இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 9th Tamil : Chapter 6 : Kalai pala valarthal
உரைநடை உலகம்
இயல் ஆறு
சிற்பக்கலை
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.
பல்லவர்
காலச்
சிற்பங்களுக்குச்
சிறந்த
சான்று
...............
அ)
மாமல்லபுரம்
ஆ)
பிள்ளையார்
பட்டி
இ)
திரிபுவனவீரேசுவரம்
ஈ)
தாடிக்கொம்பு
விடை : அ) மாமல்லபுரம்
2.
திருநாதர்குன்றில்
ஒரு
பாறையில்
புடைப்புச்
சிற்பங்களாக
உள்ளவை
.........
அ)
விலங்கு
உருவங்கள்
ஆ)
தீர்த்தங்கரர்
உருவங்கள்
இ)
தெய்வ
உருவங்கள்
ஈ)
நாட்டியம்
ஆடும்
பாவை
உருவங்கள்
விடை : ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்
குறுவினா
1.
செப்புத்
திருமேனிகள்
பற்றிக்
குறிப்பு
வரைக.
விடை :
. செப்புத் திருமேனிகள் சோழர் கால சிற்பக்கலை நுட்பத்திற்குச் சிறந்த சான்றாகும்.
. சோழர் காலத்தில்தான் மிகுதியான செப்புத்திருமேனிகள் உருவமைக்கப்பட்டன.
. கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலை நுட்பத்தோடு வடிவமைக்கப் பட்டன.
. சோழர் காலம் “செப்புத் திருமேனிகளின் பொற்காலம்” என்று அழைக்கப்படும் அளவிற்கு அவை அழகுற அமைந்துள்ளன.
2.
நடுகல்
என்றால்
என்ன?
விடை :
. நடுகல் பற்றியக் குறிப்பு தொல்காப்பியத்தில் காணப்படுகிறது.
. போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும்.
. அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப் பெறும். அவரது வீரத்தின் சிறப்பும் கூறப்பெறும்.
. தமிழரின் தொடக்ககாலச் சிற்பக் கலைக்குச் சான்றாக இதனைக் குறிப்பிடுவர்.
3.
இசைத்தூண்கள்
யார்
காலத்தில்
அமைக்கப்பட்டவை?
விடை :
பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்கள் விஜய நகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டன.
சிறுவினா
1.
முழு
உருவச்
சிற்பங்கள்
- புடைப்புச் சிற்பங்கள்
இரண்டிற்கும்
உள்ள
வேறுபாடு
யாது?
விடை :
முழு உருவச் சிற்பம்:
உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்து இருக்கும்.
புடைப்புச் சிற்பம்:
புடைப்புச் சிற்பத்தில் முன்பகுதி மட்டுமே தெரியும் படி அமைந்து இருக்கும்.
2.
நாயக்கர்
காலச்
சிற்பங்களின்
நுட்பங்கள்
யாவை?
விடை :
. நாயக்கர் காலச் சிற்பங்களில் ஆடை ஆபரணங்கள் கலை நயத்துடன் காணப்படும்.
. நாயக்கர் காலச் சிற்பங்களை, கலை நுட்பத்தின் உச்சநிலை படைப்பு என்று கூறலாம்.
. விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிக மிக நுட்பமாகக் கலை நயத்துடன் அவை படைக்கப்பட்டுள்ளன.
நெடுவினா
1.
தமிழ்நாட்டு
சிற்பங்கள்
கலைநயம்
மிக்கனவாகவும்,
வரலாற்றுப்
பதிவுகளாகவும்
இருப்பதை
நிறுவுக.
விடை :
முன்னுரை:
கல்லிலும் , உலோகத்திலும் கருவிகள் செய்த மனிதன், சிற்பம் என்னும் நுண்கலையை வடிக்கத் தொடங்கினான். உணர்வுகளையும், நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் வரலாற்றின் வாயில்களாகவும், கலைநயம் மிக்கனவாகவும் காணப்படுகின்றன.
சிற்பங்களின் கலை நயம்:
“கற்கவிஞர்கள்” என்று சிறப்பிக்கப்படும் சிற்பிகள் வடித்த சிற்பங்கள் ஒவ்வொன்றும் கலைநயம் மிக்கவையாய் மிளிர்கின்றன.
சிற்பங்களை கோவில்களின் கட்டடங்கள், கற்றூண்கள், சுற்றுச்சுவர்கள் நுழைவு வாயில்கள் என அனைத்து இடங்களிலும் கலைநயம் மிளிர செதுக்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள சிற்பம் நடனக்கலையின் முத்திரைகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் பாங்கு கலை நயத்துக்கோர் சான்றாகும். கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலை நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளன. திருவரங்கக் கோவிலினுள் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களில் வெளிப்படும் முக பாவனைகள் சிற்பக்கலை நுட்பத்திற்கு தனி சான்றாய்த் திகழ்கிறது.
கோவில் கோபுரங்களில் சுதைகளாலான சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. அவற்றுள் ஆடை, அணிகலன்கள் அணிந்த நிலையில் உள்ள உருவங்கள் சிற்பங்களாயின. அவையும் சிற்பக் கலைநுட்பம் வாய்ந்தவை. உருவங்கள் விழியோட்டம், புருவ நெளிவு. நக அமைப்பு என மிக மிக நுட்பமாக கலை நயத்துடன் படைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவிலில் உள்ள குறவன், குறத்தி, இரதிதேவி சிலைகள் காண்போரை ஈர்க்கும் கலைநயம் வாய்ந்தவை.
சிற்பங்கள் வரலாற்றுப் பதிவுகள்:
சிற்பக் கலையைப் பற்றிக் கூற முற்படுகின்ற பொழுது,
. பல்லவர் காலச் சிற்பங்கள்
. பாண்டியர் காலச் சிற்பங்கள்
. சோழர் காலச் சிற்பங்கள்
. விஜய நகர மன்னர் காலச் சிற்பங்கள்
. நாயக்கர் காலச் சிற்பங்கள்
என்றே வகைப்படுத்துகிறோம். எனவே சிற்பக்கலை வரலாற்றுப் பதிவாகவும் திகழ்கிறது என்பதை மறுக்க இயலாது.
மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள சிற்பங்கள் மூலம் பல்லவர் கால வரலாற்றை உணரலாம்.
திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம், கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்கள் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குச் சான்றுகளாகும்.
கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம், தஞ்சை பெருவுடையார் கோவில்களில் உள்ள சிற்பங்கள் மூலம், இராசஇராசசோழன், குலோத்துங்க சோழன், இராசேந்திர சோழன், இரண்டாம் இராசராசன் போன்ற மன்னர்களின் வரலாறுகளையும், அவர்கள் கலை வளர்த்தப் பாங்கினையும் அறியலாம்.
விஜயநகர மன்னர்கள் கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் அமைக்கும் பணியைச் செவ்வனே செய்தது, அவற்றில் சுதைகளாலான சிற்பங்களை அமைக்கச் செய்தனர்.
சோழர் காலத்தை செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று சிறப்பிக்கின்றனர்.
நாயக்க மன்னர்களின் காலத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைக்கப்பட்ட வரலாற்றை அறிவிக்கிறது இக்கலை.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தூண்களில் உள்ள சிற்பங்கள் கண்ணப்பர், சந்திரமதி, அரிச்சந்திரன் வரலாற்றை எடுத்துக் கூறுகிறது.
முடிவுரை:
சிற்பங்கள் என்பன தெய்வங்களாகப் போற்றி வணங்குவதற்கும், ஏனைய உருவங்களைக் கண்டு களிப்பதற்கும் மட்டுமல்ல, அவைகலைநயத்தின் சான்றாகவும், வரலாற்றுப் பதிவுகளாகவும், அறிவின் முதிர்ச்சிக்கு ஓர் அடையாளமாகவும் இருப்பதால் சிற்பக்கலையைப் போற்றி பேணுவது நம் கடமையாகும்.
கற்பவை கற்றபின்
1.
உங்கள்
பகுதியில்
உள்ள
பழமையான
சிற்பம்
ஒன்றைப்
பற்றிய
செய்திக்குறிப்பை
உருவாக்குக.
விடை :
திருநெல்வேலியில் இருந்து 12 கி.மீ தொலைவில், திருச்செந்தூர் சாலையில் 16 ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில் அமைந்துள்ளது..
இக்கோயிலின் தனிச்சிறப்பு அங்குள்ள சிற்பங்களே. இரு மண்டபங்களிலும் ஆறு அடிக்கு குறையாமல், 30க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. இந்தச் சிற்பங்கள் அனைத்தும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான தூண்களில் தான் உள்ளன.
இங்குள்ள பீமன், வியாக்ரபாலகன் சிற்பம் பற்றிய ஒரு செய்தி உண்டு.
பீமனும், வியாக்ரபாலகனும் சண்டையிடுகின்றனர். தர்மராஜா நடுநிலை வகிப்பதாகவும், நடுவராக இருந்த தர்மராஜா வியாக்ரபாலகன் வென்றதாகவும் தீர்ப்பளித்தாராம்.
இந்தச் செய்தியைக் குறிக்கும் வகையில், அதிசயச் சிற்பத் தொகுப்பாக அமைந்துள்ளது. பீமனும், வியாக்ரபாலகனும், தர்மராஜாவும் இருக்கும் சிற்பம் உள்ளது.
இச்சிற்பத்தில், பீமன் வீரமும், திமிரும் வெளிப்படுத்தும் முகபாவத்துடனும், வியாக்ரபாலகன் பராக்கிரமத்துடனும், தர்மராஜா அமைதியான முகபாவத்துடனும் இருப்பதாக சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் தலைசிறந்த கலைப்படைப்புகளாகவும், உணர்ச்சி ததும்பும் உயிரோவியங்களாகவும் காட்சியளிக்கின்றன.
இக்கோயிலின், இராஜகோபுரமும் கருங்கல்லிலான திருச்சுற்று மதில்களும், 16-ஆம் நூற்றாண்டின் கட்டிடக்கலைப் பணிக்குச் சான்றாக உள்ளது.
2.
ஓவியர்/சிற்பி/இசைக்
கலைஞர்
ஒருவரைச்
சந்தித்து
அவர்
கூறும்
கலை
நுட்பங்களையும்,
அனுபவங்களையும்
தொகுத்து
வகுப்பறையில்
படித்துக்
காட்டுக.
விடை :
சிற்பியின் கலை நுட்பங்களும், அனுபவங்களும்
எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சிற்பி ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் சிற்பங்களை [செதுக்குதல், வடித்தல், உருவாக்கல்] ஒவ்வொரு பொருளைக் கொண்டு செய்யும் போது மேற்கூறிய மூன்று பெயர்களாலும் அழைக்கப்படுமாம். உருவாக்கும் நுட்பங்களைக் கூறமுடியுமா என்று வினவிய போது, பல வியப்புக்குரிய செய்திகளைக் கூறினார். இதோ அவர் கூறிய கருத்துகள்.
சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலைப்பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருள்களில் இருந்து உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது.
கற்கள், உலோகம் (செம்பு) மரம், மண், தந்தம் போன்ற பொருட்கள் சிற்பங்கள் உருவாக்கப் பயன்படுபவையாம்.
கல், மரம் போன்றவற்றில் சிற்பம் உருவாக்கும் போது, சிற்பமாக உருவாக்க வேண்டியவற்றைச் செதுக்குவார்களாம்.
உலோகம் போன்ற பொருள்களைக் கொண்டு செய்யும் போது உருக்கி வார்ப்பார்களாம்.
ஒட்டுதல்
அச்சுகளில் அழுத்துதல் போன்ற உத்திகளையும் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவோம் என்றார். மண்ணால் செய்யும் போது உருவத்தைச் செய்தபின் சூளையில் சுடுவதாகக் குறிப்பிட்டார்.
சிற்பங்கள் மனித நாகரிகத்தையும், அதன் வளர்ச்சிக் கூறுகளையும் வெளிப்படுத்தும் சான்றுகள் என்று பெருமிதப்பட்டார்.
மேலும், கல், உலோகம், செங்கல், மரம், சுதை (சுண்ணாம்பு) மெழுகு, தந்தம் வண்ணம். கண்ட சருக்கரையும் சிற்பம் வடிக்க ஏற்றவையாம்.
