இயல் 9 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 9th Tamil : Chapter 9 : Anpenum arane
உரைநடை உலகம்
இயல் ஒன்பது
விரிவாகும் ஆளுமை
பாடநூல் வினக்கள்
பலவுள் தெரிக
1.
இமயத்துக்
கோடு
உயர்ந்தன்ன
- இவ்வடியில் அடிக்கோடிட்ட
சொல்லின்
பொருள்
யாது?
அ)
கொம்பு
ஆ)
மலையுச்சி
இ)
சங்கு
ஈ)
மேடு
விடை: ஆ) மலையுச்சி
2.
தமிழ்ப்
புலவரைப்
போலவே
உரோமச்
சிந்தனையாளர்
கொண்ட
கொள்கை
அ)
நிலையற்ற
வாழ்க்கை
ஆ)
பிறருக்காக
வாழ்தல்
இ)
இம்மை
மறுமை
ஈ)
ஒன்றே
உலகம்
விடை: ஈ) ஒன்றே உலகம்
குறுவினா
1.
தமிழ்ச்
சான்றோர்க்கும்
உரோமையரின்
சான்றோருக்கும்
உள்ள
வேறுபாடு
யாது?
விடை :
உரோம நாட்டவர் :
உரோமையரின் சான்றோர் எழுதும்போது நாம் நம்மவர் என்ற செருக்குடன் உரோமரை கருதியே எழுதுகின்றனர்.
தமிழ்ச் சான்றோர் :
எல்லா உலகிற்கும் எல்லா மாந்தர்க்கும் பயன்படும் வகையில் உலகமெல்லாம் தழுவுவதற்குரிய கொள்கையை தம் நூல்களில் யாத்துள்ளனர் என்பதே இரு சான்றோர்க்கும் உள்ள வேறுபாடு ஆகும்.
சிறுவினா
1.
உலக
இலக்கியத்தில்
காண
இயலாத
அரிய
கருத்துகளாக
ஆல்பர்ட்
சுவைட்சர்
குறிப்பிடுவன
யாவை?
விடை :
ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகமேதை ஆல்பர்ட் சுவைட்சர், திருக்குறளைப் பற்றிக் கூறும் போது "இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுள்களை உலக இலக்கியத்தில் காண்பது அரிது என்பார்.''
அவர் குறிப்பிட்ட அரிய கருத்துகள்:
. மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள்.
. பிறப்போ சாதியோ சமயமோ மக்களை உயர்த்தவோ, தாழ்த்தவோ, முடியாது. இத்தகைய கொள்கைகள் வள்ளுவர் காலத்திற்கு முன்பே தமிழ் மக்களால் போற்றப்பட்டுள்ளன என்று வியக்கிறார்.
2.
கோர்டன்
ஆல்போர்ட்
கூறும்
மூன்று
இலக்கணங்களைக்
குறிப்பிடுக.
விடை :
கோர்டன் ஆல்போர்ட் ஓர் உளநூல் வல்லுநர். அவர் கூறும் மூன்று இலக்கணங்களாவன.
. மனிதன் தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும். பிறருடைய நலத்திற்கும் இன்பத்திற்கும் பாடுபடக்கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப்படுத்த வேண்டும்.
. பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவனாக இருக்க வேண்டும்.
. ஒருவன் அவனது வாழ்க்கைக்குச் சுய ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தைக் கண்டுபிடித்து நடத்தல் வேண்டும்.
நெடுவினா
1.
தமிழ்
இலக்கியங்கள்
காட்டும்
சான்றாண்மைக்
கருத்துகளைத்
தனிநாயக
அடிகள்
வழி
நிறுவுக.
விடை :
முன்னுரை:
உலக நாடுகளையும் மக்களையும் உட்படுத்தி அன்பு பாராட்டுவது நம் சான்றாண்மைத்தன்மை. இச்சான்றாண்மைப் பண்பு பண்டைத் தமிழ்ப் புலவர்களால் பாராட்டி பாடப்பட்டுள்ளது. நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் சான்றாண்மைப் பண்புகளை அறியலாம்.
யாதும் ஊரே யாவரும் நம்மவரே:
கணியன் பூங்குன்றனார் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் சான்றாண்மைக் கொள்கையை இக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் கூறியுள்ளார்.
'யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவர்' என்று திருக்குறளும் நம் காலத்திற்கும் பொருந்தி வரும் அறிவுரையைக் கூறியுள்ளது. ஊர், நாடு, கேளிர் என்னும் இச்சொற்கள் பரந்த மனப்பான்மை மனித நலக் கோட்பாடு என்னும் சான்றாண்மையை வலியுறுத்துகிறது
இலட்சியங்களைக் கடைப்பிடித்தல்:
இலட்சியங்களைக் கடைப்பிடிக்கும் சமுதாயம் உயரும். குறிக்கோள் இல்லாத சமுதாயம் வீழ்ச்சி அடையும். குறிக்கோள் இல்லாத மனிதன் வெறும் சதைப்பிண்டம் என்பதை, 'பூட்கையில் லோன் யாக்கை" போல என்று புலவர் ஒருவர் புறநானூற்றில் கூறுகிறார். குறிக்கோள் வேண்டும் என்பதை வள்ளுவம் ''உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்'' என்று குறிப்பிடுகிறார்.
பிறர் நலவியலும் ஒற்றுமை உணர்ச்சியும்:
பிறர் நலத்துக்காகப் பணி செய்வதில் தான் ஒருவனுடைய வாழ்க்கை பண்புடைய வாழ்க்கை ஆகிறது. “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் கொள்கையைப் பின்பற்றினர் தமிழர். இச்செய்தி தமிழ்ச் சான்றோர் தன்னலம் தேடுவதில் இருந்து விடுவித்துப் பிறர் நலம் பேணுவதில் தான் சிறந்தனர் என்பதை உணர்த்துகின்றது. மக்கள் அனைவரும் தன் இனத்தவர் எல்லா உயிர்க்கும் அன்பு காட்டுதல் வேண்டும் என்ற உயரிய சான்றாண்மைப் பண்பை பெற்றிருந்ததையும் இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.
ஒற்றுமை உணர்வு:
பாணர்களும் பாடினிகளும் தமிழ்ப் புலவர்களையும் அரசர்களையும் மக்களையும் நாட்டையும் வேறுபாடு இன்றி பாடியதால் தமிழகம் என்ற ஒற்றுமை உணர்வை உருவாக்கினர். பிறர் நலக்கொள்கையையும் பிறர் மீதான அன்பு பாராட்டலை ஒருவருக்கு ஒருவர் உதவுதல் ஆகிய அவர் தம் அன்பையும் ஒற்றுமை உணர்வையும் பறைசாற்றுகின்றன.
நன்மை செய்தல்:
தமிழ்ச் சான்றோர்களின் இன்றியமையாப் பண்பு , நன்மையை நன்மைக்காக செய்வதுதான் பிறர் போற்றுவார்கள் என்றோ, வேறு நலன்களைப் பெறலாம் என்றோ தமிழர் நன்மைகளைச் செய்யவில்லை என்பதற்குக் கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ''ஆய்'' சான்றாவான்.
“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
அறவினை வணிகன் ஆய்அலன்”, என்று புறநானூறு பாராட்டுகிறது.
பிறர்க்காக நன்மை செய்து வாழ்வதே உயர்ந்த பண்பும் பண்பாடும் ஆகும் “உண்டாலம்ம இவ்வுலகம்” என்ற புறப்பாட்டு இப்பண்பையே எடுத்துக்காட்டுகிறது.
முடிவுரை:
இவ்வாறு நம் இலக்கியங்கள் நம் தமிழ்ச் சான்றோர்களின் பண்புகளையும் மக்கட் தன்மையை வளர்க்க முனைந்ததையும் உலகமெல்லாம் தழுவுவதற்கும் உரிய பண்புகளை வளர்த்தனர் என்று தனி நாயக அடிகள் தம் கட்டுரை வாயிலாக நிறுவுகிறார்.
கற்பவை கற்றபின்
1.
உங்களுக்குப்
பிடித்த
தமிழ்
ஆளுமைகள்
குறித்துக்
கலந்துரையாடிக்
குறிப்புகளை
எழுதுக.
விடை :
. பூமிப்பந்து எங்கும் புகழ் பெற்றுத்திகழும் தமிழ் ஆளுமை காமராசர் ஆவார்.
. ஆளுமை என்பது என்னவென்றால் ஒருவரைத் தனித்துவமானவராக ஆக்கும் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள், ஆகியவை உள்ளிருந்து உருவாகி வாழ்க்கைக்காலம் முழுவதும் அவை சீராக அமைவதே ஆளுமை ஆகும்.
. இவ் உரைநடையில் கற்றது போல் பிறர்நலம் பேணுதல், தியாகமும் நேர்மையும் ஆளுமை என்றால் காமராசர் சிறந்த ஆளுமை பண்பு உடையவரே.
