Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 9th Tamil : Chapter 8 : Enthalai kadane

   Posted On :  30.08.2023 06:32 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே

கேள்விகள் மற்றும் பதில்கள்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே : கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

உரைநடை உலகம்

இயல் எட்டு

பெரியாரின் சிந்தனைகள்


பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

 

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

கூற்று : பெரியார் உயிர் எழுத்துகளில்என்பதனை 'அய்' எனவும், '' என்பதனை 'அவ்' எனவும் சீரமைத்தார்.

காரணம் : சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.

) கூற்று சரி , காரணம் தவறு 

) கூற்று, காரணம் இரண்டும் சரி

) கூற்று, காரணம் இரண்டும் தவறு 

) கூற்று தவறு, காரணம் சரி

விடை: ) கூற்று, காரணம் இரண்டும் சரி

 

குறுவினா

1. “பகுத்தறிவுஎன்றால் என்ன?

விடை :

எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும்.

 

சிறுவினா

1. சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துக்களை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.

விடை :

 . பெரியார் அவர்கள், பொருளாதார தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயம் என்றார்.

. ஆனால் இன்றைய நடைமுறையில் பொருளாதாரத்தில் நிறைவு பெறவில்லை என்றாலும் சிறுகடன் பெற்றாவது அநேகர் ஆடம்பரமாகவே வாழ விரும்புகின்றனர்.

. விழாக்களும் சடங்குகளும் மூடப்பழக்கம் வளர்ப்பதோடு வீண் செலவும் ஏற்படுத்துகிறது. சடங்குகள், விழாக்களைத் தவிர்த்து சிக்கனமாய் வாழச் சொன்னார்.

. ஆனால் இன்று இதுவும் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது.

. எனவே பெரியார் கூறிய சிக்கனக் கொள்கைகளை, இன்றைய நடைமுறை நிகழ்வுகளில் பின்பற்ற முடியாத நிலையே அநேக நேரங்களில் உள்ளது.

 

நெடுவினா

1. மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக.

விடை :

முன்னுரை:

தமிழக மக்களைப் பகுத்தறிவு பாதைக்கு அழைத்துச் சென்றவர் பெரியார். இந்தியாவின் பழமையான மொழி தமிழ். பழமையான இலக்கியமும் தமிழிலே உள்ளன. இலக்கியத்திலும், மொழியிலும் பெரியார் செய்த சீரமைப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.

மொழி, இலக்கியம் பற்றிய பெரியாரின் கருத்து:

மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும், மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற கருத்துடையவராய் இருந்தார் தந்தை பெரியார்.

இலக்கிய சீர்திருத்தம்:

அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் படைக்கப்பட வேண்டும். மதம் கடவுள் ஆகியவற்றின் தொடர்பற்ற, யாவருக்கும் பொதுவான இயற்கை அறிவைத் தரும் இலக்கியமே அதிகளவில் வேண்டும். திருக்குறளில் அறிவியல் கருத்துக்களும், தத்துவக் கருத்துக்களும் அனைவருக்கும் பொதுவான வகையில் இடம் பெற்றிருப்பதால், அதை மதிப்புமிக்க நூலாகக் கருதியதோடு, திருக்குறளைப் போன்ற இலக்கியம் உருவாக வேண்டும் என்ற சீர்திருத்தத்தை உருவாக்க முனைந்தார்.

இலக்கியமானது அரசியல், சமூகம், பொருளாதாரம், சுயமரியாதை உள்ளிட்ட அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என விரும்பினார்.

மொழியில் சீர்திருத்தம்:

ஒரு மொழியின் பெருமையும், மேன்மையும், அவை எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியனவாக இருப்பதைப் பொறுத்தே அமைகின்றன. எனவே கால வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் எழுத்துக்களைச் சீரமைக்க தயங்கக் கூடாது என்று கருதினார் பெரியார்.

மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும் என்றார். அதற்கேற்ப, உயிர் எழுத்துக்களில் '' என்பதை 'அய்' எனவும் 'ஒள' என்பதை 'அவ்' எனவும் சீரமைத்தார். மேலும் மெய்யெழுத்துகளில் சில எழுத்துக்களைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார்.

கால வளர்ச்சிக்கு மொழி சீரமைப்புகள் தேவை என்று கருதினார். அவரது சீரமைப்புக் கருத்தின் சில கூறுகளை 1978ம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.

முடிவுரை:

மொழி, இலக்கியம் பற்றிய பெரியாரின் சிந்தனைகள், அறிவுலகின் திறவுகோலாய்த் திகழ்ந்தது எனில் மிகையாகாது.

 

கற்பவை கற்றபின்


1. “இன்று பெரியார் இருந்திருந்தால்என்னும் தலைப்பில் மேடைப் பேச்சுக்கான உரை ஒன்றை எழுதுக.

விடை :

அவையில் கூடியிருக்கும் அனைவருக்கும், முதற்கண் என் அன்பான வணக்கத்தைச் சமர்ப்பிக்கின்றேன்.

இன்று உங்கள் முன் இந்த மேடையில் நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு என்ன தெரியுமா? “இன்று பெரியார் இருந்திருந்தால்என்பதே ஆகும்.

பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதைச் சுடர், தெற்காசியாவின் சாக்ரடீசு, வைக்கம் வீரர், பெண்ணினப் போர் முரசு, ஈரோட்டுச்சிங்கம், புத்துலகத் தொலை நோக்காளர் என்றெல்லாம் புகழப்பட்டவர் தந்தை பெரியார்.

அடிமை இருளில் மூழ்கிக் கிடந்த தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமல்ல பாரத தேசத்திற்கே, புதிய வெளிச்சம் பாய்ச்சியவர் எனில் மிகையாகாது. புதிய விடியலுக்கு தன் கொள்கையால் பூபாளம் இசைத்தவர்.