ஒரு உருவத்தின் முன்புறம், பின்புறம் இரண்டையும் காட்டும் சிற்பங்களை முழு வடிவச் சிற்பங்கள் என்றும். ஒரு புறத்தை மட்டும் காட்டும் சிற்பங்களைப் புடைப்புச் சிற்பம் என்றும் கூறுவார்கள் என்று தெளிவுப்படுத்தினார். சிற்பங்கள் சமய வெளிப்பாடாகவும் அரசாட்சி பற்றிய வெளிப்பாடாகவுமே இருந்தன என்றார்.
முன்பெல்லாம் சிற்பங்களை உருவாக்கிய மேதைகள் சிற்பக்கலை மூலம் உருவங்களுக்கு உயிரூட்டினர். இன்றோ பண்டைய மரபு முறைகள் முற்றிலும் மாறுபட்டு வருவதோடு உடலமைப்பை வெளிப்படுத்துவதாக மாறி விட்டதே என்று வருந்தினார்.
நானும் விடை பெற்றுக்கொண்டு வந்தேன்.
கவிதைப் பேழை
இயல் ஆறு
இராவண காவியம்
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.
'பொதுவர்கள்
பொலி
உறப்
போர்
அடித்திடும்’
நிலப்பகுதி
அ)
குறிஞ்சி
ஆ)
நெய்தல்
இ)
முல்லை
ஈ)
கெடுதல்
விடை : இ) முல்லை
குறுவினா
1. இடிகுரல், பெருங்கடல் - இலக்கணக் குறிப்புத் தருக.
விடை :
இடிகுரல் - உவமைத் தொகை
பெருங்கடல் - பண்புத் தொகை
2.
பாலை
நிலத்தில்
பருந்துகள்
பறந்ததன்
காரணம்
என்ன?
விடை :
மராமலர்களை மாலையாக அணிந்த சிறுவர்கள், எருதின் கொம்புகளைப் போல் இருந்த பாலைக்காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு கோலினால் அடித்தனர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்து ஓடின.
“வெடிக்கவிட்டு ஆடிட விரும்பிக் கோலினால்
அடிக்கும் ஓசையின் பருந்து அஞ்சி ஓடுமே"
சிறுவினா
1.
இராவண
காவியத்தில்
இடம்
பெற்றுள்ள
இரண்டு
உவமைகளை
எடுத்துக்
காட்டுக.
விடை :
குன்று போல:
முல்லை நிலத்தவர்கள், முதிரை. சாமை, கேழ்வரகு மணி போன்ற குதிரை வாலி ஆகியவற்றை கதிர் அடித்து களத்தில் குவித்து வைத்திருக்கும் காட்சியானது குன்று போல இருந்தது என்று தானியக் குவியலுக்கு குன்றினை உவமைப்படுத்தியுள்ளார்.
மதியம் தொடரும் மேகம் போல:
கடற்கரை மணலிடை உலவி தன் நீண்ட சிறகினை உலர்த்திய வண்டானது, தாமரை மலரை ஒத்த பெண்களின் முகத்தினை நோக்கி தொடர்ந்து செல்லும். அக்காட்சியானது வானில் முழுநிலவைத் தொடர்ந்து செல்லும் ஒரு மேகத்தின் காட்சி போல் உள்ளது என்று உவமைப்படுத்தியுள்ளார் புலவர் குழந்தை.
2.
குறிஞ்சி
மணப்பதற்கான
நிகழ்வுகளைக்
குறிப்பிடுக.
விடை :
தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகளின் மணமும், அகில் போன்ற வாசனைப் பொருட்களின் நறுமணமும் , உலையில் இட்ட மலை நெல் அரிசி சோற்றின் மணமும், குறிஞ்சி நிலம் முழுவதும் பரவிக் கிடந்த காந்தள் மலரின் மணமும், எங்கும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் குறிஞ்சி நிலப்பகுதி முழுவதும் மணந்தது.
நெடுவினா
1.
இராவண
காவியத்தில்
உங்களை
ஈர்த்த
இயற்கை
எழில்
காட்சிகளை
விவரிக்க.
விடை :
முன்னுரை:
பூத்துக்குலுங்கும் பூஞ்சோலை, அடர்ந்து வளர்ந்த பசுமையான மரங்கள் நீர் நிறைந்த நதி, குளக்கரைகள், மயில்கள், குயில்கள், கிளிகள் எனப் பறந்து திரியும் பறவைகள் இத்தகு அழகு சூழலை இராவண காவியத்தில் ஐவகை நிலங்கள் பற்றிக் குறிப்பிடும் பாடல்களில் புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்.
பொன் மயில் ஆடும்:
அருவிகள் பறையைப் போல் ஆரவாரமாய் ஒலித்து விழும். பைங்கிளிகள் தாம் அறிந்த இசையினைப் பாடும். பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான அகன்ற சிறகினை விரித்து ஆடும். பூக்கள் நிறைந்த மரக்கிளையில் அமர்ந்திருக்கும் குரங்கினமோ இவற்றையெல்லாம் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும்
"............. பொன் மயில்
அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை
மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்"
குயிலும், வண்டும் இசைக்கும்:
அழகிய நாகணவாய்ப் பறவைகளும், குயில்களும் அழகுமிக்க சிறகினையுடைய வண்டு இனங்களும், பாவிசைத்துப் பாடின. புகழ்பெற்ற முல்லை நில ஆயர்கள் கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன முக்குழலை இசைத்து, மேயும் பசுக்கூட்டங்களை அருகருகே ஒன்றிணைக்கும் காட்சியும் இன்பம் தருவன.
