இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila
மொழியை ஆள்வோம்!
கேட்க.
1. கல்வியின் சிறப்புகளை விளக்கும் கதைகளைக் கேட்டு மகிழ்க.
விடை
ஒரு ஊரில் வயதான பெரியவர் ஒருவர் இருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் படிப்பதே கிடையாது. அந்தப் பெரியவர் எவ்வளவு சொல்லியும் இளமைப்பருவத்தில் அவன் கேட்கவில்லை.
ஆனால் இளைய மகனோ, தந்தையின் சொல்லை மீறாமல் நன்கு படித்தான். தந்தையின் விருப்பப்படி விவசாயத்தைச் செய்தான். ஆனால் பெரிய மகனோ படிக்காமல், வேலைக்கும் செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருப்பான்.
முதியவர் இறக்கும் போது ஒரு உயிலை எழுதி வைத்துச் சென்றார். வீட்டைச் சுற்றி உள்ள காலி இடத்தில் புதையல் இருக்கிறது என அதில் எழுதப்பட்டிருந்தது. அந்த முதியவர் இறந்தவுடன் காலியிடத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொண்டனர்.
மூத்த மகன் தனக்குரிய பகுதியைத் தோண்டிப் பார்த்துவிட்டு புதையல் எதுவும் இல்லாததால், தன் தந்தை தன்னை ஏமாற்றி விட்டதாக சொல்லி குழிகளை மூடி விடுகிறான். ஆனால் இளையவனோ தோண்டிப் பார்த்துவிட்டு, அதனை மூட மனமில்லாமல் தென்னம் பிள்ளைகளை நட்டான்.
மூத்தவன் கல்வியறிவு இல்லாததால் சொத்தினை விற்று, பரம ஏழையாகப் போனான். இளையவனுக்கு, தென்னம் பிள்ளைகள் வளர்ந்து, பணத்தை அள்ளிக் கொடுத்தது.
கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.
கல்வியே அழியாச் செல்வம்.
விடை
தாயே! தமிழே! வணக்கம்.
தாய் பிள்ளை உறவு அம்மா உனக்கும் எனக்கும். பெருமைமிகு சபைக்கு முதற்கண் வணக்கம்.
கல்வியே அழியாச் செல்வம் என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் உங்கள் முன் பேசுகின்றேன். “தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” என்பார் திருவள்ளுவர். ஆம்! படிக்கப் படிக்கத்தான் நம் அறிவும் பெருகும். அதுதான் அழியாத செல்வம். செல்வம் சேகரித்து வைத்திருந்தால் அது ஒருநாள் திருடு போகலாம். பொருட்கள் வாங்கி வைத்தால், அது ஒருநாள் வெள்ளத்தில் அடித்துச் செல்லலாம் அல்லது தீக்கு ஆளாகலாம். ஆனால் கல்விச் செல்வத்தைத் திருட முடியாது. எரிக்க முடியாது. வெள்ளத்தால் அடித்துச் செல்ல முடியாது.
மற்றவர் மனதில் அழியாமல் அது நிற்கும். அதனால் தான் அழியாத செல்வம் கல்விச் செல்வம் என்கின்றனர். எனவே அழியாத கல்விச் செல்வத்தை நாம் அனைவரும் கற்போம்.
நன்றி! வணக்கம்.
சொல்லக் கேட்டு எழுதுக.
தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த ஒரு நூல்; தமிழுக்கு வாழ்வியல் உண்மைகளை உணர்த்தும் ஒரு நூல்; தன் தோற்றத்தால் தமிழ்நாட்டுக்கு உலகப் பெரும் புகழைப் பெற்றுத்தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள். திருக்குறள் பற்றிப் பேசாத புலவர் இலர்; எழுதாத அறிஞர், எழுத்தாளர் இலர். பள்ளிப் பருவத்திலும் திருக்குறள் படிக்கப்படுகின்றது. பருவம் வளரவளர அதுவும் நுட்பமாகக் கற்கப்படுகின்றது. திருக்குறளுக்குரிய சிறப்பே அதுதான். அஃது எல்லாப் பருவத்தாருக்கும் வேண்டிய விழுமிய நூல். எனவே திருக்குறளில்லாத வீடும் இருக்கக் கூடாது! திருக்குறள் படிக்காத தமிழரும் இருக்கக் கூடாது.