சமூகம், மொழி, கல்வி, பண்பாடு, பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் புதிய சிந்தனை ஏற்படுத்திய பெரியார், இன்று இருந்தால், இன்றைய சமூக பண்பாட்டுச் சீர்கேடுகள், இன்றும் கல்வியில் உள்ள வேறுபாடுகள், பொருளாதார சீர்கேடுகள், நாகரிகமற்ற அரசியல் செயல்பாடுகள், சாதியினால் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வீண் சண்டைகள், குழப்பங்கள், ஆணவக் கொலைகள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச்செயல்கள் அனைத்தும் அந்தப் பகுத்தறிவு பகலவனை ஒளி குன்றச் செய்திருக்கும்.

கல்வியில், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு. பெண்களுக்கான இட ஒதுக்கீடு பெண்களுக்கான சொத்துரிமை, குடும்பநலத்திட்டம், கலப்புத் திருமணம், சீர்திருத்த திருமண சட்ட ஏற்பு என அவர் விதைத்த விதைகள் சில வேரூன்றி இருக்கின்றன. சில முளைக்காமலே போய்விட்டன. இந்த நிலையில் இன்று பெரியார் இருந்திருந்தால்,

மீண்டும் ஒரு புரட்சி, மீண்டும் ஒரு மதுவிலக்கு, மீண்டும் ஒரு மொழிப் புரட்சிஎனப் புதிய புரட்சிகளால் புதிய விடியலை ஏற்படுத்தியிருப்பார்.

ஆனால், இன்று அவர் இல்லை, அவர் கொள்கைகளை உணர்ந்த நாம், அவர் காட்டிய வழியில் புதிய உலகம் செய்வோம். வேறுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முயல்வோம்.

சமுதாயம் மூடப்பழக்க வழக்கங்களில் இருந்து மீண்டெழ அரும்பாடுபட்ட அவரது பிள்ளைகளாகிய நாம் அச்செயலை புத்துணர்ச்சியுடன் செயல்படுத்துவோம். நன்றி! வணக்கம்!

 

2. பெரியாரை நேர்காணல் செய்வதாகக் கருதி வினாப்பட்டியலை உருவாக்குக!

விடை :

நேர்காணலுக்கான வினாக்கள்

. அய்யா! பகுத்தறிவு என்பதற்கு விளக்கம் தாருங்கள் அய்யா?

. மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? தெளிவு படுத்துங்களேன்.

. சாதியினால் மனித வாழ்விற்குப் பயன் உண்டா?

. சாதியும் மதமும் மனித சமுதாயத்தை ஒற்றுமை படுத்துகிறதா? பிரித்து வைக்கிறதா?

. கல்வியில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களாகத் தாங்கள் கருதுபவை யாவை?

. எத்தகைய நூல்கள் நம் மொழியில் படைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

. உங்களுக்கு மிகவும் பிடித்தமான நூல் எது?

. பெண்களை முன்னேற்ற உதவுவதற்கான வழிமுறைகள் யாவை?

. நீங்கள் சிக்கனத்திற்குச் சான்றாய் இருப்பவர் சிக்கனத்தின் அவசியம் பற்றிச் சில வார்த்தைகள் கூறுங்களேன்

. சமுதாயம் மூட பழக்கத்தில் இருந்து மீண்டெழ இன்றைய இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?

. இன்றைய அரசியல் தலைவர்கள் நாட்டை ஆள்பவர்களுக்கு உங்கள் அறிவுரைகள் யாவை?

. இன்றைய பத்திரிகைகள் இதழ்கள் ஊடகங்கள் பற்றி உங்கள் கருத்து யாது?

. மாணவர்களே இதைப் போன்று இன்றைய சூழலில் நீங்கள் பெரியாரைச் சந்தித்தால் என்ன கேட்க விரும்புகிறீர்களோ அவற்றை வினாக்களாக்கி இத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள்.

 

3. “இன்றைய சமுதாயம் பெரியாரின் பாதையில் நடக்கிறதா? நடக்கவில்லையா? எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடத்துக.


விடை :

கலந்துரையாடல்

கலந்துரையாடுபவர்கள்: முகிலன், கமலா, ஆசிரியர், அகிலன்.

ஆசிரியர் : மாணவர்களே இன்று பெரியாரின் சிந்தனைகள் பற்றிய உரைநடையைப் பயின்றோம் அல்லவா?

முகிலன் : ஆம் ஐயா! இந்த உரைநடை மூலம் பெரியார் கூறிய கருத்துகள் அவர் காட்டிய பாதையை அறிந்து கொண்டோம்.

ஆசிரியர் : ஆம். அவர் காட்டிய பாதையில் இன்றைய சமூகம் நடக்கிறதா இல்லையா?

கமலா : இல்லை ஐயா.

ஆசிரியர் : ஏன் கமலா அப்படி சொல்கிறாய்.

கமலா : ஐயா பெரியார் உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபாடு பார்க்கக்கூடாது என்றார். ஆனால் இன்றும் எங்கள் கிராமத்தில் சாதியின் அடிப்படையில் தான் எல்லாம் நடைபெறுகிறது இதிலிருந்தே தெரியவில்லையா? பெரியார் வழியில் நடக்கவில்லை என்று.

முகிலன் : சரியாகச் சொன்னாய் கமலா எங்கள் சிற்றூரில் கூட சாதியைக் காரணம் காட்டி மக்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள்.

கமலா : அதுமட்டுமில்லை முகிலா! மணக்கொடை, வரதட்சணை கூடாது என்றார். ஆனால் எங்கள் உறவினர்களில் ஒரு பெண்ணுக்கு வரதட்சணை தரமுடியாமல் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. பின் எப்படி சமூகம் பெரியார் வழி நடக்கிறது என்று சொல்ல முடியும்.

அகிலன் : இரண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கீங்க நான் கொஞ்சம் பேசலாமா?