. தனது கஷ்டங்களைப் பொருட்படுத்தாது, சதாகாலமும் நாட்டின் நலனில் ஈடுபட்ட உள்ளத்தைப் பெற்றவர். தர்ம சிந்தனையும், நீதியும் உடையவர்.
. மக்களுக்குத் தொண்டு செய்ய நீண்டகாலம் வாழவேண்டும் என்று வாழ்த்தப்பட்டவர்.
. காமராசர் மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு தீர்ப்பதில் வல்லவர், நாட்டம் உடையவர் என்று இந்தியாவிலேயே பெருமையாகப் பேசப்பட்டவர்.
. மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் கூட நிகழாத அற்புதத்தைத் தமிழகத்தில் நடத்தியவர் என்று பெரியாரே புகழ்ந்துள்ளார்.
. கல்விப் புரட்சியும், சமூக நீதிக்கான புரட்சியும் நடத்திக் காட்டியவர்.
. இவரது பொதுவாழ்க்கை நேர்மை, எளிமை, தூய்மை என்னும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. கறைபடியாத கரங்களை உடையவராகத் திகழ்ந்தார்.
. தோழர்களே நம் நாடு உருப்பட வேண்டுமானால் குறைந்தது இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரைப் படித்துக் கொள்ளுங்கள்; விட்டுவிடாதீர்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். “காமராசரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளு சிக்காது'' என்று 82 வயதான தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டார். எனில் காமராசரை விட சிறந்த ஆளுமை உண்டோ !
2.
உலகத்
தமிழ்
மாநாட்டு
மலர்,
பொங்கல்
மலர்,
தீபாவளி
மலர்,
போன்றவற்றில்
வெளிவந்துள்ள
உலகப்
பொதுவியல்
சிந்தனைகள்
குறித்து
5 மணித்துளிகள் பேசுக.
விடை :
அனைவருக்கும் வணக்கம்.
பொங்கல் மலர் ஒன்றில் புதிய சிந்தனைகள் நிறைந்த கருத்தடங்கிய கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.
இளமை நிலையற்றது, வாழ்வு நிலையற்றது. இளமை என்பது அழகு இல்லை அது ஒரு பருவம், அப்பருவத்தில் நன்மை செய்பவர்களாய் நாம் வாழவேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்தியது.
''தீதும் நன்றும் பிறர் தர வாரா '
'யாதும் ஊரே யாவரும் கேளிர்''
என்று உலகுக்கு உணர்த்தியவன் தமிழன். பண்டைய தமிழன் சிறந்த உலகப்பொதுமை சிந்தனை உடையவனாக இருந்தான்.
நரையும் மூப்பும் வரும் என்பதை முன்னரே உணர்ந்து காமம், வெகுளி, மயக்கம் என்று கிடைக்காமல் நன்மை செய்யுங்கள் நன்மையே உங்களை நன்னெறிக்கு இட்டுச்செல்லும். அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணுங்கள்.
“நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்” நாகரிகம் எனப்படா.
அனைத்து உயிர்களிடத்தும் உயிர்நேயம் உடையவனே நாகரிகம் உடையவன்.
குளிர்ச்சியான சோலையில் காய்த்திருக்கும் காய்கள் கனிந்தவுடன் உதிர்ந்து விடுவது போல், வாழ்வும் உதிர்ந்துவிடும் தன்மையது. எனவே வாழும்போதே, " மற்று அறிவோம் நல்வினை " என்பதை உணர்வோமாக.
அறிவுடையோர் இவ்வுண்மையை உணர்ந்து கொள்க! இந்த உண்மையை உணராதவரை அறிவில்லாதவர் என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.
“தோறார் விழியிலா மாந்தர்” என்கிறார்.
இளமை கழிந்து போகுமுன் அருமையான அறச்செயல்களைச் செய்து விட வேண்டும். முதுமையில் எண்ணினாலும், அருஞ்செயலை செய்வதற்குரிய ஆற்றல் இல்லாது போய்விடும், எண்ணும் உலகளாவிய பொதுவியல் சிந்தனையைக் கூறும் இக்கட்டுரை, என் மனதை மாற்றியது. இச்சொற்பொழிவைக் கேட்ட நீவிரும் அறம் செய்ய முயல்க.
நன்றி வணக்கம்!
கவிதைப் பேழை
இயல் ஒன்பது
அக்கறை
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.
வண்ணதாசனுக்குச்
சாகித்திய
அகாதெமி
பரிசு
பெற்றுத்
தந்த
நூல்
அ)
ஒரு
சிறு
இசை
ஆ)
முன்பின்
இ)
அந்நியமற்ற
நதி
ஈ)
உயரப்
பறத்தல்
விடை: அ) ஒரு சிறு இசை
சிறுவினா
1.
