Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool

   Posted On :  03.08.2022 08:40 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்


சான்றோர் சித்திரம்


வை.மு. கோதைநாயகி (1901-1960)

ஐந்தரை வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர், தன் குடும்பத்தாரிடமே கல்வி கற்றார். கதை கூறுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தன் கற்பனை ஆற்றலால் தோழியர்களுக்கும் புதிய கதைகளை உருவாக்கிக் கூறினார். அதைக் கண்ட அவரது கணவர் அப்பெண்ணின் படைப்பாற்றலை ஊக்குவிக்கப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். அப்பெண்ணுக்கு நாடகம் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் ஓரளவு மட்டும் எழுதத் தெரிந்த தன்னால் நாடகம் எப்படி எழுத முடியும் என்று அவர் வருந்திய போது, அவரது தோழி, நாடகத்தை அவர் சொல்லச் சொல்லத் தான் எழுதுவதாகக் கூறி ஊக்கப்படுத்தினார். இப்படித்தான் அப்பெண் தன்னுடைய முதல் நூலான 'இந்திர மோகனா என்ற நாடக நூலை வெளியிட்டார். அவர்தான் 'நாவல் ராணி', கதா மோகினி', ஏக அரசி' என்றெல்லாம் தம் சமகால எழுத்தாளர்களால் அழைக்கப்பட்ட வை.மு.கோ. ('வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்) ஆவார். 

இவர் 'ஜகன் மோகினி' என்ற இதழை முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். பெண் எழுத்தாளர்களையும், வாசகர் வட்டத்தையும் உருவாக்கினார். காந்தியத்தின் மீது பற்றும் உறுதியும் கொண்டிருந்த இவர் தம் எழுத்துகளால் மட்டுமன்றி மேடைப் பேச்சின் மூலமும் காந்தியக் கொள்கைகளைப் பரப்புரை செய்ததோடு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கும் சென்றார். தமிழகப் பெண் வரலாற்றில் தனித்து அடையாளம் காட்டப்பட வேண்டிய சிறப்புக்குரியவரான வை.மு.கோ. அவர்கள் 115 நாவல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பமே உலகம் என்று பெண்கள் வாழ்ந்த காலகட்டத்தில், வீட்டிற்கு வெளியே உலகம் உண்டு என்பதைப் பெண்களுக்குத் தன் வாழ்வின்மூலம் இனம் காட்டிய பெருமைக்கு உரியவர் வை.மு.கோ. அம்மையார். 

அவருடைய எழுத்தாற்றலுக்கொரு சான்று :

"என்ன வேடிக்கை! அடிக்கடி பாட்டி 'உலகானுபவம்... உலகம் பலவிதம்... என்றெல்லாம் சொன்னதைக் கேட்டபோது எனக்கு ஒண்ணுமே புரியாது விழித்தேனே... பாட்டி சொல்லிய வசனங்களைவிடக் கடிதங்கள் பலவற்றைப் படித்தால் அதுவே மகத்தான லோகானுபவங்களை உண்டாக்கிவிடும் போலிருக்கிறதே! பாவம்! பேசுவது போலவே தன்னுடைய மனத்தினுள்ளதைக் கொட்டி அளந்துவிட்டாள் .... நான் கிராமத்தை வெறுத்துச் சண்டையிட்டு வீணாக அவர் மனதை நோவடிக்கிறேன். இவள் பட்டணத்தை வெறுத்துத் தன் கொச்சை பாஷையில் அதன் உண்மை ஸ்வரூபத்தை படம் பிடித்துக் காட்டி விட்டாளே!.. என்ன உலக விசித்திரம்!... என்று கட்டுமீறிய வியப்பில் சித்ரா மூழ்கினாள்."

('தபால் வினோதம்' குறுநாவலில் இருந்து)

வினாக்கள் : 

1. வை.மு. கோதைநாயகியின் முதல் நூல் எது? 

2. தொடர்ந்து உறுப்பிலக்கணம் தருக: தொடர்ந்து 

3. இப்பகுதியில் இடம்பெற்றுள்ள உவம உருபினை எடுத்து எழுதுக. 

4. பிரித்தறிக: பங்கேற்று 

5. புணர்ச்சி விதி கூறுக: தன்னுடைய 


விடைகள் : 

1. இந்திர மோகனா

2. தொடர்ந்து - தொடர் + த்(ந்) + த் + உ 

தொடர் - பகுதி

த் - சந்தி (ந் ஆனது விகாரம்) 

த் - இறந்தகால இடைநிலை

உ - வினையெச்ச விகுதி 

3. போலவே (போல) 

4. பங்கேற்று - பங்கு + ஏற்று 

5. தன்னுடைய - தன் + உடைய 

• தனிக்குறில் முன் ஒன்று உயிர்வரின் காட்டும் என்ற விதிப்படி, தன்ன் + உடைய என்றானது. 

• உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ன் + உ = னு) தன்னுடைய என்று புணர்ந்தது.


தமிழாக்கம் தருக.

Popular as the 'Cultural Capital’of India, Tamil Nadu is extremely well-known for its marvellous temples and other architectural gems. The state rose to prominence primarily because of its well-known and outstanding Tanjore Paintings that flourished at the time of Chola dynasty in ancient Tanjavoor. In this traditional art form, the paintings showcase the embellished form of the sacred deities of the region. The deities in the paintings are festooned with glass pieces, pearls, semi-precious stones, and gold and other vibrant colours. In the modern times, Tanjore paintings look up to human figures, animals, floral motifs and birds as muses.

தமிழாக்கம்:

இந்தியாவில் தமிழகம் கலாச்சாரத் தலைநகரமாகத் திகழ்கிறது. தமிழ்நாடு பிரம்மாண்டமான கோவில்களுக்கும் மற்றும் கட்டடக்கலைகளுக்கும் புகழ்பெற்றது. குறிப்பாக, தஞ்சாவூர் ஓவியங்கள் சோழவம்சத்தின் கலாச்சாரங்களையும் பண்டைய தஞ்சாவூரின் பாரம்பரிய கலை, ஓவியங்கள் மற்றும் புனித தெய்வங்கள் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றது. தெய்வங்களின் உருவங்கள் கண்ணாடித் துண்டுகள் ஓவியங்கள், முத்துக்கள், விலை உயர்ந்த கற்கள் மற்றும் தங்கம் ஆகியவற்றில் பல வண்ணங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. நவீன காலத்தில் தஞ்சாவூர் ஓவியங்கள் மனித உருவங்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பறவைகள் - உருவங்கள் கொண்டதாகப் புதிய பரிணாமம் பெற்றுள்ளன. 


கீழ்க்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லைத் தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுக.

எ.கா: கபிலன் திறமையானவர் என்று _________ (குமரன்) தெரியும்.

கபிலன் திறமையானவர் என்று குமரனுக்குத் தெரியும். 

1. நேற்று முதல் _________ (அணை) நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

விடை: அணையின் 

2. உங்களுக்கு _________ (யார்) நன்மை என நினைக்கிறீர்கள்.

விடை: யாரால் 

3. முருகன் _________ (வேகம்) சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை. 

விடை: வேகமாகச் 

4. நம்முடைய _________ (தேவை) அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும். 

விடை: தேவையின் 


பொருள் வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க. 

எ.கா: களம் - கலம் : போர்க்களத்தில் புண்பட்ட வீரர்களுக்குக் கலத்தில் நீர் தரப்பட்டது.

வலம், வளம் : ஆற்றின் வலப்புறம் உள்ள வயல்கள் நீர்வளத்தால் செழித்திருந்தன. 

புல் - புள் 

புல் தரையில் புட்கள் (புள்கள்) கூட்டம் அமர்ந்து விளையாடின. 

உழை - உளை 

தனது முதலாளிக்காக உழைக்கும் குதிரையின் உளை (பிடரி மயிர்) மிகவும் அழகாக இருக்கிறது. 

கான் - காண் 

கானகத்தில் வாழும் விலங்குகளைக் காண்பது மகிழ்ச்சி தரக்கூடியது. 

ஊண் - ஊன் 

ஊண் (மாமிசம்) உணவை உண்டு ஊனை (உடலை) வளர்ப்பது பாவம். 

தின்மை - திண்மை 

திண்மை (வலிமை) கொண்ட ஒருவன் எளியவருக்கு தின்மை (தீமை) செய்தல் மறமாகாது.


மொழியோடு விளையாடு


எண்ணங்களை எழுத்தாக்குக.


உன்னை நீயே உற்றுப்பார்

நீ ஒரு நிலா, 

கூர்மையான முட்கள்

மூடியிருக்கின்றது உன்னை 

அவைகளை விலக்கி விட்டுப்பார்

உன்னை சுவாசம் செய்ய 

நந்தவனமாய் நான்


இலக்கிய நயம் பாராட்டுக. 

அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்

அவ்வாறே வான் கண்டேன், திசைகள் கண்டேன்

பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ?

பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்

சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்

சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி

இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்

எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ?

- பாரதிதாசன்

தலைப்பு : வெண்ணிலவு. 