கமலா : சொல்லு அகிலன்....

அகிலன் : நீங்க கலப்புத் திருமணம் செய்யலாம், சாதிமறுப்புத் திருமணம் செய்யலாம்என்றார். ஆனால் அப்படி யாராவது செய்தால் கொல்லப்படுகிறார்கள் என்ன செய்வது....

முகிலன் : இதுமட்டுமல்ல வேறுபாடற்ற கல்வி வேண்டும் என்றார். இன்றும் பணம் படைத்தவர்கள் நல்ல பள்ளியில் நல்ல தரமான வேறுபட்ட கல்வி கற்க முடிகிறது. சாதாரண ஏழை ஜனங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை தானே ...

அகிலன் : இப்படியே பேசிக்கொண்டே போகலாம் கமலா. நாம் பெரியாரின் கருத்துகளை நடைமுறைக்குக் கொண்டுவர முயல்வோம்.

முகிலன் : ஆம் அகிலன்! நன்கு படித்துத் தொலைநோக்குடைய அவருடைய சிந்தனைகள் அவர் கற்றுத் தந்த தன்மதிப்பு, சமத்துவம் ஆகியவற்றை திறவுகோலாகக் கொண்டு புதிய சமுதாயத்தைப் படைப்போம்.

கமலா : நாம் நினைத்தால் முடியாதது இல்லை. முயல்வோம் வெல்வோம்....

ஆசிரியர் : மிக்க மகிழ்ச்சி மாணவர்களே! நான் இன்று கற்றுக்கொடுத்தது வீணாகப் போவதில்லை ....

 

கவிதைப் பேழை

இயல் எட்டு

ஒளியின் அழைப்பு


பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. “முண்டி மோதும் துணிவே இன்பம்” - இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது

) மகிழ்ச்சி 

) வியப்பு 

) துணிவு 

) மருட்சி

விடை: ) துணிவு

 

குறுவினா

1. கமுகு மரம் எதைத் தேடியது?

விடை :

பெருமரங்களுக்கு இடையே தோன்றிய கமுகு மரமானது, தான் வளர்ந்து வளம் பெறுவதற்கு, விண்ணிலிருந்து வரும் கதிரவன் ஒளியாகிய உயிர்ப்பைத் (ஒளியமுதை) தேடியது.

 

நெடுவினா

1. வாழ்க்கைப் போரில் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் கமுகுமரம் வாயிலாக ஆசிரியர் எவ்வாறு உணர்த்துகிறார்?

விடை :

முன்னுரை:

போட்டி இன்றி வாழ்க்கை இல்லை. வலிகளின்றி வெற்றி இல்லை. ஒன்றையொன்று அடுத்தும், படுத்தும் மென்மேலும் முன்னேறுவது இயற்கைக்கு மட்டுமன்று வாழ்க்கைக்கும் தான் என்பதை . பிச்சமூர்த்தி அவர்கள் கமுகுமரம் வாயிலாக உணர்த்துகிறார்.

கமுகு பிறந்த இடம்:

அடர்ந்த இருள் போன்ற நிழல் பரப்புகின்ற பெருமரங்களின் இடையே கமுகு பிறந்தது. பெருமரங்களின் நிழல் என்னும் இருள் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஒளியமுதைத் தடுத்தது. பெருமரங்களின் நிழலை வெறுத்த கமுகு தான் வளரத் தேவையான ஒளியமுதைப் பெற்று உயிர்ப்புப் பெற போராட துவங்கியது.

கமுகின் போராட்டம்:

கமுகு மரம் கடுமையாகப் பெருமரங்களுடன் முட்டிமோதும் முயற்சியைத் தொடங்கியது. விண்ணிலிருந்து வரும் தன் உயிர்ப்பாகிய ஒளியமுதைத் தேடியது. மீண்டும், மீண்டும் உயர முயற்சித்தது. கதிரவனின் ஒளிக்கதிர்களாகிய விரல்களின் அழைப்பைக் கண்டது. பெருமரங்களின் இருட்டில் இருந்து கொண்டே தன் கிளையை வளைத்து ஒளியை நோக்கி நீட்டத் தொடங்கியது; வளர்ந்தது. பெரு மரங்களை முட்டி மோதும் துணிச்சலையும், முயற்சியையும் பெற்றதால் கமுகு வளைந்து, நெளிந்து, நீண்டு வளர்ந்தது. மலர்ச்சி பெற்றது.

வாழ்க்கைப் போர்:

வாழ்க்கையிலும் இருள் போன்ற நிழல் சூழ்ந்த நிலைகள் ஏற்படலாம். ஒளியமுதை நம்பி, வேண்டி, கமுகு துணிச்சலான முயற்சியில் ஈடுபட்டது போல, நாமும் வாழ்க்கைப் போரில் நம்பிக்கை தன்முனைப்பு, விடாமுயற்சி, உடையவர்களாய் இருந்தால் வாழ்வு மலர்ச்சி பெறும்.

முடிவுரை:

பெருமரத்துடன் சிறுகமுகு போட்டியிடுகின்றது, அதுவே வாழ்க்கைப் போர். முண்டி போதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி". இயற்கையின் போராட்டங்களையும், வாழ்வின் அனுபவங்களையும் இணைத்து அறிவுத் தெளிவுடன் வாழ்க்கைப் போரைச் சந்திப்போம்; முயல்வோம்; வெற்றி பெறுவோம்.

 

கற்பவை கற்றபின்


1. முயற்சி, நம்பிக்கை, வெற்றி ஆகியவற்றை உணர்த்தும் அறிஞரின் பொன்மொழிகளைத் தொகுக்க.

உங்கள் பாதையை

நீங்களே தேர்ந்தெடுங்கள்

ஏனெனில் வேறு எவராலும்

உங்கள் கால்களைக் கொண்டு

நடக்க முடியாது...!

 

எட்டி விடும் தூரத்தில்

வெற்றியும் இல்லை!