“பழங்களை
விடவும்
நசுங்கிப்
போனது”
- இடஞ்சுட்டிப் பொருள்
விளக்கம்
தருக.
விடை :
இடம்:
இக்கூற்று (இவ் அடி) கல்யாண்ஜி எழுதியுள்ள ''அக்கறை" என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.
விளக்கம்:
மிதிவண்டி ஓட்டி வந்த தக்காளி வியாபாரி மிதிவண்டியில் இருந்து சாய்ந்து விழ. கூடையில் இருந்த தக்காளிப் பழங்கள் சிதறி விழுந்தன. தலைக்கு மேல் வேலை இருப்பதாய், அனைவரும் கடந்தும், நடந்தும் சென்றனர். எல்லாம் நசுங்கி வீணானது. பழங்களை விடவும் சக மனிதர்கள் மீது உள்ள நேயமும், அக்கறையும் நசுங்கிப் போனது.
2.
மணல்
விளையாட்டு
என்னும்
தலைப்பில்
சிறு
கவிதை
படைக்க.
விடை :
மணல் விளையாட்டு
மணலில் தான் எத்தனை
விளையாட்டு விளையாடுவோம்..!.
மணல் வீடு கட்டி
மகிழ்வுடன் உறவுகளை வளர்த்து
விளையாடினோம்..!.
ஈர மணலில் கோபுரம் கட்டினோம்
கருப்பட்டி செய்து கவிழ்த்து
வைத்துப் பேசினோம்..!.
மணலுக்குள் குச்சியை
ஒளித்து வைத்து
கிச்சிகிச்சு தாம்பலம்
விளையாடி மணலில்
கண்டெடுத்தோம்..!.
மணலில் ஓடினோம்
ஆடினோம் பாடினோம்
இன்றோ ...!.
மடியிலே மடிக்கணினியோடு
பல விளையாட்டை ஆடுகிறார்
மண்ணில் கால் வைக்க
விடுவதில்லை ....பெற்றோர்.....!.
கற்பவை கற்றபின்
1.
நிலா,
மழை,
காற்று,
தண்ணீர்
போன்றவை
குறித்து
புதுக்கவிதைகளைத்
திரட்டி
இலக்கிய
மன்றத்தில்
படித்துக்
காட்டுக.
எ.கா
ஹைக்கூ
இந்தக்
காட்டில்
எந்த
மூங்கில்
புல்லாங்குழல்?
-
அமுதோன்
பிம்பங்களற்ற
தனிமையில்
ஒன்றிலொன்று
முகம்
பார்த்தன
சலூன்
கண்ணாடிகள்
-
நா.
முத்துக்குமார்
வெட்டுக்கிளியின்
சப்தத்தில்
மலையின்
மௌனம்
ஒரு
கணம்
அசைந்து
திரும்புகிறது.
-
ஜப்பானியக்
கவிஞர்
பாஷோ
மழை
மரம் எனும் தேவதை
கவரி வீசினாள்
கருமேகங்கள் ஒன்றானது
ஒன்றான மகிழ்ச்சியில்
இடித்தும் மின்னியும்
இசை, நடனம்
நாட்டியம் பயின்றதாலே
ஆனந்தக் கண்ணீர் சிந்தியது
மழை என..
நிலா
கடலில் குளித்து
கார்முகிலில் தலை முடித்து
வான்வெளியில் நீந்தி வரும்
நிலவே...
உன்னை நோக்கும் போதெல்லாம்
வியப்பே ...
உடல் பருத்தும் ஒளிகுன்றாய்
உடல் இளைத்தும் ஒளிகுன்றாய்
முழுமதியாய் ஓய்வின்றி ஒளிர்வாய்
ஒளிவீசாது ஒருநாள் ஓய்வும்
கொள்கிறாய்...
காற்று
எனக்கு சுவாசம்
தரும் காற்றே நீ இன்றி
நிலவுலகில் ஏதுமில்லை ..
தெற்கிலிருந்து நீ வந்தால்
தென்றல் ஆகிறாய்
வடக்கிலிருந்து நீ வந்தால்
வாடை ஆகிறாய்
கிழக்கிலிருந்து நீ வந்தால்
கொண்டல் ஆகிறாய்
மேற்கிலிருந்து நீ வந்தால்
மே(ல்) காற்று ஆகிறாய்
எங்ஙனம் நீ வந்தாலும்
எப் பெயரில் வந்தாலும்
எங்களின் ஜீவன் நீயேயாவாய்!
