காற்று | மூன்றாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 3rd Science : Term 3 Unit 3 : Air

   Posted On :  28.05.2022 10:26 pm

3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : காற்று

வினா விடை

3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : காற்று : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியா? தவறா?, ஓரிரு வாக்கியங்களில் விடையளி, பொருத்துக, ஓரிரு வாக்கியங்களில் விடையளி , வரையறு, சிந்தித்து விடையளி, மாணவர்கள் செயல்பாடு, செயல் திட்டம்

காற்று (மூன்றாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு அறிவியல்)


மதிப்பீடு

1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(நுரையீரல், காற்று, எடை, விரிவடையும், உட்சுவாசம்) 

1. காற்றுக்கு ________ உண்டு.

விடை: எடை

2. பொருள்கள் எரிய ________ தேவை. 

விடை: காற்று

3. காற்றை உள்ளிழுக்கும் செயல் ________ எனப்படும். 

விடை: உட்சுவாசம்

4. நாம் சுவாசிக்க உதவும் உறுப்பு ________ 

விடை: நுரையீரல்

5. காற்றை உள்ளிழுக்கும் போது மார்புப் பகுதி ________

விடை: விரிவடையும்


II. சரியா, தவறா என எழுதுக. 

1. காற்று எங்கும் இல்லை. 

விடை : தவறு

2. காற்று வெற்றிடத்தை நிரப்பும். 

விடை : சரி

3. மேகங்கள் நகர காற்றின் நகர்வே காரணம் ஆகும். 

விடை : சரி

4. பலமாக வீசும் காற்று புயல் காற்று எனப்படும். 

விடை : சரி

5. நாம் உயிர்வளியை (ஆக்சிஜனை) வெளிவிடுகிறோம்.

விடை : தவறு



III. பொருந்தாததை வட்டமிட்டு, வினாக்களுக்கு விடையளி.

1. பலூன்,  சைக்கிள் டியூப்,  கால்பந்து,  கிரிக்கெட் பந்து

இது ஏன் மற்றவற்றிலிருந்து வேறுபட்டுள்ளது? 

கிரிக்கெட் பந்தின் உள்ளே காற்று இல்லை.

2. பட்டம்,  பலூன்,  கல்,  இறகு

இதில் கல் ஏன் மற்றவற்றிலிருந்து வேறுபட்டுள்ளது? 

கல் காற்றில் பறக்காது.



IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி. 

1. காற்றின் பண்புகளை எழுதுக.

• காற்று ஓர் இயற்கை வளம். 

• காற்று இல்லாமல் நாம் உயிர் வாழ இயலாது.

• காற்றுக்கு நிறமும், வடிவமும் இல்லை 

• காற்றுக்கு எடை உண்டு.

• காற்று இடத்தை அடைத்துக் கொள்ளும். 

• நம்மால் காற்றை பார்க்க இயலாது. ஆனால் உணர முடியும்.

• காற்று எல்லா இடங்களிலும் நகர்ந்து கொண்டே இருக்கும். 


2. காற்றாலையின் பயனை எழுதுக.

காற்றாலையைப் பயன்படுத்திக் காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 


3. சுவாசித்தல் என்றால் என்ன? 

உட்சுவாசம், வெளிசுவாசம் இரண்டும் நிகழ்வும் சேர்ந்ததே சுவாசித்தல் எனப்படும். 


4. சுவாசித்தலின் செயல்முறைகள் யாவை? 

நாம் சுவாசித்தலின் போது ஆக்ஸிஜனை உள்ளிழுத்து, கரியமில வாயுவை வெளிவிடுதல் சுவாசித்தலாகும். 


5. வேகத்தின் அடிப்படையில் காற்றின் வகைகளை எழுதுக. 

காற்று வீசும் வேகத்தைப் பொருத்து

• தென்றல் காற்று

• புயல் காற்று

• சூறாவளி


6. நிலக்காற்று, கடற்காற்று - வேறுபடுத்துக.


நிலக்காற்று

1. இரவுப் பொழுதில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று, நிலக் காற்று எனப்படும்.

2. இது கடலின் மீதுள்ள வெப்பமான காற்று மேல்நோக்கி எழுவதனால் அந்த வெற்றிடத்தை நிரப்ப நிலத்திலுள்ள குளிர்ந்த காற்றுகடலை நோக்கி வீசுவதால் நிகழ்கிறது.

கடற்காற்று 

1. பகல் பொழுதில் கடலில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்று, கடல் காற்று எனப்படும். 