ஆசிரியர் குறிப்பு :

பெயர் : பாராதிதாசன் (கனகசுப்புரத்தினம்) 

பெற்றோர் : கனகசபை – இலக்குமி 

பிறப்பு : 29-4-1891) 

சிறப்பு : புரட்சிக்கவி 

நூல்கள் : குடும்பவிளக்கு, இருண்ட வீடு, பாண்டியன் பரிசு, சேரதாண்டவம்,

அழகின் சிரிப்பு... இன்னும் பல. 

திரண்டக் கருத்து:

மாலை இருளினால் கருமையாகும் உலகினைக் கண்டேன். அதுபோல வானமும் இருளாவதைக் கண்டேன். திசைகள் எட்டும் இருளில் மறைவதைக் கண்டேன். பின்னர் கருமையான இருள் சிரிப்பதில்லை. பெருஞ்சிரிப்பு ஒளியின் முத்துக்களாகிய முழு நிலவே நீதான் அழகெல்லாம் ஒன்று சேர்த்துக் காட்சி தருகிறாய். உலகிற்குக் குளிர் ஏற்றி, ஒளியும் ஊட்டுகிறாய். இயற்கையாகிய அன்னை தனது எழில்வாழ்வைச் சித்தரிக்கும் அழகோ நீ நிலவே - என்கிறார் பாரதிதாசன். 

மோனை நயம் : 

நாட்டுக்கு அழகு சேனை 

பாடலுக்கு அழகு மோனை 

முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை. 

சான்று:

ந்தியிருளால் வ்வாறே

பிந்தியந்த பெருஞ்சிரிப்பின்

எதுகை நயம் : 

பெண்ணுக்கு அழகு புன்னகை 

பாடலுக்கு அழகு எதுகை 

பாடல் அடிகளின் சீர்களின் முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை. 

சான்று:

ந்தியிருளால் 

பிந்தியந்த 

சிந்தாமல்

சிந்தாவென்று 

அணி நயம் :

இயற்கை அன்னைத் தனது எழில் வாழ்வைக் காட்டவே நிலவாகச் சித்தரித்துக் காட்டுகிறாள் என்னும் அடிகளில் இயற்கையை உயர்வாகப் பாடியிருப்பதால் உயர்வு நவிற்சி அணி இடம்பெற்றுள்ளது. 

கற்பனை நயம் : 

கவிஞர்க்குக் கற்பனை கைவந்தக் கலை. இருளால் மூழ்கும் இவ்வுலகைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பாரதிதாசன். வானில் தோன்றும் வெண்ணிலவை இயற்கையின் அழகு என்று வர்ணிக்கிறார் பாரதிதாசன்.


நான்கரைச் சக்கர வடிவம் 

மேனி திடமே விடுமே! 

மேடு விளையா டுவமே! 

மேவ டுவோட சாருமே! 

மேரு சாதுதூ தினிமே!


விளக்கம் : 

காடு மேடு என்று பாராமல் நன்றாக

விளையாடுவோம். அதனால், நம் உடம்பு (மேனி)

திடமாகும். மேவிவரும் நோய்களும் (வடு)

ஓட, இமயமலை (மேரு) போன்ற சான்றோர்

பாராட்டும்படியான செய்தியும் (தூது) இனி

மேவிவரும்.

உரிய இடத்தில் எழுதுக. 

தேடு தேனீயோ லாவதே 

தேவ லாமென நாடுதே! 

தேடு நாநய மாடுதே! 

தேடு மாநிலை தேடுதே!


விளக்கம் :

பூக்கள் தோறும் தேனைத் தேடி அலைகின்ற 

தேனீயைப் போல, சுறு சுறுப்பாகும் 

நிலைதான் சிறந்ததென்று நாட வேண்டும். 

எவரிடமும் நயத்தோடு பேச வேண்டும். 

எவரிடமும் நயத்தோடு பேச வேண்டும். 

இவ்வாறிருந்தால் உயர்ந்தோர் நம்மைத் தேடிவருவர்.


கதையைத் தொடர்ந்து நிறைவு செய்க:

வேப்பமரத்தால் ஆன மரப்பாச்சி பொம்மை ஒன்று என் வீட்டில் நெடுங்காலமாக இருந்தது. மிகுந்த அன்போடு அதற்கு என் பெயரை வைத்திருந்தேன். எத்தனையோ வாசனைகளை அதன்மீது பூசினேன். ஆனாலும் அந்தக் கசப்பின் வாசம் போகவில்லை. இரவில் அதன் மெல்லிய விம்மல் ஓசை கேட்கும்...