தண்ணீர்
நீரே ! உலகில்
முக்கால் பாகம்
உன்னால்
நிறைந்திருந்தாலும்
ஏன் பற்றாக்குறை...
வாய்க்கால் குளம் குட்டை
நதி கடல் எனப் பல
முகங்கள் உனக்கு. ஆனாலும்
மொண்டு எடுப்பதற்கு
இயலா நிலையில்
பல ஊர்கள்
பல மக்கள்
உனக்காகக் ,,
காத்திருப்ப தேனோ!
கவிதைப் பேழை
இயல் ஒன்பது
குறுந்தொகை
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.
யா
மரம்
என்பது
எந்த
நிலத்தில்
வளரும்?
அ)
குறிஞ்சி
ஆ)
மருதம்
இ)
பாலை
ஈ)
நெய்தல்
விடை: இ) பாலை
குறுவினா
1.
பிடிபசி
களைஇய
பெருங்கை
வேழம்
- இவ்வடியில் உள்ள
இலக்கணக்
குறிப்புகளை
கண்டறிக.
விடை :
1. பிடிபசி - ஆறாம் வேற்றுமைத்தொகை
2. களை இய - சொல்லிசை அளபெடை
3. பெருங்கை - பண்புத்தொகை
4. பெருங்கை வேழம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
2.
குறுந்தொகை
- பெயர் காரணம்
எழுதுக.
விடை :
குறுமை + தொகை - குறுந்தொகை நான்கு முதல் எட்டு அடிகளால் குறுகிய பாக்களால் ஆன தொகுக்கப்பட்ட நூல் ஆதலால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது.
சிறுவினா
1.
'யா'
மரத்தின்
பட்டையை
உரித்தது
எது?
எதற்காக?
விளக்குக.
விடை :
. யா மரம் என்பது பாலை நிலத்தில் உள்ள ஒருவகை மரம் அதன் பட்டை ஈரத் தன்மையுடையது பாலை நிலத்தின் வழியாகக் கடந்து செல்லும் யானைகள்.
. அப்போது ஆண் யானை பெண் யானையின் பசியையும் களைப்பையும் போக்கும் பொருட்டு அம்மரப்பட்டைகளை தன் தும்பிக்கையில் உரித்து பெண் யானைக்கு கொடுக்கும் காட்சியை குறுந்தொகை,
. “பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும்” என்று விளக்குகிறது.
கற்பவை கற்றபின்
1.
நீங்கள்
கண்ட
/ உதவி செய்து
மனம்
நெகிழ்ந்த
நிகழ்வை
வகுப்பறையில்
பதிவு
செய்க.
விடை :
ஒருநாள், நான் காய்கறி வாங்குவதற்காகச் சந்தைக்குச் சென்றேன். காலை நேரமாக இருந்தாலும், வெயில் சுறுசுறுவென்று எரிந்து கொண்டிருந்தது. வெப்பம் அதிகமாக இருந்தது. இந்த வெயிலில் அம்மா அனுப்பி விட்டாளே என்று எண்ணிக்கொண்டே சென்றேன்.
என் முன்னே 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் தடியின்றி நடந்து கொண்டிருந்தார், நான் அவரைக் கடந்து செல்ல முயன்றபோது, சோர்வுற்று கீழே விழுந்து விட்டார், தண்ணீர் தெளித்து, தேநீர் வாங்கிக் கொடுத்து என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உதவி செய்தனர்.
சற்று அவர் தெளிந்து எழுந்து உட்கார்ந்தார். நான் அருகில் சென்று ஐயா! ஏன் விழுந்து விட்டீர்கள்? என்ன காரணம்? என்றேன்,
தம்பி நான் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. என்னால் பசி மயக்கத்தில் ஓரடி கூட நடக்க முடியாது போல் உள்ளது என்ன செய்வேன் என்றார் என் கையில் அம்மா காய்கறி வாங்கி வரச் சொல்லி கொடுத்த 50 ரூபாய் இருந்தது. அருகில் ஒரு சிற்றுண்டிச் சாலை 20 ரூபாய்க்கு 4 இட்லியை வாங்கி கொடுத்துவிட்டு, மீதி உள்ள பணத்தில் காய்கறி வாங்கிச் சென்றேன். அம்மாவிடம் பயந்து கொண்டே கூறினேன். இப்பதாண்டா நீ என் பிள்ளை! என்று கூறி என்னை உச்சி முகர்ந்தாள்.