அதை விட்டுவிடும்

எண்ணத்தில்

நானும் இல்லை!

 

வாழ நினைப்பவனுக்கு

வானம் கூட

வாயிற் படிதான்!

 விடை :

1. “நாம் நம்மால் முடியாது

என்று நினைக்கும் செயல்களை

யாரோ ஒருவர்

எங்கோ ஓர் இடத்தில்

அதை செய்து கொண்டுதான்

இருக்கிறார் என்பதை மறவாதே

- அப்துல் கலாம்

 

2. எனது வெற்றிகளின் மூலம்

என்னை மதிப்பிடாதீர்கள்,

எத்தனை முறை நான் கீழே

விழுந்து மீண்டும் எழுந்தேன்

என்பதன் மூலம் மதிப்பிடுங்கள்

- நெல்சன் மண்டேலா

 

3. கண்ணெதிரே காணும்

ஒவ்வொருவரையும் நம்புவது

அபாயகரமானது. அதைக் காட்டிலும்

ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும்

அபாயகரமானது

- ஆபிரகாம் லிங்கன்

 

4. முடியாது என்பது நம்

அகராதியில் கிடையாது

- நெப்போலியன்

 

5. நம்பிக்கையோடு உன்

முதலடியை எடுத்துவை

முழுப் படிக்கட்டையும்

நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை,

முதலில் படியில் ஏறு

- மார்டின் லூதர்கிங்

 

6. ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட

வேண்டும் என்ற முயற்சிதான்

உலகில் பல பெருந்துயருக்கும்

காரணமாயிருக்கிறது.

- சாமுவேல் பட்லர்

 

7. எவராவது தான் தன்னுடைய

வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை

என்று நினைத்தால் அவர்கள் தாம்

தம் வாழ்வில் புதிய முயற்சிகளைச்

செய்து பார்த்ததில்லை என்று பொருள்

- ஐன்ஸ்டைன்

 

2. “தன்னம்பிக்கையின் மறுபெயர்நான் என்னும் தலைப்பில் ஒரு கவிதை படைத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.

விடை :

தன்னம்பிக்கையின் மறுபெயர் நான்

என் மறுபெயர்

என்ன தெரியுமா?...

தன்னம்பிக்கை...

எனக்குள் ஒருவன் இருக்கிறான்

அவன்தான் தன்னம்பிக்கை...

முயன்றவரை மட்டுமல்ல

முடியும் வரை முயல்வேன்

துவண்டு போக மாட்டேன்

துணிவுடன் செல்வேன்...

வேகமாய் செல்லமாட்டேன் விவேகத்துடன்

செல்வேன்

பொறாமைகளை போட்டிகளை எதிர்கொள்ள

பொறுமையுடன் பொறுப்புடன் ஓடுவேன்

ஏனெனில்

என் பெயர் தன்னம்பிக்கை ....

தோல்வியில் சிரித்துப் பார்த்தேன்.

கற்றதை உணர்ந்து பார்த்தேன்...

ஆசையைத் துறந்து பார்த்தேன்...

அச்சத்தை மறந்து பார்த்தேன்...

வியர்வை சொட்ட உழைக்கப் பார்த்தேன்....

வெற்றிக்கனியைச் சுவைத்துப் பார்க்கிறேன்.

என் பெயர் தன்னம்பிக்கை...

 


கவிதைப் பேழை

இயல் எட்டு

தாவோ தே ஜிங் (லா வோட்சு)


பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. விடைக்கேற்ற வினாவைத் தேர்க.

பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.

) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?

) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?

) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?

விடை: பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

 

குறுவினா

1. தாவோ தே ஜிங்இன்னொரு பக்கம்' என்று எதைக் குறிப்பிடுகின்றார்?

விடை :

. இருப்பதும் இல்லாதிருப்பதும் ஆகிய இரண்டு நிலைகளை உடையது மானுட வாழ்க்கை இருக்கின்றதான உருப்பொருளையே பயன் உடையதாய்க் கருதுகிறோம்.

. புலப்படாத இன்னொரு பக்கமாகிய இருத்தலின்மையை நாம் உணராமலே பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.

. சான்று : உருப்பொருளாகிய மண்ணால் செய்யப்பட்ட பாண்டம் இருத்தல், அதனுள் இருக்கும் இன்மையாகிய வெற்றிடத்தையே நீர் முதலியவற்றை நிரப்பிக் கொள்ள பயன்படுத்துகிறோம். எனவே இருத்தல் மட்டுமல்ல "இருத்தலின்மையும் " வாழ்வின் இன்னொரு பக்கம் என்று தாவோ தே ஜிங் கூறுகிறார்.

 

சிறுவினா

1. பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களை குறிப்பிடுக.

விடை :

. வான்மீகி வடமொழியில் எழுதிய இராமகாதையைத் தழுவி கம்பர்கம்பராமாயணம்எழுதினார்.

. வியாசர் வடமொழியில் எழுதிய மகாபாரதத்தைத் தழுவி, 'வில்லிபாரதம்', 'பாஞ்சாலி சபதம் எழுதப்பட்டது.

. ஷத்ரிய சூடாமணி, ஸ்ரீபுராணம், சத்ய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களைத் தழுவிசீவகசிந்தாமணிஎழுதப்பட்டது.

. Pilgrims progress நூலைத் தழுவி "இரட்சண்ய யாத்திரிகம் எழுதப்பட்டது.

. The secret way - என்னும் நூலைத் தழுவி" மனோன்மணியம் " எழுதப்பட்டது.

. புட்பந்தர் எழுதிய யசோதர சரிதம் என்னும் நூலைத் தழுவியசோதர காவியம்எழுதப்பட்டது.

 

கற்பவை கற்றபின்


1. நீங்கள் அறிந்த அயல்நாட்டு தத்துவ அறிஞர்களின் பெயர்களை எழுதுக.