“தே இசை பெறும்கடறு இடையர் முக்குழல்
ஆவினம் ஒருங்குற அருகு அணைக்குமால்"
பூத்துக்குலுங்கும் காஞ்சி, வஞ்சி:
மலையிடைத் தோன்றும் ஆறும், கரையை மோதித் ததும்பி நிற்கும் குளமும் மனதைக் கொள்ளை கொள்ளும். முல்லை நிலத்தின் காட்டாற்று வெள்ளம் மருத நிலத்தில் பாய்ந்தோடும். நெற் பயிரினைக் காக்கும் பொருட்டு கரும்பு வளர்ந்து நிற்கும். பெருகி வரும் கால்வாய் வழி ஓடி வயலில் தேங்கி வளம் சேர்க்கும். இத்தகு வளம் நிறைந்த நிலத்திலே காஞ்சி மலர்களும் வஞ்சி மலர்களும் பூத்துக் குலுங்கி மனதைப் பரவசப்படுத்தும்.
“மல்லல்அம் செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும்”
இளைப்பாற்றும் தாய் :
வெப்பத்தைத் தாங்க இயலாத தன் குட்டியின் களைப்பை இளைப்பாற்ற எண்ணிய தாய், எங்கும் நிழல் இன்றி தன் நிழலையே அதற்குத் தந்து குட்டியை இளைப்பாற்றும் தாயின் அன்பையும் இயற்கை மூலம் அறியலாம்.
“தன்னிழல் தங்கவே தாய்மை மீதுர ”
முடிவுரை:
மேற்கூறிய தன்மையில், இராவண காவியம் என்னும் இலக்கியமானது, எழிலோவியங்களை, தன் சொல் ஓவியங்களால் தீட்டி வைத்திருக்கிறது. இவற்றைக் கற்க கற்க இன்பமேயன்றி வேறில்ைைல யன்றோ!
கற்பவை கற்றபின்
1.
ஐவகை
நிலங்களில்
உங்கள்
மாவட்டம்/ஊர்
அமைந்த
நிலவகை
பற்றியும்
அதன்
கவின்மிகு
காட்சியையும்
படக்
கட்டுரையாக்குக.
விடை :
என்னுடைய மாவட்டம் கன்னியாகுமரி . ஐவகை நிலங்களில் கடலும் கடல் சார்ந்த நிலமாக இருப்பது என் மாவட்டத்தின் பெருமை.
கன்னியாகுமரியின் கவின்மிகு காட்சிகள்
தமிழகத்திற்குத் தென் எல்லையாகத் திகழும் எம் மாவட்டம் இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றது. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம்.
அரபிக்கடல், வங்காளவிரிகுடா. இந்தியப் பெருங்கடல்
ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் இடம் இது.
இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத் திருவிழாவாகவும், வானத்தில் பல வர்ணஜாலம் வாரியிறைக்கும் நிகழ்வுகளாகவும் அமைகின்றன. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.
தமிழினம் செழிக்க இரண்டடி தந்த வள்ளுவரைப்
பெருமைப்படுத்தும் மாவட்டம்.
‘எழுமின் விழுமின்” என்று இளைய மனங்களில்
எழுச்சித்தீபம் ஏற்றிய விவேகானந்தரைப் பெருமைப்படுத்தியுள்ளதும் எம் மாவட்டமே.
காமராசர் நினைவாலயம், காந்தி மண்டபமும் இங்கு உண்டு.
கடலில் நீராடும் துறை அருகே ஓர் அழகிய சித்திரம் போல் அமையப் பெற்றிருக்கும் குமரியம்மன் கோயில். பழமை வாய்ந்த தேவாலயங்களும் இங்கு இறையாசி வழங்கிக் கொண்டு இருக்கின்றன.
இங்கு புலியை முறத்தால் கொன்ற வீரப் பெண்ணுக்கும், முல்லைக்குத் தேர் தந்த பாரி மன்னனுக்கும் வைக்கப்பட்டுள்ள சிலைகள் கண்ணைக் கவரும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.
திற்பரப்பில் இருந்து, திருவட்டார் வந்த பின் மாத்தூர் என்ற சிற்றூருக்குச் செல்லும் சாலையில் தொட்டிப் பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல் அமைந்துள்ள இப்பாலத்தில் விவசாயத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
செல்லும் வழியெங்கும் பசி தீர்க்க பழவகைகள் பலவும் கிடைக்கும். கன்னியாகுமரியை இப்படிச் சொல்லி, சொல்லி வர்ணனை செய்து கொண்டே போகலாம்.
எம் மாவட்டத்திற்கு நீங்களும் ஒருமுறை வாருங்கள். இயற்கை இன்பத்தை அனுபவியுங்கள்.
2.
இப்பாடப்
பகுதியில்
உங்களை
ஈர்த்த
கவிதைக்
காட்சியினை
ஓவியமாகத்
தீட்டுக.
விடை :
கல்லிடைப் பிறந்த ஆறும்
கரைபொரு குளனும் தோயும்
முல்லை அம் புறவில் தோன்று
முருகுகான் யாறு பாயும்
நெல்லினைக் கரும்பு காக்கும்
நீரினைக் கால்வாய் தேக்கும்
மல்லல் அம் செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும்
3.
வைக்கோற்
போர்,
நெற்கதிர்,
போரடிக்கும்
களம்
போன்ற
உழவுத்
தொழிலோடு
தொடர்புடையவற்றின்
விளக்கங்களைத்
தொகுத்து
வகுப்பில்
கலந்துரையாடுக.
விடை :
மாணவர்களே! இராவண காவியத்தில் ஐவகை நில வளங்களைப் பற்றிக் கற்கும் போது,
வைக்கோற் போர், நெற்கதிர் போரடிக்கும் களம் போன்ற வார்த்தைகளைக் கற்றீர்கள் அல்லவா! அதன் விளக்கங்கள் தெரிந்து கொள்ள ஒரு கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள்: ஆசிரியர், புகழேந்தி, சுதா.
ஐயா :
நெற்குதிர் பற்றிச் சொல்லுங்கள் ஐயா!
ஆசிரியர் : கூறுகிறேன் புகழேந்தி.
நெல் முதலிய தானியங்களைச் சேகரிக்கும் கூடு. பெரிய அளவில் இருக்கும் குதிரில் தானியத்தைச் சேமிப்பர். சிறிய அளவில் உள்ளவை விதை தானியங்களைச் சேகரித்து வைக்கவும் உதவும்.
புகழேந்தி :
ஐயா! குதிர் பற்றி என் தாத்தா ஏதோ பழமொழி சொல்வாரே ..