நான் மகிழ்ந்தேன்; நெகிழ்ந்தேன்.
விரிவானம்
இயல் ஒன்பது
தாய்மைக்கு வறட்சி இல்லை
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
1.
‘தாய்மைக்கு
வறட்சி
இல்லை',
என்னும்
சிறுகதையில்
வரும்
ஏழைத்தாயின்
பாத்திரப்
படைப்பை
விளக்குக.
விடை :
முன்னுரை:
எது வறண்டு போனாலும் உலகில் தாய்மை வறண்டு போவது இல்லை. தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை சு. சமுத்திரம் அவர்கள் இக்கதையில் படைத்திருக்கும் ஏழைத் தாயின் வழி புலப்படுத்துகிறார்.
1. அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி:
தூங்கிக் கொண்டிருக்கும் போது பேரிரைச்சலுடன் வந்த ஜீப் தன் மீதும் தன் கணவன் மீதும் மோதாமல் இருக்க தன் கணவனை உருட்டி விட்டு தானும் அங்கப்பிரதட்சணம் செய்வது போல் உருண்டு காப்பாற்றிய போது ஏழைத்தாய் அன்புடைய மனைவியாகிறாள்.
செல்வந்தன் தன் கைக்குக் கிடைத்த உணவு வகையறாக்களை அள்ளிப்போட்டு அவள் கணவனைத் தன் குடும்பத்தை நோக்கி நடக்கும்படி முதுகைத் தள்ளுகிறான். கையில் உணவுடன் வந்த கணவனைத் தன் கண்களால் இப்படி ஒரு பிழைப்பா என்று தன் தலையில் கைகளால் அடித்தபடியே அவனைத் தண்டிக்கிறார். இவ்வாறு கண்டிப்பும் அன்பும் கலந்து அந்த ஏழைத்தாய் வறுமையிலும் தன்மானம் உள்ளவளாகக் காணப்படுகிறாள்.
2. குழந்தைகளுக்குப் பரிமாறுதல்:
குழந்தைகள் அம்மா வாதாடுவதைக் கோபமாய்ப் பார்த்தன. அதனைக் கண்ட தாய் அவர்கள் பசியில் இருப்பதைப் புரிந்துகொள்கிறாள். பசிமுள் அவள் வயிற்றைக் குத்தியது. சப்பாத்தியையும் வெஜிடபிள் பிரியாணியையும் கண்ட குழந்தைகள் காணாததைக் கண்டது போல் சுவைத்தார்கள் அவள் அனுதாபத்துடன் குழந்தைகளைப் பார்த்து,
இப்போ இப்படிச் சாப்டுகிறீர்கள் ராத்திரி என்ன செய்வீர்கள்? என்று உள்ளத்துள் வருந்துவதால் அன்புத்தாய் ஆகிறாள்.
3. மனிதநேயம் புரிந்தாள்:
அவள் சாப்பிட ஆரம்பித்தபோது உலர்ந்த தொண்டைக்குள் உணவு இறங்க மறுக்கிறது. உணவைக் கொடுத்தவர் தண்ணீரையும் கொடுத்து "உன்னைப் போல கஷ்டப்பட்ட ஒரு தாய்க்குத் தான் மகனாய் பிறந்தேன் உன்னை என் தாயாய் எண்ணி கொடுக்கிறேன்'' என்ற போது அவர் உள்ளத்தில் உள்ள மனிதநேயத்தைப் புரிந்துகொள்கிறாள்,
4. நாய்க்குட்டிகளை விரட்டுதல்:
சாப்பிடும் நேரத்தில் தொந்தரவு செய்த நாய்க்குட்டிகளைக் குரலிட்டபடியே கையைத் தூக்கி துரத்தினாள். ஒரு காலைத் தூக்கியபடியே ஓடின. நாய்க்குட்டி ஒலி எழுப்பியது.
5. சுவைத்து உண்டாள்:
தட்டை குழந்தையைப் போல மடியில் வைத்துக்கொண்டு உணவை வாய்க்குள் போட்டாள். இவ்வளவு ருசியாய் அவள் சாப்பிட்டதாய் நினைவில்லை. உண்டு உண்டு அந்த சுவையில் சொக்கி லயித்துக்கொண்டிருந்தாள். நாயின் ஒலி அவளைச் சுண்டி இழுத்தது. பாசத்தில் பரிதவித்து ஓடுகிறாள்.