கீழ்க்காண்பவற்றுள் ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
மா – மாவிலை, மாமரம், மாங்காய்
தேன் – மலர்த்தேன், தேன்சிட்டு, தேன்கூடு
மலர் – தேன்மலர்
செம்மை – சேயிலை, செங்குருவி, செந்தேன்
சிட்டு – சிட்டுக்குருவி, தேன்சிட்டு
கனி – மாங்கனி, கனிமரம், தேன்கனி
குருவி – சிட்டுக்குருவி, குருவிக்கூடு
இலை – மாவிலை
காய் – மாங்காய், காய்கனி
கூடு – தேன்கூடு, குருவிக்கூடு
முட்டை – குருவிமுட்டை
மரம் – மாமரம், செம்மரம்
அறிந்து பயன்படுத்துவோம்.
நிறுத்தக்குறிகள்
காற்புள்ளி (,)
1. பொருள்களை எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும்.
(எ.கா) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள்.
2. கடிதத்தில் விளி முன் காற்புள்ளி வரும். (எ.கா.) அன்புள்ள நண்பா,
3. வினையெச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும்.
(எ.கா.) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்.
4. மேற்கோள் குறிகளுக்கு (*) முன் காற்புள்ளி வரும்.
(எ.கா.) குழந்தை நிலவைப் பார்த்து,"நிலா நிலா ஓடி வா” என்று பாடியது.
5. முகவரியில் இறுதி வரி நீங்க ஏனைய வரிகளின் இறுதியில் காற்புள்ளி வரும்.
(எ.கா)ச.ஆண்டான், எஸ் 45, காமராசர் தெரு, திருவள்ளூர்.
அரைப்புள்ளி (;)
1. ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
(எ.கா.) கரிகாலன் சுங்கை வரை படையெடுத்துச் சென்றான்; கனக விசயருடன் போரிட்டான்.
2. உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாகக் கூறும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
(எ.கா.) நல்லவன் வாழ்வான், தீயவன் தாழ்வான்.
முக்காற்புள்ளி ( : )
சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் முக்காற்புண்ணி வரும்.
(எ.கா.) முத்தமிழ் இயல், இசை, நாடகம்.
முற்றுப்புள்ளி (.)
1. சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) கல்வியே மனிதனின் வாழ்வை உயர்த்தும்.
2. சொற்குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) திரு. வி.க. மா.க.அ. ஊ.ஒ.ந.நி.பள்ளி
3. பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) நெ.து. சுந்தரவடிவேலு
வினாக்குறி ( ? )
வினாப்பொருளை உணர்த்தும் வாக்கியத்தின் இறுதியில் வினாக்குறி இட வேண்டும்.
(எ.கா) சேக்கிழார் எழுதிய நூல் எது?
வியப்புக்குறி ( ! )
மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.
(எ.கா) தமிழின் இனிமைதான் என்னே! - வியப்பு
பாம்பு: பாம்பு! - அச்சம்
அந்தோ! இயற்கை அழிகிறதே! - அவலம்
ஒற்றை மேற்கோள் குறி (' ')
தனிச் சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும்போதும், இரட்டை மேற்கோள் குறியில் இன்னொரு கூற்று உட்பட்டு வரும்போதும் ஒற்றை மேற்கோள் பயன்படும்.
(எ.கா.) 'நல்ல' என்பது குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
கூட்டத்தின் தலைவர், "அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது 'தலைப்பில்லை என்னும் தலைப்பில் பேசுவார்" என்று அறிவித்தார்.