ஆசிரியர் :
ஆமாடா .........."எங்கப்பன் குதிருக்குள் இல்லை ”. “ஐயா!” கதிர் போல அம்மா குதிர் போல ” போன்ற பழமொழிகள் உள்ளன.
சுதா :
ஐயா போர் அடித்தல் என்றால் என்ன ஐயா!
ஆசிரியர் :
அறுவடை செய்த நெல்லையும், வைக்கோலையும் பிரிக்கும் செயல். அகன்ற களத்திற்கு கொண்டு வந்து அடிப்பர். முதலில் அடிப்பதை தலையடி என்பர். பின் வைக்கோலைப் பரப்பி, மாட்டைச் சுற்றி வரச் செய்தும் நெல்லையும், வைக்கோலையும் தனித்தனியே பிரித்தெடுத்தலே போரடித்தல் ஆகும்.
சுதா : ஐயா வைக்கோற்போர் பற்றிச் சொல்லுங்களேன்.
ஆசிரியர் :
நெல்லைப் பிரித்து எடுத்த பின் அதன் தாளை உலர்த்தி சேகரிப்பது வைக்கோல்.அது கால்நடைகளுக்குக் குறிப்பாக மாடுகளுக்கு உணவாகும். வைக்கோலை ஈரம்படாமல் உலரவைத்து. அதனை அழகாக அடுக்கி குவித்து, காற்றில் பறக்காமல் இருக்க, வைக்கோலாலே பின்னப்பட்ட வைக்கோல் பிறியைக் கொண்டு சுற்றி வைத்துப் பாதுகாப்பதே வைக்கோற் போர் ஆகும்.
புகழேந்தி
சுதா :
நன்றி ஐயா எங்கள் தலைமுறைக்குத் தெரியாத செய்திகள் இவை. விளக்கமாக புரிய வைத்து விட்டீர்கள் ஐயா!
கவிதைப் பேழை
இயல் ஆறு
நாச்சியார் திருமொழி
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.
'அதிரப்
புகுதக்
கனாக்
கண்டேன்'
- யார் கனவில்
யார்
அதிரப்
புகுந்தார்.
அ)
கண்ணனின்
கனவில்
ஆண்டாள்
புகுந்தாள்
ஆ)
தோழியின்
கனவில்
ஆண்டாள்
புகுந்தாள்
இ)
ஆண்டாளின்
கனவில்
தோழி
புகுந்தாள்
ஈ)
ஆண்டாளின்
கனவில்
கண்ணன்
புகுந்தான்
விடை : ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
குறுவினா
1.
கண்ணன்
புகுந்த
பந்தல்
எவ்வாறு
இருந்தது?
விடை :
. கண்ணன் புகுந்த பந்தலானது முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டதாக இருந்தது.
. மத்தளம் முழங்கியதாகவும், வரிகளை உடைய சங்குகளை ஊதுபவர்கள் நின்று கொண்டிருந்தனர் என்று, கண்ணன் புகுந்த பந்தல் இருந்த நிலையை ஆண்டாள் கூறுகிறாள்.
“மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற்"
சிறுவினா
1.
ஆண்டாளின்
கனவுக்
காட்சிகளை
எழுதுக.
விடை :
. சதிராடும் இளம்பெண்கள், தம் கைகளில் கதிரவன் போன்ற ஒளியையுடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர் கொண்டு அழைக்கிறார்கள்.
. மதுராபுரியை ஆளும் மன்னனாம் கண்ணன், பாதங்களில் பாதுகை அணிந்து கொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.
. மத்தளம் முழங்க, வரி சங்கம் ஊத, முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான் என்று ஆண்டாள் கனவு கண்டதாகக் கூறுகிறாள்.
கற்பவை கற்றபின்
1.
திருப்பாவையில்
இடம்
பெற்றுள்ள
தொடை
நயம்
மிக்க
பாடல்களுள்
எவையேனும்,
இரண்டினை
இணையத்திலோ
நூலகத்திலோ
திரட்டி
வகுப்பறையில்
பாடுக.
விடை :
திருப்பாவைப்பாடல் (24)
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய்ப் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
பாடல் - 15 (திருப்பாவை)
எல்லே இளங்கிளியே இன்னம் உறக்குதியோ
சில்லென்று அழையேன் மின் நங்கை மீர்போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
2.
கண்ணனைப்
பல்வேறு
உறவு
நிலைகளில்
வைத்துப்
பாடிய
பாரதியார்
பாடல்களும்
உங்களைக்
கவர்ந்த
பாடல்களைக்
குறித்துக்
கலந்துரையாடுக.
விடை :
மாணவர்களே, ஆண்டாள் கண்ணனைத் தன் நாயகனாக எண்ணியது போல். பாரதியாரும் கண்ணனை தோழனாக (கண்ணன் என் தோழன்) தாயாக (கண்ணன் என் தாய்) தந்தையாக (கண்ணன் என் தந்தை ) சேவகனாக (கண்ணன் என் சேவகன்), விளையாட்டுப் பிள்ளை (கண்ணன்-என் விளையாட்டுப் பிள்ளை), காதலனாக (கண்ணன் என் காதலன்) என்று பல நிலைகளில் வைத்துப் பாடியுள்ளார்.
சான்று :
விளையாட்டுப்பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை தீராத ........
புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்பும் நற் கீதம் படிப்பான்
கள்ளால் மயங்குவது போல - அதைக்
கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்போமே .......
இப்பாடலில் குழலிசைத்து அனைவரையும் மயக்கும் குழந்தையாக எண்ணிப்பாடியுள்ளார் அல்லவா .......
மாணவர் :
ஐயா ....... தோழனாக என்று சொன்னீர்கள் அதற்கு ஒரு சான்று சொல்லுங்கள் ஐயா!
"பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென்றால்" ஒரு
பேச்சினிலே சொல்லுவான்
உழைக்கும் வழிவினை ஆளும் வழி - பயன்
உண்ணும் வழியுரைப் பான்
அழைக்கும் பொழுதினில் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக்குள் வருவான்
மழைக்குக் குடை பசி நேரத்துணவு என்றன்
வாழ்வினுக் கெங்கள் கண்ணன்.