6. நாய் குட்டிகளுக்கும் தாயாகிறாள்:
எச்சில் கையைத் தரையில் ஊன்றி எழுந்தாள். நாய்க்குட்டியை வாரி எடுத்தாள். அதன் முதுகைத் தடவினாள். மடியிலிட்டு தாலாட்டினாள். தட்டை தன் பக்கமாய் இழுத்தாள். உணவு சிறுசிறு கவளமாக உருட்டி நாய்க்குட்டிக்கு ஊட்டினாள். தட்டில் இருந்த உணவு குறையக்குறைய அவளது தாய்மை கூடிக்கொண்டே இருந்தது
முடிவுரை:
வறுமையிலும் அன்பு குறையாத மனிதநேயம் மாண்பு குறையாத மறையாத ஏழைத்தாயின் கதாபாத்திரத்தை நம் கண்முன் படைத்துக்காட்டி தாய்மைக்கு என்றும் வறட்சியில்லை என்பதைச் சு.சமுத்திரம் விளக்கி உணர்த்தியுள்ளார்.
கற்பவை கற்றபின்
1.
“பிறருக்கு
உதவி
செய்வதற்கு
மொழி
தேவையில்லை”
என்ற
கருத்தை
அடிப்படையாக்
கொண்டு
வகுப்பறை
மேடையில்
நடித்துக்
காட்டுக.
விடை :
மாணவர்களே,
உங்கள் வகுப்பறை மேடையில் (mime show) மௌன நாடகமாக பின்வருவதை நடித்துக்காட்டுங்கள்.
நீங்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது மிதிவண்டியில் வரும் ஒருவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு, சாலையில் விழுகிறார் உடனடியாக நீங்கள் அவருக்கு முதலுதவி செய்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ உதவி செய்து, வீட்டு முகவரியை விசாரித்து பத்திரமாய் அழைத்து செல்வது என மேற்கூறிய காட்சியை நடித்து காட்டுங்கள்.
மனிதநேயம், அன்பு, இரக்கம், உதவி இவற்றை வெளிப்படுத்த மொழி தேவையில்லை என்பதை உணர்த்துங்கள்.
2.
கதையைத்
தொடர்ந்து
எழுதித்
தலைப்பிடுக.
விடை :
சுண்டெலியின் அறிவு
சுண்டெலிகளுக்குப் பூனையால் மிகவும் துன்பமான நேரம். ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று சுண்டெலிகளைப் பிடித்துத் தின்றது பூனை. சுண்டெலிகள் ஒன்று சேர்ந்து என்ன செய்வது என்று ஆலோசித்தன. மேலும் மேலும் ஆலோசித்தன. ஆனால் ஒரு முடிவும் கிடைக்கவில்லை.
பிறகு ஒரு சின்ன சுண்டெலி சொன்னது, பூனைக்கு என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன். நான் செய்கிறேன் என்றது. சரி முயற்சி செய்து பார் என்று மற்ற சுண்டெலிகள் கூறின.
அன்று பூனை தனக்குத் தேவையான சுண்டெலிகளைப் பிடித்துத் தின்று ஓய்வாக படுத்திருந்தது. சுண்டெலி அருகில் சென்றது. பூனை ஐயா! தங்களுக்கு என் வணக்கம். எங்கள் பூனைகளின் சார்பாக உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். அப்படியா என்ன... விஷயம் சொல்லு என்றது பூனை.
ஐயா! உங்கள் பசியைப் போக்க நீங்கள் அலைந்து திரிந்து எங்களைத் தேடி வந்து சாப்பிட வேண்டாம் ஐயா!
நாங்களே தேடி வந்து உங்களுக்குத் தேவையான போது உணவாகி விடலாம் என்று முடிவு செய்துள்ளோம். ஐயா! ஓ அப்படியா ரொம்ப மகிழ்ச்சி. சரி எனக்கு எப்போது பசி என்று நீங்கள் எப்படி தெரிந்து கொள்வீர்கள்?
அதற்கு ஒரு யோசனை இருக்குதய்யா... ம்ம்.. சொல்லு உங்கள் நான்கு கால்களில் ஒரு காலில் மணி ஒன்றை கட்டி விடுகிறேன் ஐயா.
நீங்கள் பசிக்கும் போது ... உங்கள் காலை தரையில் உதையுங்கள் மணியோசை கேட்டவுடன் நாங்கள் ஓடோடி வருகிறோம் ஐயா..... என்றது.
பூனை யோசித்தது ... சரி... நானும் வளை தேடி ஓடி வரவேண்டியிருக்காது சாப்பிட்டோமா... படுத்தோமான்னு நிம்மதியா இருப்பேன்... என்றது.