நாம் ஒரு நாள் விம்மலோசைக் கேட்டவுடன் நான் எழுந்து பார்த்தேன் மேரியை. என் படுக்கை அறையின் ஒரு மூலையில் கிடந்தாள் மேரி. மெதுவாக மேரியின் அருகில் சென்றேன். என் வருகையைச் சற்றும் எதிர்பாராத மேரி அழுகையை நிறுத்திக் கொண்டது. முதலில் நான்தான் மேரியிடம் பேச்சுக் கொடுத்தேன். உனக்கும் பேசத் தெரியுமா, அழக்கூடத் தெரியுமா என்றேன். எனக்கும் உணர்வுகள் உண்டு. நானும் பேசுவேன் என்றது மேரி. நீ மனிதராக இருப்பதால் உனக்கு எல்லாம் கிடைக்கிறது. மரமாக நான் இருப்பதால் கேட்பாரற்றுக் கிடக்கிறேன் என்றது மேரி. உனக்கு என்ன வேண்டும்? என்னிடம் நீ என்ன எதிர்பார்க்கிறாய் என்று மேரியிடம் கேட்டேன். முதலில் எங்கள் பெற்றோரிடமிருந்து எங்களைப் பிரிக்காதீர்கள். நாங்கள் மனிதர் வாழ நல்ல காற்றினைத் தருகிறோம். எங்களிடமிருந்து கிடைக்கும் எண்ணெய் நல்ல நாட்டு மருந்து ஆகும். அப்படியிருக்க எங்களை வெட்ட மனிதருக்கு அரக்கக் குணம் எப்படி வந்தது என்று கேட்டது மேரி. இனிமேல் எங்களை வெட்டமாட்டோம் என்று உறுதி அளித்தால்தான் அழுகையை நிறுத்துவேன் என்றது மேரி. மேலும் எனது பாராம்பரிய கசப்பு வாசனையைப் போக்க என் மீது ஏதேதோ தடவுகிறாய். என்னிடமிருந்து எனது மணத்தைப் பிரிக்கமாட்டேன் என்று உத்திரவாதம் கொடு என்றது மேரி. அத்தனைக்கும் ஒப்புக் கொண்ட நான் மேரியிடம் வாக்குறுதி அளித்தேன். இதற்கிடையே என்னை யாரோ அழைப்பது போல் இருந்தது. விழித்துப் பார்த்தேன். அம்மா அழைத்திருந்தாள். கனவாக இருந்தாலும் மேரிக்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன்.

வேம்பு தரும் நற்காற்று 

வேம்புக்குத் தருவோம் பாதுகாப்பு.


அண்மையில் நீங்கள் பார்த்த சமூகக் கருத்துள்ள திரைப்படம் ஒன்றின் திரைவிமர்சனத்தை அப்படத்தின் இயக்குநருக்கு கடிதமாக எழுதுக.

20-6-2019

திருநெல்வேலி. 


உயர்திரு இயக்குநர் அவர்களுக்கு, 

வணக்கம்.

சென்ற வாரம் தாங்கள் இயக்கிய படம் பார்த்தேன். படங்களுக்கு இப்போதெல்லாம் படங்களுக்கு வசனங்களை விட விமர்சனங்களே பக்க பலமாக இருக்கிறது. இதோ எனது விமர்சனம்.

மாணவர்களுக்கு ஊக்கம் தரும் படம். அம்மா கதாபாத்திரம் - உணவகத்தில் வேலை பார்க்கும் பெண். மகளுக்குத் தெரியாது என்ன வேலை என்று. மகள் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாள். அனைத்துப் பாடங்களிலும் சராசரி மதிப்பெண்கள். கணிதத்தில் மிகக் குறைவு. அம்மா கேட்டாள் காரணத்தை, நீ சொல்லிக் கொடு என்றாள் மகள். மகள் வகுப்பில் அம்மா சேர்ந்து படிக்கிறாள் சலனமின்றி.

நல்லா படிக்கும் மாணவன் அம்மாவிற்குக் கணிதம் சொல்லிக் கொடுக்கிறான். கணிதத்தில் நல்ல மதிப்பெண் அம்மாவுக்கு. மகளின் வேண்டுகோள் நீ பள்ளிக்கு வரவேண்டாம். இனிமேல் நான் நன்றாகப் படிக்கிறேன் என்றாள் மகள்.

இறுதியில் மகள் (இ.ஆ.ப) மாவட்ட ஆட்சியர் ஆகிறாள். ஒரு பேட்டியில் கணிதத்தில் உச்சத்தில் இருக்கும் நீங்கள் ஆட்சியர் பணிக்கு வந்ததன் நோக்கம் பற்றிக் கேட்டதற்கு, இது என் அம்மாவின் ஆசை. நான் வேலைக்காரி ஆகக்கூடாது. இதுவே மகளின் பதில்.

மாணவர் மத்தியில் ஒரு உற்சாகம் ஊட்டும் விதமாக திரைப்படம் அமைந்துள்ளது. பாராட்டுக்கள். கீதை உபதேசம் இல்லை இது. அம்மா உபதேசம். அம்மா கணக்குத் தப்பாது. அது லாப கணக்குதான். 80 / 100 மதிப்பெண். 


கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக.

எ.கா: வானம், பற, நிலவு, தொடு - வானத்தில் பறப்போம்.

பறந்து நிலவைத் தொடுவோம். 

1. சருகு, விழு, மண், அலை  

காய்ந்த இலைச்சருகுகள் மண்ணில் கிடந்தன.

மண்ணில் கிடந்த சருகுகள் அலைபோல அசைந்தன. 

2. விண்மீன், ஒளிர், எரி, விழு  

விண்மீன் வானத்தில் அழகாக ஒளிர்ந்தது.

ஒளிர்ந்த விண்மீன் எரிந்து விழுந்தது. 

3. குதிரை, வேகம் ஓடு, தாவு  

குதிரை அதிவேகமாக ஓடியது.

ஓடிய குதிரையைத் தாவிப்பிடிக்க இயலாது. 

4. குழந்தை, நட, தளிர்நடை, விழு  

குழந்தை தளிர்நடை நடந்தது.

நடந்த குழந்தை தடுமாறி விழுந்தது. 

5. திரை, காண், கைதட்டல், மக்கள் 

திரை அரங்கில் திரை விலகியதைக் கண்டார்கள்.

திரைவிலகுவதைக் கண்ட மக்கள் கைதட்டினார்கள். 


செய்து கற்போம் 

பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்களைத் தொகுத்துப் படத்தொகுப்பு உருவாக்குக.


நிற்க அதற்குத் தக


குறிப்பேடுகள் உருவாக்குதல், சேகரிப்பு, ஏதேனும் கலை பயிலல்

கலைகளில் உங்களுக்குப் பிடித்த வடிவங்கள் எவை? காரணம் என்ன?

சிலை வடிவம் பிடிக்கும். உயிர்ப்புள்ளதாக இருப்பதால். 

நீங்கள் எந்தக் கலையில் வல்லவர்?

பேச்சுக்கலை 

ஏதேனும் கலை பயில நினைத்தால் உங்கள் தேர்வு எதுவாக இருக்கும்?

ஹார்மோனியம்  

பொழுதுபோக்காகப் பொருள்களைச் சேகரிப்பதில் ஆர்வம் உண்டா ? ஆம் எனில் எவையெவை எனக் குறிப்பிடுக.

(எ-கா) அஞ்சல் தலை, நாணயங்கள்

உண்டு. உள்நாட்டு, வெளிநாட்டுப் பழைய புதிய நாணயங்கள்  

பொன்மொழிகள், குறிப்புகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதிக் குறிப்பேடு தயாரிக்கும் வழக்கம் உண்டா? ஆம் எனில் அவை எத்தகையவை எனக் குறிப்பிடுக.

பொன்மொழி குறிப்பேடு உண்டு. “இருட்டறையில் உள்ளதடா உலகம். சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே (சமூக நீதி) 

நாட்குறிப்பு எழுதுவீர்களா? எனில் எத்தகை குறிப்புகளை எழுதுவீர்கள்?

நாட்குறிப்பு எழுதுவேன். என் நெஞ்சைத் தொட்ட நிகழ்வுகளை எழுதுவேன். 


படிப்போம் பயன்படுத்துவோம் (திரைத்துறை)

Artist - கவின்கலைஞர் 

Animation - இயங்குபடம் 

Newsreel - செய்திப்படம்

Cinematography - ஒளிப்பதிவு 

Sound Effect - ஒலிவிளைவு 

Multiplex Complex - ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்


அறிவை விரிவு செய்

• எனது சுயசரிதை - சிவாஜி கணேசன் 

• மெய்ப்பாடு - தமிழண்ணல் 

• காப்பியத்தமிழ் - இரா. காசிராசன் 

• அம்ஷன்குமார் - சினிமா இரசனை

• அஜயன்பாலா - உலகத் திரைப்பட வரலாறு I, II, III 

• செழியன் - உலக சினிமா I, II, பேசும் படம் 

• கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன்


Tags : Chapter 6 | 12th Tamil இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 6 : Sirugai alaviya cool : Tamil Language Exercise - Questions and Answers Chapter 6 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 6 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : சிறுகை அளாவிய கூழ்