உணவுச் சங்கிலியைத் தேர்ந்தெடுக்க.

அ) இலைகள் பறவை பூச்சி 

ஆ) பூச்சி இலைகள் பறவை 

இ) இலைகள் பூச்சி பறவை

விடை: இ) இலைகள் பூச்சி பறவை


IV. செயல் திட்டம்.

தாவர உண்ணி, ஊன் உண்ணிகள் படங்களைச் சேகரித்து ஒட்டுக. 

(மாணவர் செயல்பாடு)


ஆயத்தச் செயல்பாடு

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி, விலங்குகளை அடையாளம் கண்டு, அவற்றின் பெயர்களை எழுதுக.



இணைப்போம்

நீர் வாழ்வன மற்றும் நில வாழ்வனவற்றின் பெயர்களை அவற்றிற்குரிய வாழிடத்துடன் இணைக்க.



உதவி செய்வோம்

ஓர் ஊரில் இயங்கிவந்த உயிரியியல் பூங்காவைத் திடீரென சில காரணங்களால் மூட முடிவு செய்தனர். எனவே, அங்கிருந்த விலங்குகளை அவற்றின் வாழிடத்தில் சேர்க்க முடிவு செய்தனர். அவர்கள் எந்த விலங்கை எந்த வாழிடத்தில் சேர்த்திருப்பர்? 

(புலி, நண்டு, வான்கோழி, ஒட்டகச்சிவிங்கி, பூனை, மீன், கரடி, கழுதை, ஓட்டகம், காகம், வரிக்குதிரை, வாத்து, யானை, ஆமை, பன்றி, மயில், சிங்கம்)

சமவெளி

வான்கோழி, ஒட்டகச்சிவிங்கி, பூனை, கழுதை, ஒட்டகம், காகம், பன்றி, மயில். 

காடு 

புலி, கரடி, வரிக்குதிரை, யானை, சிங்கம். 

குளம்

நண்டு, மீன், வாத்து, ஆமை.



கண்டுபிடிப்போம்

அ) வாழிடத்தின் அடிப்படையில் பொருந்தாத ஒன்றை வட்டமிடுக. 

1. சிங்கம், யானை, குரங்கு,  (திமிங்கலம்) 

2. சுறாமீன்,  (நாய்),  ஜெல்லிமீன்,  நட்சத்திரமீன் 


ஆ) கொடுக்கப்பட்ட குறிப்புகளுக்கு உரிய விலங்கின் பெயரை எடுத்து எழுதுக. 

(பென்குயின், திமிங்கலம், ஆக்டோபஸ், வாத்து)

1. எட்டு கைகளைக் கொண்டவன்; கடலிலே வாழ்பவன்: 

விடை : ஆக்டோபஸ்

2. பறக்க முடியாதவன். ஆனால் நன்றாக நீந்துபவன்: 

விடை : பென்குயின்

3. கடலில் வாழ்வனவற்றில் மிகப் பெரியவன்: 

விடை : திமிங்கிலம்

4. நீர்ப் பறவை: 

விடை : வாத்து



வண்ணமிடுவோம்

நீரில் வாழும் உயிரினங்களுக்கு மட்டும் வண்ணம் தீட்டுக.



இணைப்போம்

விலங்குகளை அவற்றின் வாழிடத்துடன் இணைக்க.



இணைப்போம்

விலங்குகளை அவற்றின் வாழிடத்துடன் இணைக்க.

.


பின்வரும் விலங்குகளின் உணவுகளை எடுத்து எழுதுக.

(கேரட், மான், புல், பால், தானியங்கள்)


பின்வரும் குறிப்புகளின் அடிப்படையில் யார் என்பதைக் கண்டறிந்து எழுதுக.

(மண்புழு, வண்ணத்துப்பூச்சி, கொசு, சிலந்தி, யானை, சிங்கம், கோழி)

காட்டின் அரசன். மான், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி போன்றவற்றை வேட்டையாடி உண்பேன்.

நான் யார்? சிங்கம்

விலங்குகளின் இரத்தம் குடிப்பேன் என் இன ஆண்கள் தாவரத்தின் சாற்றை மட்டும் குடிப்பார்கள்.

நான் யார்?. கொசு

பூவிலிருந்து தேனை உறிஞ்சிக் குடிப்பேன்.

நான் யார்? வண்ணத்துப்பூச்சி

என் வலையில் சிக்கும் சிறு பூச்சிகளை உண்பேன்.

நான் யார்? சிலந்தி

தானியங்கள், சிறு பூச்சிகள், மண்புழு போன்றவற்றை கொத்தி உண்பேன்.