விடை :

. சாக்ரடீஸ்        

. கார்ல் மார்க்ஸ்

. பிளேட்டோ       

. லாவோட்சு

. அரிஸ்டாட்டில்    

. டார்வின்

. கன்பூசியஸ்

 

2. ஜென் தத்துவக்கதை ஒன்றைப் படித்து அதுகுறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.

விடை :

கலந்துரையாடல்

படித்த கதை :இந்தாப்பா உன் சந்தோஷம்

கலந்துரையாடுபவர்கள் : ஆசிரியர், மாலா, கமலா, குமார்.

ஆசிரியர் : கதையைக் கேட்டீர்களா மாணவர்களே .....

மாலா : கேட்டோம் ஐயா!

கமலா : ஐயா ! சந்தோஷம் எதில் என்பதை இக்கதை விளக்கமாக கூறியுள்ளது.

ஆசிரியர் : என்ன புரிந்து கொண்டீர்கள்.....

குமார் : கோடீஸ்வரனுக்கு பணம் இருந்தும் மகிழ்ச்சியில்லை. எப்போதும் தன் பொன்னையும் பொருளையும் எண்ணிக் கொண்டிருக்கிறான்...

ஆசிரியர் : நிம்மதிக்கு என்ன செய்தான்.

கமலா : நாடு நாடாக ஊர் ஊராக சுற்றினான். பணத்தின் நினைவு வரும்போதெல்லாம் பதறி அடித்து திரும்பிப் போகின்றான்.

மாலா : பின் பொருள், பொன், பணம், எல்லாவற்றையும் மூட்டை கட்டி துறவியிடம் கொடுத்து சந்தோசம் கேட்கிறான்.

குமார் : துறவி மூட்டையுடன் ஓடுகிறார். சந்து பொந்தெல்லாம் ஓடிய துறவி மீண்டும் மரத்தடிக்கு வருகிறார்.

கமலா : மூட்டையை அவசர அவசரமாக கோடீஸ்வரன் பறித்துக் கொள்கிறான்.

ஆசிரியர் : மாணவர்களே செல்வம் படைத்தவனுக்கு அதனைக் கைவிட மனம் வருவதில்லை. அதனால் நிம்மதியும் அமைதியும் பெற முடியவில்லை . பொன், பொருள் இருப்பினும் அதில் பற்றற்ற மனதுடன் இருப்பதே மகிழ்ச்சி தரும்.

 

3. மண் பாண்டம் செய்வோரைச் சந்தித்து அதன் உருவாக்கம் குறித்து அறிக.

விடை :

. மண்பாண்டம் செய்யும் தொழில் பழமையான தொழில்களில் ஒன்று.

. மண்பாண்டம் செய்பவர் குயவர் என்று அழைக்கப்பட்டனர்.

. நீர் தூய்மையாகப்பட்ட மண் சேர்த்துக் குழைக்கப்பட்ட களிமண்ணோடு வேறு சில கனிமங்களையும் சேர்ப்பது உண்டு. களிமண் கனமானது , அடர்த்தியானது, தூய்மையானது. இதனை நன்கு குழைத்து மேடையில் சக்கரத்தலை என்ற பகுதியில் வைக்கப்படும்.

. பானை செய்பவர் தேவைப்படும் வேகத்தில் சுழல் மேடையை சுழற்றுவார்.

. சுழற்றும் வேகத்தில் கீழ்நோக்கியும் உள்நோக்கியும் அழுத்தி ஒரே அளவிலான தடிமனில் பரவவிட்டு என்ன வடிவில் வேண்டுமோ ! அவ்வடிவில் வடிவமைத்து, ஈரம் உலர்ந்தவுடன் குறிப்பிட்ட வெப்பநிலையில் சூளையில் சூடாக்கி மண்பாண்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

 

கவிதைப் பேழை

இயல் எட்டு

யசோதர காவியம்

 

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. “ஞானம்என்பதன் பொருள் யாது?

) தானம்

) தெளிவு

) சினம்

 ) அறிவு

விடை: ) அறிவு

 

குறுவினா

1. யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

விடை :

யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன், அவந்தி நாட்டு மன்னனாகியயசோதரன்ஆவார்.

 

சிறுவினா

1. நாம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளாக யசோதர காவியம் குறிப்பிடுவன யாவை?

விடை :

. நாம் செய்கின்ற செயல்கள் பிறருக்குப் பயன்தரத்தக்கச் செயலாக இருத்தல் வேண்டும்.

. “ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக”.

நம்மிடம் உள்ள தீய நெறிகளை, பண்புகளை நீக்க விரும்பினால் முதலில் சினத்தை நீக்க வேண்டும்.

. “போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக”.

மெய்யறிவு நூல்களை ஆராய்ந்து ஞானம் பெற வேண்டும்.

. “நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக”.

நாம் மேற்கொண்ட நற்செயல்களாகிய விரதத்தைக் காக்க வேண்டும்.

. “காக்குவது ஏதெனில் விரதம்

என்று நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை யசோதர காவியம் கூறுகிறது.

 

2. யசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளைத் திருக்குறளுடன் ஒப்பிடுக.

விடை :

அறத்தை ஆக்குக:

பின்னாளில் செய்யலாம் என்று எண்ணாது அறஞ் செய்க என்று (36வது) குறள் கூறுகிறது.

"அன்றறிவாம் எண்ணாது அறஞ்செய்து மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை

 

வெகுளி போக்குக:

யாரிடத்தும் கோபம் கொள்ளாமல் சினத்தை மறந்துவிட வேண்டும் என்று (குறள் 303) கூறுகிறது.

''மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும்.

 

ஞானம் நோக்குக:

குற்றமில்லாத அறிவைக் கண்டவர்க்கு அறியாமை நீங்கி இன்பம் கிட்டும் என்று (குறள் 352) கூறுகிறது.

இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு".