பூனையைத் தன் அறிவாற்றலால் வென்ற சுண்டெலி, பூனையின் காலில் மணியைக் கட்டிவிட்டு ஓடி வந்து விட்டது.
பயந்து போய் நின்ற தன் சக சுண்டெலிகளிடம் நான் மணியைக் கட்டிவிட்டேன். இனி மகிழ்ச்சியாக அவரவர் வளைகளிலும். பொந்துகளிலும் சுதந்திரமாக வாழலாம் என்றது.
கற்கண்டு
இயல் ஒன்பது
அணியிலக்கணம்
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.
கேடில்விழுச்
செல்வம்
கல்வி
ஒருவற்கு
மாடல்ல
மற்றை
யவை
- இக்குறளில் பயின்று
வந்துள்ள
அணி?
அ)
சொல்
பின்வருநிலையணி
ஆ)
பொருள்
பின்வருநிலையணி
இ)
சொற்பொருள்
பின்வருநிலையணி
ஈ)
வஞ்சப்
புகழ்ச்சியணி
விடை: ஆ) பொருள் பின்வருநிலையணி
குறுவினா
1.
நினைத்தேன்
கவித்தேன்
படைத்தேன்
சுவைத்தேன்
- இத்தொடரில் அமைந்துள்ள
உருவகத்தைக்
கண்டறிக.
விடை :
கவித்தேன், சுவைத்தேன் – உருவகம்
சிறுவினா
1.
உருவக
அணியை
எடுத்துக்காட்டுடன்
எழுதுக.
விடை :
ஒரு பொருளின் தன்மையைச் சிறப்பிக்க அதற்கு உவமையாகும் வேறொரு பொருள் மேல் உவமையின் தன்மையை ஏற்றிக் கூறுவது உருவகம் ஆகும். உவமை உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும்.
சான்று:
“இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்"
இப்பாடலில்
இன்சொல் - நிலம்
வன்சொல் - களை
வாய்மை - எரு
அன்பு - நீர்
அறம் - கதிர்
என உருவகிக்கப்பட்டுள்ளது.
கற்பவை கற்றபின்
1.
கீழ்காணும்
குறட்பாக்களில்
அமைந்த
அணி
வகைகளைக்
கண்டறிக.
அ) ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார்
விடை :
அணி : : ஏகதேச உருவக அணி
அணி விளக்கம் : தொடர்புடைய இருபொருட்களுள், ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
பொருத்தம் : சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும் சான்றாண்மையைத் தாங்கிக் கொண்டு நிற்பவரை கடற்கரையாக்கி உருவகப்படுத்தாமையால் ஏகதேச உருவக அணி ஆயிற்று.
ஆ)
பிறர்நாணத்
தக்கது
தான்நாணா
னாயின்
அறம்நாணத்
தக்கது
உடைத்து
விடை :
அணி : சொற்பொருள் பின்வருநிலையணி
அணி விளக்கம் : வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து தந்த பொருளையே தருமாயின் அது "சொற்பொருள் பின்வருநிலையணி " ஆகும்
பொருத்தம் : நாண் என்னும் சொல் வெட்கம் என்னும் பொருளில் மீண்டும் மீண்டும் வந்துள்ளமையால் சொற்பொருள் பின்வருநிலையணியாயிற்று.
இ)
தீயவை
தீய
பயத்தலால்
தீயவை
தீயினும்
அஞ்சப்
படும்.
விடை :
அணி : சொற்பொருள் பின்வருநிலையணி
அணி விளக்கம் : வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து தந்த பொருளையே தருமாயின் அது “சொற்பொருள் பின்வருநிலையணி” ஆகும்.
பொருத்தம் : ‘தீய’ என்னும் சொல் ‘தீமை’ என்னும் பொருளில் மீண்டும் மீண்டும் வந்துள்ளமையால் சொற்பொருள் பின்வருநிலையணியாயிற்று.
2.
உவமையணி
அமைந்த
பாடல்
அடிகளை
எழுதுக.
விடை :
குறள்:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று.
பாடல்:
கன்று குரல் கேட்ட பசு போல மாற்றார்
கதறுவதைக்கேட்டவுடன் அன்பு செய்தால்
வென்று வரும் மனித குலம்
3.
கீழ்க்காணும்
புதுக்கவிதையில்
அமைந்த
அணியினை
எழுதுக.
விருட்சங்கள்
மண்ணரசி மடக்காமலேயே
பிடித்துக் கொண்டிருக்கும்
பச்சைக் குடைகள்
விடை :
- முற்றுருவகம்.