நான் யார்? கோழி

தென்னை ஓலை, கரும்பு, வாழைப்பழம், தாவர இலைகளை தும்பிக்கையின் உதவியால் உண்பேன்

நான் யார்? யானை

மண்ணிலுள்ள கரிமக் கழிவுகள், நுண்ணுயிரிகளை உண்பேன்.

நான் யார்? மண்புழு


இணைப்போம்

கொடுக்கப்பட்ட விலங்குகளுக்கு அவற்றின் உணவைப் பெற வழிகாட்டுங்கள். ஒவ்வொரு விலங்கிற்கும் வெவ்வேறு வண்ணத்தைப் பயன்படுத்துக.



நிரப்புவோம்

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்திப் பணித்தாளை நிறைவு செய்க. 

(புலி, பல்லி, மான், புறா, தேனீ, வண்ணத்துப்பூச்சி, ஆடு, நரி, அணில், மரங்கொத்தி)

பணித்தாள் 

பெயர் : நாள் : 

1. தானியங்களை உண்ணும் விலங்குகள் : புறா, அணில்

2. தாவரங்களை உண்ணும் விலங்குகள் : மான், ஆடு. 

3. ஊன் (மாமிசம்) உண்ணும் விலங்குகள் : புலி, நரி. 

4. தேன் குடிக்கும் விலங்குகள் : தேனீ, வண்ணத்துப்பூச்சி. 

5. பூச்சி உண்ணும் விலங்குகள் : பல்லி, மரங்கொத்தி.



சிந்தித்து கூறுக.

நீ, உன் நண்பனை ஓர் அனைத்துண்ணி என்கிறாய். ஆனால் உன் நண்பனோ தான் ஒரு தாவர உண்ணி என்கிறான். உன் நண்பன் கூற்று சரியா? எப்படி எனக் கூறுக.

• என் நண்பன் கூற்று தவறு. 

• என் நண்பன் தாவரங்களையும் இறைச்சியையும் உண்ணுவதால் அவனை அனைத்துண்ணி என்கிறேன்.



இணைப்போம்

கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளை அவற்றிற்குரிய குடுவைகளுடன் கோடிட்டு இணைக்க.



கண்டுபிடிப்போம்:

கொடுக்கப்பட்ட விலங்கிற்கான உணவை வட்டமிடுக. 

(ஒன்றிற்கு மேல் சரியான உணவு இருந்தால் அதையும் வட்டமிடவும்)



கண்டுபிடிப்போம்

உணவு உண்ணும் முறையின் அடிப்படையில் “ஆ” என்ற வட்டத்தைக் குறிக்கும் விலங்கு வகையைக் கண்டறிந்து, அவற்றிற்கு மூன்று எடுத்துக்காட்டு தருக.


எடுத்துக்காட்டு : காகம், மனிதன், கரடி.



வரைவோம்

1. பின்வரும் செயலைச் செய்யும் பறவையின் அலகுகளை வரைக.

தானியங்கள் உண்ணும் பறவையின் அலகு

மாமிசம் உண்ணும் பறவையின் அலகு



கண்டறிவோம்

படத்தை உற்றுநோக்கி அதிலுள்ள விலங்குகளின் பெயர்களை எழுதுக.

1. சிங்கம்

2. ஒட்டகச்சிவிங்கி

3. வரிக்குதிரை

4. யானை

5. புலி

6. சுறாமீன்



முயற்சிப்போம்

1. இயற்கையில் காணப்படும் சரியான உணவுச் சங்கிலியை தேர்ந்தெடுக்க.

அ. புல் கோதுமை வெட்டுக்கிளி தவளை பாம்பு 

ஆ. புல் முயல் நரி சிங்கம் 

இ. கோதுமை வெட்டுக்கிளி பாம்பு தவளை 

விடை: அ. புல் கோதுமை வெட்டுக்கிளி தவளை பாம்பு


2. பின்வருவனவற்றைப் பயன்படுத்தி ஏதாவது இரண்டு உணவுச் சங்கிலிகளை அமைக்க. 

(புல், புலி, மான், டால்பின், மீன், பூச்சிகள், நத்தை, தாவரம், மீன்கொத்தி) 

உணவுச் சங்கிலி 1 : புல் மான் புலி 

உணவுச் சங்கிலி 2 : பூச்சிகள் மீன் மீன்கொத்தி



நிரப்புவோம்

உணவு வலையை நிறைவு செய்க.





Tags : Animal Life | Term 3 Chapter 2 | 3rd Science விலங்குகளின் வாழ்க்கை | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல்.
3rd Science : Term 3 Unit 2 : Animal Life : Questions with Answers Animal Life | Term 3 Chapter 2 | 3rd Science in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : விலங்குகளின் வாழ்க்கை : வினா விடை - விலங்குகளின் வாழ்க்கை | மூன்றாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 2 : விலங்குகளின் வாழ்க்கை