 

விரதம் காக்க:

விரதம் என்றால் நன்னெறி. தீய செயல்கள் தீயைப் போல் தீமைதரும், எனவே கொடிதான தீமையை விட்டு விலகி நன்னெறி பற்றுக என்று (202) குறள் கூறுகிறது.

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்".

இவையே யசோதர காவியமும் திருக்குறளும் குறிப்பிடும் வாழ்க்கை நெறிகள் ஆகும்.

 

கற்பவை கற்றபின்



1. தொடர்களை ஒப்பிட்டுக் கருத்துகளை வகுப்பறையில் கலந்துரையாடுக.

அறம் செய விரும்பு : ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக.

ஆறுவது சினம் : போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக.

ஆசிரியர் : நாம் இப்போது கற்ற ஆக்குவது ஏதெனில்... என்னும் அடிக்கு இணையான தொடர் ஏதாவது நினைவு வருகிறதா குழந்தைகளே ......

கலா : ஐயா எனக்கு ஒரு தொடர் ஞாபகம் வருகிறது சொல்லட்டுமா ஐயா.

ஆசிரியர் : சொல்லு கலா....

கலா : ஔவையார் கூறியஅறம் செய விரும்புஐயா...

ஆசிரியர் : மிகவும் சரியாகச் சொன்னாய் கலா.

மாலா : அய்யா கலா கூறியதும் நீங்கள் நடத்தியதும் ஒரே கருத்தா ஐயா.....

ஆசிரியர் : ஆமாம். மாலா ஔவையார்நீ எச்செயலைச் செய்ய விரும்பினாலும் அது அறம் செய்வதாக இருத்தல் வேண்டும் என்று விரும்புஎன்கிறார்...

கலா : இரண்டாவது தொடர் ஐயா...

ஆசிரியர் : ஆறுவது சினம் - வெகுளி போக்குக. ஔவையார் மனதை சிறிது நேரம் அமைதியாக கட்டுப்படுத்தினால் தானாகவே சினம் ஆறி விடும் என்று உணர்த்துகிறார்.

யசோதர காவியம்சினத்தை முழுவதுமாக கைவிட வேண்டும்என்பதை வலியுறுத்தும் விதமாகபோக்குவது ஏதெனில் வெகுளி போக்குகஎன்று கூறுகிறது.

 

விரிவானம்

இயல் எட்டு

மகனுக்கு எழுதிய கடிதம்


பாடநூல் வினாக்கள்

நெடுவினா

1. மொழியின் விரல் பிடித்து நடக்க பழகிக் கொண்டிருக்கும் தன் மகனுக்கு நா. முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

விடை :  

முன்னுரை:

கடித செய்தி என்பது உயிர்ப்புள்ள மொழி. செய்தியை அளிப்பவருக்கும், பெறுபவருக்குமான உறவுப் பாலத்தை உறுதியாக்குகிறது. தாயுமானவனாகத் திகழ்ந்த முத்துக்குமார் அவர்கள் தம் மகனுக்கு எழுதிய கடிதத்தில் அமைந்துள்ள செய்திகளை அறிவோம்.

குழந்தைப் பருவமும் - உலக வாழ்வும்:

என் செல்லப் பூங்குட்டியே! நீ குழந்தையாய் இருந்தாய்; அழுதாய்; சிரித்தாய்; குப்புறக்கவிழ்ந்து தலைநிமிர்ந்து, சாகசம் கொண்டாடினாய். தரையெல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய்; எழுந்தாய்; விழுந்தாய்; நடந்தாய்; ஓடினாய்.

இந்த உலக வாழ்வும் இப்படித்தான். சிரிக்க வேண்டும், சிணுங்க வேண்டும், குப்புறக்கவிழ்ந்தும், தலைநிமிர்ந்தும் சாகசம் செய்தல் வேண்டும். தவழ வேண்டும், எழவேண்டும், விழவேண்டும், மீண்டும் எழ வேண்டும், இந்த நாடகத்தை நீ வெவ்வேறு வடிவங்களில் உலக வாழ்வில் நடிக்கத்தான் வேண்டும்.

அனுபவமே கல்வி:

கல்வியில் தேர்ச்சி கொள்ள வேண்டும், அதே நேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள். தீயைப் படித்துத் தெரிந்து கொள்வதை விட தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவக் கல்வியே இவ்வுலகில் வெற்றியுடன் வாழ பயன்படும் சூத்திரம் ஆகும்.

அன்பாக இரு:

எங்கும், எதிலும் எப்போதும் அன்பாய் இரு. அன்பை விட உயர்ந்தது இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை. உன் பேரன்பால் இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக் கொண்டே இரு. உறவுகளை விட மேன்மையானது நட்பு மட்டுமே, உன் அன்பால் நல்ல நண்பர்களைச் சேர்த்துக் கொள். உன் வாழ்வு அன்பாலும், நட்பாலும் நேராகும்.

உனக்கான காற்றை நீயே உருவாக்கு:

என் மகனே மாநகரத்தில் நீ வாழ்க்கை முழுக்கக் கோடைகாலங்களையும், வெவ்வேறு வடிவங்களில் கொடிய தேள்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். எப்போதும் உன் தகப்பன் உன் அருகில் அமர்ந்து விசிறி கொண்டிருக்க முடியாது. உனக்கான காற்றை நீயே உருவாக்கு.

புத்தகங்களை நேசி:

புத்தகங்களை நேசிக்கத் தவறாதே. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள் உன் உதிரத்தில் காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.

முடிவுரை:

இக்கருத்துக்கள் அனைத்தும் முத்துக்குமாரின் மகனுக்கு மட்டுமல்ல. இதனைப் படிக்கின்ற ஒவ்வொரு மாணவனுக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், வளர்வதற்கும், உயர்வதற்கும், ஏற்ற கருத்துக்கள் ஆகும் என்பதை எவராலும் மறுக்க இயலாது.