இரட்டை மேற்கோள்குறி (“ “)
நேர்கூற்றுகளிலும் செய்யுள் அடிகளையோ பொன்மொழிகளையோ குறிப்பிடும் இடங்களிலும் இரட்டை மேற்கோள் குறியைப் பயன்படுத்த வேண்டும்.
(எ.கா) திரு. வி.க. மாணவர்களிடம்," தமிழ்க் காவியங்களைப் படியுங்கள்; இன்பம் நுகருங்கள்" என்று கூறினார்.
பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
1. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்
பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.
2. திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது
திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.
3. தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானது
தமிழ்மொழி செம்மையானது, வலிமையானது, இளமையானது.
4. கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்
கபிலன், “தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா?” என்று கேட்டான்.
5. திரு வி க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது
திரு. வி. க. எழுதிய ‘பெண்ணின் பெருமை‘ என்னும் நூல் புகழ்பெற்றது.
பின்வரும் பத்தியில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.
நூல் பல கல் என்பர் பெரியோர் அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா முடியாது நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மையநூலகம் மாவட்ட நூலகம் கினை நூலகம் ஊரிப்புற நூலகம் எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு ஆகவே நூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம்.
விடை
‘நூல் பல கல்‘ என்பர் பெரியோர். அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகமாகும். நூலகத்தின் வகைகளாவன மைய நூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம். ‘எனக்கு பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன்‘ என்றார் நேரு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம்! அறிவு வளம் பெறுவோம்!
கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
1. எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது?
உலக புத்தக நாள்
2. புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?
இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானம்.
3. புத்தகக் கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது?
11 நாட்கள். (ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 23 வரை)
4. புத்தகக் கண்காட்சிக்காள நுழைவுக் கட்டணம் எவ்வளவு?
நுழைவுக் கட்டணம் இல்லை.
5. புத்தகம் வாங்குவோருக்கு வழங்கப்படும் சலுகை யாது?
10 சதவீதக் கழிவு.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
நூலகம்
முன்னுரை - நூலகத்தின் தேவை வகைகள் - நூலகத்திலுள்ளவை படிக்கும் முறை - முடிவுரை.
விடை
நூலகம்
முன்னுரை :
‘நூலகம் அறிவின் ஊற்று’
‘வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்’
என்றார் பேரறிஞர் அண்ணா . ஊரில் உள்ள ஒரு நூலகத்தையாவது, நாம் பயன்படுத்த வேண்டாமா? நூலகத்தைப் பயன்படுத்தும் முன் நூலகத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நூலகத்தின் தேவை :
‘சாதாரண மாணவர்களையும்
சாதனையாளர்களாக உயர்த்துவது நூலகம்’
ஏழை மாணவர்களும் இளைஞர்களும் படிப்பதற்குத் தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.
அன்றாடச் செய்தித்தாள்களைக் கூட அவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது.
ஆகவே, இலவசமாக நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது.
வகைகள் :
மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின் நூலகம் எனப் பலவகை நூலகங்கள் உள்ளன.
நூலகத்தில் உள்ளவை :
‘அறிவுப் பசிக்கு உணவு நூலகம்’
தமிழ் மற்றும் ஆங்கிலக் கதை, கவிதை, கட்டுரை, ஆய்வுநூல்கள், வரலாற்று நூல்கள், அறிவியல் நூல்கள், தொழில்நுட்ப நூல்கள், போட்டித் தேர்வு நூல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், அகராதிகள், களஞ்சியங்கள் ஆகியவை நூலகத்தில் உள்ளன.
படிக்கும் முறை :
நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாகப் படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும். நூல்களைக் கிழிக்கவோ, சேதப்படுத்துவதோ கூடாது. படித்து முடித்தவுடன் மீண்டும் உரிய அலமாரியில் நூலை வைக்க வேண்டும்.
முடிவுரை :
‘நம் அகம்
நூல் அகம்’
நாளும் நூல் பல கற்று சிறந்த மேதையாக வரவும், நூலகம் துணை செய்கிறது. நூலகம் தேடிச் சென்று, நூல்களைப் படிப்போம்! உயர்வோம்!!
‘நூலகம் அறிஞர்களின் வாழ்வில்லம்’
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகளைக் கட்டத்தில் நிரப்புக. வட்டத்தில் சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக. எழுத்துகளை முறைப்படுத்திக் கல்வி பற்றிய பழமொழியைக் கண்டறிக.
1. திரைப்படப் பாடலாசிரியர் சோமுவின் ஊர்.
2. கேடில் விழுச்செல்வம்
3. குமர குருபரர் எழுதிய நூல்களுள் ஒன்று.
4. 'கலன்' என்னும் சொல்லின் பொருள்.
5. ஏட்டுக்கல்வியுடன் ------- கல்வியும் பயில வேண்டும்.
6. திரு.வி.க. எழுதிய நூல்களுள் ஒன்று.
7. தமிழ்த் ---------- திரு.வி.க.
விடை
வட்டத்தில் சிக்கிய எழுத்துகள்
ஆல்றிஅற்வேற
பழமொழி
அறிவே ஆற்றல்
நிற்க அதற்குத் தக ...
என் பொறுப்புகள்.-
1. நாள்தோறும் ஒரு திருக்குறள் கற்பேன்.
2. அனைவரிடமும் அன்பு கொண்டு வாழ்வேன்.
கலைச்சொல் அறிவோம்.
நிறுத்தக்குறி - Punctuation
அணிசலன் - Ornament
திறமை - Talent
மொழிபெயர்ப்பு - Translation
விழிப்புணர்வு - Awareness
சீர்திருத்தம் - Reform
இணையத்தில் காண்க
திரு. வி.க. எழுதிய நூல்களின் விவரங்களை இணையத்தில் தேடி எழுதுக.
விடை
❖ மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
❖ முருகன் அல்லது அழகு
❖ தமிழ்த்தென்றல்
❖ உரிமை வேட்கை
❖ பெண்ணின்பெருமை
❖ பொதுமை வேட்டல்
❖ தேசபத்தாமிர்தம்
❖ என் கடன் பணி செய்து கிடப்பது
❖ தமிழ்நாட்டுச் செல்வம்
❖ இளமை விருந்து
❖ இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
❖ சைவத்திறவு
❖ நினைப்பவர் மனம்
❖ முதுமை உளறல்
❖ இருளில் ஒளி
❖ யாழ்ப்பாணம் தந்த சிவஞான சீதம் நா. கதிரைவேற்பிள்ளை சரித்திரம்
❖ நாயன்மார் வரலாறு
❖ முடியா? காதலா? சீர்திருத்தமா?
❖ உள்ளொளி
❖ திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்-1
❖ திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்-2
❖ தமிழ்க்கலை
❖ இந்தியாவும் விடுதலையும்
❖ சைவ சமய சாரம்
❖ நாயன்மார் திறம்
❖ சைவத்தின் சமசரசம்
❖ இலங்கைச் செலவு
❖ கிறிஸ்து மொழிக்குறள்
கற்பவை கற்றபின்
பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள வேற்றுமை உருபுகளை எடுத்து எழுதி வகைப்படுத்துக.
விடை
இன்றைய கல்வி குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து தேர்வில் தேதி பட்டம் பெற்று ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது. நாளடைவில் கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பு இல்லாமல் போகிறது.
● பாடங்களை – ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு
● தேர்வில் – இல் – ஏழாம் வேற்றுமை உருபு
● தொழிலில் – இல் – ஏழாம் வேற்றுமை உருபு
● நுழைவதற்கு கு – நான்காம வேற்றுமை உருபு