2. இது நிலத்தில் உள்ள வெப்பக் காற்று மேல்நோக்கி எழுவதனால், கடலில் உள்ள குளிர்ந்த காற்று அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான நிலத்தை நோக்கி வீசுகிறது.


ஆயத்தச் செயல்பாடு 

படங்களை உற்றுநோக்கி, பின்வரும் வினாவிற்கு விடையளிக்க.


மேற்கண்ட செயல்களைச் செய்ய அவசியமானது எது? 

காற்று.


முயல்வோம்

அ. பின்வரும் கூற்றுகள் சரியா, தவறா என எழுதுக. 

1. காற்று இடத்தை அடைத்துக்கொள்ளும். ஆனால் அதற்கு எடையில்லை. 

விடை  : தவறு 

2. காற்றுக்கு நிறமில்லை 

விடை  : சரி

3. காற்றுக்குக் குறிப்பிட்ட வடிவம் உண்டு 

விடை  : தவறு


ஆ. பின்வரும் எந்தப் பொருளில் காற்று நிரப்பப்படும்போது அதன் வடிவம் மாறும்? 

1. குடுவை

2. குவளை

3. பந்து

விடை : 3. பந்து


இ. ஆரோக்கியமான வாழ்விற்குத் தேவையானது எது?

1. தூசு

2. சுத்தமான காற்று

3. புகை

விடை : 2. சுத்தமான காற்று

ஈ. வெப்பக் காற்றுப் பலூனுக்கு வண்ணம் தீட்டுக.




மகிழ்வோம் 

காகிதத்தால் எளிய விமானம் ஒன்றைச் செய்து பறக்கவிட்டு மகிழ்க.

இச்செயல்பாடுகளின் மூலம் நாம் அறிவது : காற்றால் பொருள்கள் நகரும்.


செய்து பார்ப்போம்

காற்று - சுமைதூக்கி 

தேவையான பொருள்கள்:

காலியான பால் பாக்கெட், கயிறு, வெற்று மைப்பேனா அல்லது சிறிய நெகிழிக் குழாய். 

செய்முறை:

பால் பாக்கெட்டின் வாய்ப்பகுதியில் வெற்றுமைப்பேனா அல்லது நெகிழிக் குழாயை வைத்துக் கயிறு கொண்டு இறுக்கமாகக் கட்டவேண்டும். பால் பாக்கெட்டை மேசை மீது வைத்து அதன்மீது இரண்டு அல்லது மூன்று சிறிய நோட்டுப் புத்தகங்களை வைத்து வெற்று மைப்பேனாவின் வழியே பலமாகக் காற்றை ஊதவும். பால் பாக்கெட்டின் உட்பகுதியில் காற்று நிரம்பும்போது, அதன் மேல் உள்ள புத்தகத்தைத் தூக்குகிறது. அது எவ்வாறு நிகழ்கிறது? உங்கள் வாயால் குறிப்பிட்ட அளவே ஊதப்பட்ட காற்று, பால் பாக்கெட்டை விரிவடையச் செய்து புத்தகங்களை உயர்த்தித் தூக்குகிறது.


மேலே உள்ள இச்செயல்பாட்டின் மூலம் நாம் அறிவது ________

1. வெப்பமடையும்போது காற்று மேல்நோக்கி செல்லும். 

2. எரிவதற்குக் காற்று தேவை. 

3. காற்றுக்கு அழுத்தம் உண்டு.

விடை : 3. காற்றுக்கு அழுத்தம் உண்டு 


கலந்துரையாடு

• நீ சுவாசிக்கும்போது உனது நாசி அருகே ஆள்காட்டி விரலை வை. காற்று உள்ளே மற்றும் வெளியே செல்வதை உன்னால் உணர முடிகிறதா? 

ஆம். 

• ஒரு நிமிடத்தில் நீ எத்தனை முறை மூச்சு விடுகிறாய் என எண்ணவும்.

ஒரு நிமிடத்தில் 12 முதல் 20 முறை மூச்சு விடுகிறோம். 

• 6 அல்லது 7 முறை குதித்த பின், உனது மூச்சு விடும் எண்ணிக்கை மாறுகிறதா? அல்லது அப்படியே உள்ளதா? 

மூச்சு விடுதல் அதிகமாகிறது. 

• சுமார் 100 மீ. தூரம் ஓடிய பின் உனது மூச்சு விடும் வேகத்தைக் கவனி.

மூச்சு விடும் வேகம் அதிகமாகிறது. 


முயல்வோம்

சுவாசிக்கக் கூடியவைக்கு () குறியும், சுவாசிக்காதவைக்கு (X) குறியும் இடுக.



எழுதுவோம்

பின்வரும் செயல்களின் சுவாசமுறையை எழுதுக.



செய்து மகிழ்வோம்

சுவாசமும், உடற்பயிற்சியின் தாக்கமும்

மதி மற்றும் மொழி இருவரும் நடத்தல், தாவுதல், ஓடுதல் போன்ற பல்வேறு உடற்பயிற்சிகளைச் செய்தனர். ஒவ்வொரு செயலையும் செய்தபின் அவர்கள் விடும் மூச்சுகளின் எண்ணிக்கை குறித்து ஒரு பட்டை வபைடம் வரைந்தனர்.


வரைபடத்தைக் கவனித்து விடையளிக்க. 

அ. எந்தச் செயலுக்குப்பின் மூச்சு விடும் வேகம் அதிகரிக்கிறது? ஓடுதல் 

ஆ. எந்தச் செயல் இதயத் தசைக்குக் குறைந்த பயற்சி தருகிறது? அமர்தல்


இ. சரியா, தவறா என எழுதுக. 

1. நடக்கும்போது அதிக முறை மூச்சு விடுகிறார்கள். 

விடை  : தவறு 

2. ஓய்வாக அமர்ந்து இருக்கும்பொழுது குறைவாக மூச்சு விடுகிறார்கள். 

விடை  : சரி

3. ஓடும்போது நிமிடத்திற்கு 50 முறை மூச்சு விடுகிறார்கள். 

விடை  : சரி

4. மிகக் கடினமாகப் பயிற்சிகள் செய்யும்போது மூச்சு விடும் வேகம் அதிகரிக்கும். 

விடை  : சரி


இணைப்போம்

பின்வருவனவற்றை பொருத்துக.

அ. தென்றல் - பலத்த காற்று 

ஆ. புயல்    - மிக பலத்த காற்று 

இ. சூறாவளி - இதமான காற்று

விடை  

அ. தென்றல் - இதமான காற்று

ஆ. புயல்    - பலத்த காற்று 

இ. சூறாவளி - மிக பலத்த காற்று 



வரைவோம்

கொடுக்கப்பட்ட படத்தில் கடற்காற்று, நிலக்காற்று வீசும் திசைகளை வரைக.




முயல்வோம்

கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. இதமான காற்று __________ எனப்படும். 

விடை  : தென்றல்

2. காற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவுவது __________.

விடை  : காற்றாலை

3. நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று __________ எனப்படும். 

விடை  : நிலக்காற்று

4. கடற்காற்று என்பது __________ இல் இருந்து __________ நோக்கி வீசும். 

விடை  : கடல் , நிலம்



செய்து பார்ப்போம்

இரண்டு முகவைகளை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒன்றில் மணலையும் மற்றொன்றில் நீரையையும் நிரப்பவும். பின் இரண்டு முகவைகளையும் சூரிய ஒளியில் ஒரு மணி நேரம் வைக்கவும். பின்வு உங்களது ஒரு கையை நீரின் மீதும் மற்றொரு கையை மணல் மீதும் வைக்கவும். 


இவற்றில் அதிக சூடாக இருப்பது எது? நீர்/மணல் 

விடை : மணல்

மீண்டும் இரண்டு முகவைகளையும் சிறிது நேரம் நிழலில் வைக்கவும். முன்பு போன்றே உங்களது கைகளால் இரண்டு முகவைகளையும் தொட்டுப் பார்க்கவும். 

இப்போது இரண்டில் எது அதிகம் குளிர்ச்சி அடைந்துள்ளது? நீர்/மணல் 

விடை : நீர் 


விடையளிப்போம்

பேரிடரின் பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? 

அ. பலத்த மழையின் பொழுது தொலைக்காட்சி 

(பார்ப்பேன் / பார்க்கமாட்டேன்) 

விடை  : பார்க்க மாட்டேன்

ஆ. புயல் வீசும் காலங்களில் எச்சரிக்கைகளைப் 

(பின்பற்றுவேன் / பின்பற்ற மாட்டேன்) 

விடை  : பின்பற்றுவேன்

இ. பலத்த காற்று வீசுகின்றபோது மரத்தின் கீழ் 

(நிற்பேன் /  நிற்கமாட்டேன்)

விடை  : நிற்க மாட்டேன்


Tags : Air | Term 3 Chapter 3 | 3rd Science காற்று | மூன்றாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு அறிவியல்.
3rd Science : Term 3 Unit 3 : Air : Questions with Answers Air | Term 3 Chapter 3 | 3rd Science in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : காற்று : வினா விடை - காற்று | மூன்றாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு அறிவியல் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 3 : காற்று