 

கற்பவை கற்றபின்


1. முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தைப் போல நீங்கள் யாருக்குக் கடிதம் எழுத விரும்புகிறீர்களோ அப்படியொரு ஒரு கடிதம் எழுது.

விடை :

தங்கைக்கு..... 

அன்புள்ள தங்கைக்கு அண்ணா எழுதுவது,

நலமா? பதின் பருவத்தில் இருக்கும் உனக்கு இக்கடிதம் மூலம் சில கருத்துகளை தெரிவிக்கவும், சிலவற்றை உன்னுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.

நாம் சிறு வயதில் இருக்கும் போது பல கஷ்டங்களை அனுபவித்தது உண்டு. துன்பங்களிலும், வறுமையிலும், துவண்டு போகாத நம் தந்தை கண்ணெனத் தகும் கல்வியை எனக்குத் தடையின்றி தந்தார். நீயும் இன்று படித்துக் கொண்டிருக்கிறாய். நானும் பணியில் சேர்ந்து விட்டேன். நான் உழைக்கிறேன் ஓய்வெடுங்களென்றால் நம் தந்தை அதற்கு உடன்படுவதில்லை.

நம் பெற்றோரின் உழைப்பின் பயனாகிய நல்வாழ்வை நாம் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். அன்புத் தங்கையே நீ பத்திரமாகவும், பக்குவமாகவும் இருக்க வேண்டிய தருணம் இது. கல்வியிலும் நம் குடும்ப நிலையிலும் மட்டுமே உன் கவனம் இருத்தல் வேண்டும்.

கவனச் சிதறல்கள் ஏற்படா வண்ணம் நல்ல புத்தகங்களை வாசி, பெற்றோரை நேசி, இறைவனை மறவாது வழிபடு. நற்பண்புகளை வளர்த்துக்கொள். பெண்ணிற்கு எதற்குப் பணி? என்று வீட்டிலே இருந்து விடாதே. அடுத்த ஆண்டு உன் பட்டப்படிப்பு முடிந்து விடும் அல்லவா! உனக்கு பிடித்தமான பணியைச் செய்ய உன்னை ஆயத்தப்படுத்திக் கொள். பொருளாதார சுதந்திரமும், சமூக பாதுகாப்பு வழங்குவதும் கல்வியும், பணியுமே. நாளை உன் பிறந்த நாள் அல்லவா? அன்புத் தங்கையே வாழ்வில் அனைத்து நலங்களும் பெற்று வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன் அண்ணன்

 இரகு. இரா

 

2. வகுப்பில் நீங்கள் தேர்ந்தெடுத்த நண்பனின் சிறந்த பண்பைப் பாராட்டியும், அவர் மாற்றிக் கொள்ள வேண்டிய பண்பையும் பெயரைக் குறிப்பிடாமல் கடிதமாக எழுதிப் படித்துக் காட்டுக.

விடை :

அன்புள்ள நண்பா,

உன் நற்பண்பை பாராட்டும் வகையிலும் நீ உன்னில் இருந்து நீக்க வேண்டிய, மாற்றிக் கொள்ள வேண்டிய பண்புகளைக் குறித்தும் நீ உணர்ந்து கொள்ளும்படியும், உணர்த்தும் படியும் இம்மடலை வரைந்து வாசிக்கிறேன்.

நண்பா உன்னை எண்ணி பார்க்கும் போதெல்லாம் என்னுள் மகிழ்வும், பெருமிதமும் ஊற்றெடுக்கும். ஆம் நீ அனைவருக்கும் உதவி செய்யும் நற்பண்பினைப் பெற்றிருக்கிறாய் அல்லவா! அதை நினைத்துத்தான் பெருமிதம் பொங்கும்.

பிறருக்குத் தாமாகவே ஓடிச் சென்று உதவும் பண்பு, எல்லோரிடத்திலும் இருப்பதில்லை. ஆனால் நீ இந்த பண்பை இயல்பிலே பெற்றிருப்பதால் நல்ல நண்பர்கள் உனக்குக் கிடைத்து இருப்பதோடு, பலருடைய பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுள்ளாய் பாராட்டுக்கள்.

அதேவேளையில், நீ திருத்திக் கொள்ளும் பொருட்டு உன்னிடம் உள்ள ஒரு சிறு குறையைச் சுட்டிக் காட்டுவது நல்ல நண்பனாகிய என் கடமை எனக் கருதுகின்றேன்.

மகிழ்ச்சியாக உணவருந்திக் கொண்டிருக்கும் போது சிக்கிக் கொண்டு எரிச்சல் தரும் மிளகாய் போல் உன்னிடம் முன்கோபமாகிய குணம் உள்ளது. நாம் எத்தனை நன்மைகள் செய்தாலும் நம்மிடம் உள்ள சினம் என்னும் குணம் எல்லா நற்பண்புகளையும் அழித்து விடும்.

உலகத்தாருக்கும் நாம் செய்த நன்மைகளை , நம் சினமானது மறைத்து விடும். நற்பண்பு வெளியில் தெரியாமல் நம் எதிர்மறை குணம் மட்டுமே பேசு பொருளாக மாறி விடும் எனவே அன்பு நண்பாசினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லியைநீ மாற்றிக் கொண்டால் உன்னத மனிதனாய் பேரும், புகழும் பெறுவாய்.

வாழ்த்துகள்.

அன்புடன் ஆருயிர் நண்பன்,

 

 

கற்கண்டு

இயல் எட்டு

யாப்பிலக்கணம்


பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது - இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு யாது?

) நாள்

) மலர்

) காசு

) பிறப்பு

விடை : ) பிறப்பு

 

குறுவினா

1. அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை :

அசை இரு வகைப்படும். அவை நேரசை, நிரையசை ஆகும்.

 

கற்பவை கற்றபின்



1. உமக்குப் பிடித்த திருக்குறளை அலகிட்டு அதன் வாய்பாடு காண்க.