தோழனாக கண்ணன் வாழ வழி சொல்வானாம். கூப்பிடும் போது அரை நொடிக்குள் வருவானாம். மழைக்குக் குடையாவான் ; பசிக்கு உணவாவான்; என்றன் வாழ்வே என் கண்ண ன் என்கிறார்.
மாணவர்களே இதன் மூலம் பாரதி கண்ணனைத் தோழனாய்க் கொண்டார் என்பதையும், நண்பன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார்.
நல்ல நண்பன் வாழ வழிகாட்டவேண்டும், துன்பம் வரும் போது நம்மைத் தாங்குகிறவனாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.
மாணவர்கள் : நன்றி ஐயா!
3. சங்க காலத்திலிருந்து தற்காலம் வரையுள்ள பெண்புலவர்களின் சில கவிதைகளைக் கொண்டு ஒரு கவிதைத் தொகுப்பு உருவாக்குக.
விடை :
ஔவையார் பாடல்
முட்டு வேன்கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்ற மேலிட்டு
ஆஅஓல் எனக் கூவுவேன் கொல்
அலமரல் அசைவலி அலைப்ப என்
உயவு நோய் அறியது துஞ்சும் ஊர்க்கே (குறுந்தொகை - 28)
ஒக்கூர் மாசாத்தியார்
கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதின் - மகளிர் ஆதல் தகுமே
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந் தன்னே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழு நன்
பெரு நிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீகிப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே (புறநானூறு)
சல்மாவின் கவிதை
தன் வழி தவறி
அறைக்குள் சிக்கிய
பட்டாம் பூச்சி துவக்கிற்று
தன் தேடலை ...........
என்றேனும் .............
கதவு திறந்து வழி
கிடைக்குமெனில் அது
பறந்து தான் போகும்
வர்ணங்கள் இல்லையென்றாலும்……
உமா மகேஸ்வரி
வெளிவாசல் வழியே
சலித்த மதியம்
சாக்கடை நீரருந்தும் குருவி
உதிர்கிற மென்மையும்
உடைபடாக் கடினமுமாய்
விசித்திரமாய் உடைந்த
மௌனம்……
விரிவானம்
இயல் ஆறு
செய்தி
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
1.
இசைக்கு
நாடு,
மொழி,
இனம்
தேவையில்லை
என்பதைச்
“செய்தி”
கதையின்
மூலமாக
விளக்குக.
விடை :
முன்னுரை:
இசை மொழியைக் கடந்தது. அமைதியின் நாக்காகப் பேசுவது, மனங்களைக் கரைத்து அந்தரவெளியில் உலவச் செய்வது. இசையின் செவ்வியைத் தலைப்படும் மனமானது, இனம், நாடு என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி அகிலத்தையும் ஆளும் இயல்புடையது.
இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் செய்தி என்னும் கதை உணர்த்துகிறது.
வித்வானின் வருகையும், அறிமுகமும்:
நாதசுர வித்வான் மாட்டு வண்டியிலிருந்து இருந்து தன் மகன் தங்கவேலுவும், ஒத்துக்காரரும் வாத்தியங்களைத் தூக்கிக் கொண்டு பின்னாக வர, வக்கீல் வீட்டிற்குள் நுழைந்தார் நாதசுர வித்வான்.
வக்கீல் வீட்டில் “பிலிப் போல்ஸ்கா ” என்பவர் தலைமையில் மேற்கத்திய சங்கீதகுழுவினர் அமர்ந்திருந்தனர். வக்கீல் வித்வானிடம் இவர் தான் பிலிப்போல்ஸ்கா. இக்குழுவின் தலைவர் என்று அறிமுகப்படுத்தி, பின் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
கீர்த்தனம் தொடங்கினார்:
வித்வான் கம்பீரமாக ஓர் ஆலாபனம் செய்து கீர்த்தனம் தொடங்கினார். டையும், கால் சட்டையுமாக சப்பணம் கட்டி அமர்ந்திருந்த கூட்டம் அசையாது பார்த்துக் கொண்டிருந்தது.
போல்ஸ்காவின் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. அமிர்த தாரையாகப் பெருக்கெடுத்த நாதப்பொழிவில் அவன் தன்னை இழந்தான். நாதம் அவனுடைய ஆன்மாவைக் காணாத லோகத்துக்கும், அனுபவத்துக்கும் இட்டுச் சென்றது.
இந்த அனுபவத்தினை அடைவதற்குப் போல்ஸ்காவுக்கு நாடோ, மொழியோ, இனமோ தடையாய் இல்லை.
சாமாராகம் :
தஸரிமா....... மா” என்று ஆரம்பித்த ராகம் கொஞ்சம் - கொஞ்சமாய் மலர்ந்து, அமைதியான மணம் வீசும் பவழமல்லி போல் உள்ளத்தில் தோய்ந்தது வக்கீலுக்கு ...... மொழி தெரியாத போல்ஸ்காவைத் திரும்பிப் பார்த்தார் வக்கீல்........
அவன் உடல்ராகத்தோடு இசைந்து அசைந்துகொண்டிருந்தது. திடீரென்று உட்கார்ந்திருந்தவன் எழுந்து விட்டான். மெல்லிய காற்றில் அசையும் சம்பங்கி மரம் மாதிரி ஆடினான். மேடைக்கருகில் வந்து முழந்தாளிட்டு உட்கார்ந்து கையை மேடையோரத்தில் வைத்து முகத்தைப் புதைத்து தவத்தில் ஆழ்ந்தவன் போல் ஆனான்.
சாமா ராகத்தை ........ அனுபவிக்க அவனுக்கு மொழியோ, இனமோ இடையூறு செய்யவில்லை.
சாந்தமுலேகா.......
சாந்தமுலேகா ...... குழந்தையைக் கொஞ்சுவது போல், அந்த அடி கொஞ்சியது. போல்ஸ்காவின் மெய் சிலிர்த்தது. அவனது தலையும், உள்ளமும் ஆன்மாவும் அசைந்து ஊசலிட்டுக் கொண்டிருந்தன
அந்த இசை எனக்காக அனுப்பிய செய்தி ....... உலகத்துக்கே ஒரு செய்தி ....... உங்கள் சங்கீதத்தின் செய்தி உணர்வை வெளிப்படுத்த, நினைத்ததைச் சொல்லத் தெரியாமல் போல்ஸ்கா தடுமாறினான் .........
என்ன என்றார் வித்வான் .........
வக்கீல் மொழி பெயர்த்தல்:
தன் உணர்வை போல்ஸ்கா கூற ஆரம்பித்தான். இரைச்சல், கூச்சல், அடிதடி, புயல், அலை, இடி என ..... ஒரே இரைச்சல்...... அத்தகு போர்க்களத்தினுள் நான் மட்டும் அமைதியைக் காண்பது போல் உணர்கிறேன்; காண்கிறேன். இனி இரைச்சலும், சத்தமும், யுத்தமும் என்னைத் தொடாது ..... இந்த அமைதி எனக்குப் போதும் என்று அவன் உணர்ந்து கூறிய செய்தியை மொழி பெயர்த்தார் வக்கீல்.
வித்வானின் திகைப்பு:
அமைதியா ........ அப்படியா தோணித்து அவருக்கு ...... நான் வார்த்தையைக் கூடச் சொல்லவில்லையே .........
மிஸ்டர் போல்ஸ்கா நீங்கள் உணர்ந்தது போல், புயல், இடி என்று சொல்லாவிட்டாலும், இப்பாடல் அமைதி அமைதி என்று அமைதியையே கடைசி இலட்சியமாக இறைஞ்சுகிறது ......... என்று திகைத்துக் கூறினார்.
போல்ஸ்கோ ...... பாராட்டல்:
இசையை வாசித்த இந்தக் கையைக் கொடுங்கள். கடவுள் நர்த்தனமாடுகிற இந்த விரல்களைக் கொடுங்கள். நான் கடவுளை முகர்ந்து முத்தமிடுகிறேன் என்று வித்வானின் விரலைப் பிடித்து உதட்டில் வைத்துக் கொண்டார் போல்ஸ்கா .........
முடிவுரை:
நாடு, மொழி, இனம் கடந்து வார்த்தைகள் அறிய மொழி தெரியவில்லையெனினும் இசை உணர்த்தும் மெய்ப்பொருளை, அமைதியைப் போல்ஸ்கா உணர்ந்து விட்டான். இசை சொற்களைப் புறக்கணித்துத் தனக்குள் இருக்கும் செய்தியை எந்த மொழி பேசும் மனித மனங்களுக்குள்ளும் செலுத்தி விடும்.
இசையை உணர, அனுபவிக்க அதன் மெய்ப்பொருள் அறிய நாடு, மொழி, இனம் தேவையில்லை.
கற்பவை கற்றபின்
1.
உலகில்
அமைதியை
நிலவச்
செய்வதில்
இசைக்கு
நிகர்
வேறெதுவும்
இல்லை
- இத்தொடர் குறித்துச்
சொற்போர்
நிகழ்த்துக.
விடை :
சொற்போர்
“நாளெல்லாம் நன்றொலிக்கும். பாட்டினிலே, நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்” என்றார் பாட்டுக்கொரு புலவன் பாரதி.
"இசையால் வசமாகா இதயம் எது" என்றார் மற்றொரு கவிஞர். இசை வாடிய பயிரை வளரச் செய்யும்; மழையைப் பொழியச்செய்யும்; எல்லா வல்ல இறைவனையும் தன் வசப்படுத்திக் கொள்ளும் பேராற்றல் வாய்ந்த இசை, உலகில் அமைதியையும் ஏற்படுத்தும் எனில் மிகையாகாது.
"அழகான இசை அது மனித குலத்தின்
உண்மையான நம்பிக்கை”. அன்பையும், அமைதியையும், மன உருக்கத்தையும் இசையால் ஏற்படுத்த முடியும்
உலக அமைதிக்காக ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இசை விழா நடத்தப்படுகிறது. ஆம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இவ்விழா நடைபெற்று வருகிறது.
நம் நாட்டிலும் சிதம்பரம் போன்ற கோவில்களில் உலக அமைதிக்காக, பல மணி நேரங்கள் தொடர் இசை (சான்றாக 12 மணி நேரம், 28 மணி நேரம்) நடத்தப்படுகிறது. அவ்விழாவில் பல மொழி பேசுபவர்கள், பல நாட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். அங்கு , இசை மட்டுமே ஆளுகை செய்கிறது. நாடோ, மொழியோ, பணமோ, பதவியோ, உயர்வோ, தாழ்வோ அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
இசை என்றால் “ஒழுங்கு” என்றும் “இசையவைப்பது” என்றும் பொருள் உண்டு. இயற்கையைத் தன் வசப்படுத்தி, இறைவனையே தன் வசப்படுத்தி, இறைவனையே ஆட்கொள்ளும் இசை மனித மனங்களில் உள்ள வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் இசைந்து போகச்செய்யும் ஆற்றல் உடையது. எனவே உலகில் அமைதியை நிலவச் செய்வதில் இசைக்கு நிகர் வேறொன்றும் இல்லை.
2.
பாடப்பகுதியில்
இடம்பெற்றுள்ள
உங்களுக்குப்
பிடித்த
செய்யுள்
பகுதிகளை
வகுப்பில்
இசையுடன்
பாடி
மகிழ்க.
விடை :
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.
கற்கண்டு
இயல் ஆறு
புணர்ச்சி
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.
மரவேர்
என்பது
........... புணர்ச்சி
அ)
இயல்பு
ஆ)
திரிதல்
இ)
தோன்றல்
ஈ)
கெடுதல்
விடை : ஈ) கெடுதல்
சிறுவினா
1.
கைபிடி,
கைப்பிடி
- சொற்களின் பொருள்
வேறுபாடுகளையும்
அவற்றின்
புணர்ச்சி
வகைகளையும்
எழுதுக.
விடை :
“கை பிடி”- கையைப் பிடித்துக் கொள் என்று பொருள்.
“கைப்பிடி”- கைப்பிடி அளவைக் குறிப்பது. (ஒரு கைப்பிடி பருப்பு கொடு)
கை + பிடி கைபிடி - இயல்புப் புணர்ச்சி ஆகும்.
கை + பிடி - கைப்பிடி (தோன்றல்) - விகாரப்புணர்ச்சி ஆகும்.
கற்பவை கற்றபின்
1.
எழுத்து
வகை
அறிந்து
பொருத்துக.
1.
இயல்
- அ)
உயிர்
முதல்
உயிரீறு
2.
புதிது
- ஆ)
உயிர்
முதல்
மெய்யீறு
3.
ஆணி
- இ)
மெய்ம்முதல்
மெய்யீறு
4.
வரம்
- ஈ)
மெய்ம்
முதல்
உயிரீறு
விடை : 1) ஆ, 2) ஈ, 3) அ, 4) இ
2.
புணர்ச்சிகளை
“முதல்,
ஈற்றுச்”
சொல்
வகையால்
பொருத்துக.
1.
செல்வி
+ ஆடினாள்
- அ)
மெய்யீறு
+ மெய்ம்
முதல்
2.
பாலை
+ திணை
- ஆ)
மெய்யீறு
+ உயிர்
முதல்
3.
கோல்
+ ஆட்டம்
- இ)
உயீரிறு
+ உயிர்
முதல்
4.
மண்
+ சரிந்தது
- ஈ)
உயிரீறு
+ மெய்ம்
முதல்
விடை: 1) இ, 2) ஈ, 3) ஆ, 4) அ
3.
சேர்த்து
எழுதுக:
அ) தமிழ் + பேசு - தமிழ் பேசு
ஆ) தமிழ் + பேச்சு - தமிழ்ப்பேச்சு
இ) கை + கள் - கைகள்
ஈ) பூ + கள் – பூக்கள்
4.
பொருத்தமான
உடம்படு
மெய்யுடன்
இணைக்க.
விடை :
அ) பூ + இனம் – பூவினம் (வகர உடம்படு மெய்)
ஆ) இசை + இனிக்கிறது - இசையினிக்கிறது (யகர உடம்படுமெய்)
இ) திரு + அருட்பா - திருவருட்பா (வகர உடம்படு மெய்)
ஈ) சே + அடி - சேவடி(வகர உடம்படுமெய்)
சிந்தனை
கிளர்
வினாக்கள்
:
அ)
குற்றியலுகரம்,
முற்றியலுகரம்
இவற்றின்
வேறுபாட்டை
எழுதுக.
.
விடை :
. குற்றியலுகரத்தில் வரும் “உ” கரமானது தனக்குரிய ஒரு மாத்திரையில் இருந்து அரை மாத்திரையாக குறுகி ஒலிக்கும்.
. முற்றியலுகரத்தில் வரும் “உ” கரமானது தன் ஒரு மாத்திரை அளவில் குறையாது ஒலிக்கும்.
ஆ)
புணர்ச்சி
இலக்கணம்
கற்பது
உரைநடை
எழுதுவதற்கு
உதவும்
- இக்கூற்றை ஆய்க.
விடை :
ஒரு சொல்லைப் பிரித்தால் வரும் நிலைமொழி + வருமொழி - எவ்வாறு புணரும் என்பதை அறியும் பொழுதுதான் உரைநடை எழுதும் போது ஏற்படும் ஒலி நிலை மாற்றங்களை உணர்ந்து எழுத இயலும். வல்லினம், மிகும் மற்றும் மிகாவிடங்கள், சொற்சேர்க்கை ஆகியன உரைநடைக்கு இன்றியமையாதாகும். அவற்றைத் தெறிவாகத் தருவது புணர்ச்சி இலக்கணம் எனவே புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுத உதவும்.
இ)
கீழ்க்காணும்
பத்தியில்
உள்ள
சொற்களைச்
சேர்த்து
எழுதுக.
தமிழின்
தொன்மை
+ ஆன'
இலக்கண
நூல்
+ ஆகிய'
'தொல்காப்பியம்
+ இல்'
‘சிற்பம்
+ கலை'
பற்றிய
குறிப்புக்
காணப்படுகிறது.
போரில்
விழுப்புண்
பட்டு
இறந்த
வீரருக்கு
நடுகல்
நடப்படும்.
'அ
+ கல்லில்
அவ்வீரரின்
உருவம்
பொறிக்கப்பெறும்.
'தமிழக
+ சிற்பம்
+ கலை'
யின்
தோற்றத்திற்கான
சான்றாக
'இதனை
+ கொள்ளலாம்'.
சிலப்பதிகாரத்தில்
'கண்ணகிக்கு
+ சிலை'
வடித்த
செய்தி
இடம்
பெற்றுள்ளது.
மாளிகைகளில்
பல
சுதை
+ சிற்பங்கள்'
இருந்ததை
மணிமேகலை
மூலம்
அறிய
+ முடிகிறது'.
விடை :
1. தொன்மை +ஆன = தொன்மையான
2. நூல் + ஆகிய = நூலாகிய
3. தொல்காப்பியம் + இல் = தொல்காப்பியத்தில்
4. சிற்பம் + கலை = சிற்பக்கலை
5. அ +
கல்லில் = அக்கல்லில்
6. தமிழக + சிற்பம் + கலை = தமிழகச் சிற்பக்கலை
7. இதனை + கொள்ளலாம் = இதனைக் கொள்ளலாம்
8. கண்ணகிக்கு + சிலை = கண்ணகிக்குச் சிலை
9. சுதை + சிற்பங்கள் = சுதை சிற்பங்கள்
10. அறிய + முடிகிறது = அறிய முடிகிறது
ஈ)
படக்காட்சியிலிருந்து
இரு
சொல்
தொடர்களை
அமைத்து,
அவற்றின்
புணர்ச்சி
வகையினைக்
கண்டறிக.
(எ.கா)
மரக்கிளை
= மரம்
+ கிளை
மரக்கிளை
- திரிதல்
விகாரப்புணர்ச்சி,
மூன்று பெண்கள் = மூன்று + பெண்கள்
மூன்றுபெண்கள் - இயல்புப் புணர்ச்சி
விடை :
அ) நிறைகுடம் = நிறை + குடம்
நிறைகுடம் - இயல்புப் புணர்ச்சி
ஆ) உழவுத் தொழில் = உழவு + தொழில்
உழவுத் தொழில் - தோன்றல் விகாரப் புணர்ச்சி