விடை :

குறள்

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்

அறம்நாணத் தக்க துடைத்து.


எண் -   சீர்           -  அசை           -   வாய்பாடு

1.   - பிறர்/நா/ணத் - நிரை நேர் நேர்  -| புளிமாங்காய்

2.   - தக்/கது        - நேர் நிரை        - கூவிளம்

3   - தான்/நா/ணா  - நேர் நேர் நேர்    - தேமாங்காய்

4,   - னா/யின்       - நேர் நேர்          - தேமா

5,   - அறம்/நா/ணத்  - நிரை நேர் நேர்  - புளிமாங்காய்

6,  -  தக்/          - நேர் நேர்       - தேமா

7.   - துடைத்/து     - நிரைபு        - பிறப்பு

குறிப்பு:* நெடில் எழுத்து வந்தால் தனியாகவும், குறிலுடன் மெய்யெழுத்து வந்தால் தனியாகவம், இரு குறில் எழுத்துடன் மெய்யெழுத்து வந்தால் தனியாகவும் பிரிக்க வேண்டும். அல்லது இரு குறில் எழுத்தையும் தனியாகப் பிரிக்க வேண்டும். ஆய்த எழுத்தையும் மெய்யெழுத்தாகவே கணக்கிட வேண்டும். () அடைப்புக் குறியிட்ட எழுத்தை அலகிடலில் சேர்க்கக் கூடாது.

. மெய்யெழுத்தை நீக்கி ஓர் எழுத்து மட்டும் இருந்தால் நேரசை என்றும் மெய்யெழுத்தை நீக்கி இரண்டு எழுத்து இருந்தால் நிரையசை என்றும் கணக்கிட வேண்டும்.

விடல் - இரு எழுத்து - நிரை

கண் - ஒரு எழுத்து - நேர்

 

2. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்


எண் -     சீர்    - அசை     - வாய்பாடு

1.    ஒழுக்கம்  - நிரை நேர் - புளிமா

2.   விழுப்/பம்  - நிரை நேர் - புளிமா 

3,   |தர/லான்   - நிரை நேர் - புளிமா

4,   ஒழுக்கம்   - நிரை நேர் - புளிமா 

5,   உயி/ரினும் - நிரை நிரை - கருவிளம் 

6,   ஓம் /பப்   - நேர் நேர்    - தேமா|

7,   படும்     - நிரை        - மலர்|

இக்குறட்பாவானது மலர் என்ற வாய்பாட்டில் முடிந்துள்ளது.

 

2. பின்வரும் பாடல்களில் பயின்றுவரும் தொடைநயங்களை எடுத்து எழுதுக.

கொண்டல்கோபுரம் அண்டையில் கூடும்

கொடிகள் வானம் படிதர மூடும்

கண்ட பேரண்டம் தண்டலை நாடும்

கனக மூன்றில் அனம் விளையாடும்.

 

விண்டபூமது வண்டலிட்டு ஓடும்

வெயில் வெய்யோன் பொன்னெயில் வழி தேடும்

அண்டர் நாயகர் செண்டலங் காரர்

அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே

விடை :

இப்பாடலில் பயின்று வரும் தொடை நயங்கள்

. மோனை நயம்

. எதுகை நயம்

. இயைபுத் தொடை நயம்

 

செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை எனப்படும்.

சான்று:

. கொண்டல் - கொடிகள்

. கண்ட - கனக

. அண்டர் - அழகர்

செய்யுளில் அடியிலோ சீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகையாகும்.

சான்று :

. கொண்டல் - கண்ட

. விண்ட - அண்டர்

செய்யுளின் அடிகள் தோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபுத் தொடை ஆகும்.

சான்று:

. அண்டையில் கூடும்

. படி தர மூடும்

. தண்டலை நாடும்

. அனம் விளை யாடும்

இவ்வாறு இயைந்து வருவதால் இயைபு ஆகும். இப்பாடலில் மோனை, எதுகை, இயைபுத் தொடை ஆகிய நயங்கள் உள்ளன.

 

வினாக்கள்:

1. உங்கள் வீட்டில் உள்ளவர்களின் பெயர்களை நேர்நிரை அசைகளாகப் பிரித்துப் பார்க்க.

விடை :

. மேகலா   - மே/கலா  - நேர் நிரை

. குமரன்    - கும/ரன்   - நிரை நேர்

. பிரியா     – பிரி/யா    - நிரை நேர்

. அமிழ்தினி - அமிழ்/தினி - நிரை நிரை

 

2. மூவசைச் சீரில் அமைந்த பெயர்கள் நான்கைக் குறிப்பிடுக.

விடை :

. இரா / சரா / சன்

. மணி /மா / றன்

. மதி / மா / றன்

. மணி / கண் / டன்

 

3. “தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்"

இக்குறட்பாவில் பயின்று வரும் மோனை, எதுகைகளைக் கண்டறிக

விடை :

. தம் பொருள் - தம் தம்} முதல் எழுத்து ஒன்றி மோனை பயின்று வருகிறது. (அடிமோனை)

. தம் பொருள் - தம் தம் இரண்டாவது எழுத்து ஒன்றி எதுகையும் பயின்று வருகிறது.(அடிஎதுகை)

 

4. தளையின் வகைகளை எழுதுக.

விடை :

தளையின் வகைகள் ஏழு ஆகும். அவை:

. நேரொன்றாசிரியத் தளை

. நிரையொன்றாசிரியத் தளை

. இயற்சீர் வெண்டளை

. வெண்சீர் வெண்டளை

. கலித்தளை

. ஒன்றிய வஞ்சித்தளை

. ஒன்றாத வஞ்சித்தளை ஆகியவையாகும்.

 

Tags : Chapter 8 | 9th Tamil இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 8 : Enthalai kadane : Questions and Answers Chapter 8 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே