பருவம் 3 இயல் 1 | 4 ஆம் வகுப்பு தமிழ் - உலா வரும் செயற்கைக்கோள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 4th Tamil : Term 3 Chapter 1 : Ula Varum ceyarkaihol
வாங்க பேசலாம்
● பாடலை
ஓசைநயத்துடன் பாடுக.
● செயற்கைக்கோள்களின்
வகைகளை அறிந்துகொண்டு வந்து பேசுக.
விடை
அவையோர்க்கு வணக்கம் !
மனிதனின் முயற்சியால் விண்வெளியின் கோளப்பாதையில் இயங்கும் ஒரு பொருளாகச் செயற்கைக்கோள் இருக்கிறது.
செயற்கைக்கோள்கள் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளுக்கு
பயன்படுத்தப்படுகின்றன. இராணுவக் கண்காணிப்பு, உளவு வேலைகள், பூமியைக் கண்காணிக்கும் வேலைகள், வானியல் பற்றிய
பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள், தகவல் பரிமாற்றம் ஆகிய எல்லாவற்றிற்கும் செயற்கைக்கோள்
பயன்படுத்தப்படுகின்றன.
இதன் வகைகள் :
● தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள்
● புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள்
● வானிலை செயற்கைக்கோள்கள்
● பயோ செயற்கைக்கோள்கள்
● சோதனை செயற்கைக்கோள்கள்
● இடங்காட்டி செயற்கைக்கோள்கள்
● அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு செயற்கைக்கோள்கள்
போன்றவையாகும்.
சிந்திக்கலாமா!
செயற்கைக்கோள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் இந்த உலகம்
எப்படி இருந்திருக்கும்?
விடை
● செயற்கைக்கோள் கண்டுபிடிக்காமல் இருந்தால் உலகில்
எந்த வளர்ச்சியும் ஏற்பட்டிருக்காது.
● தகவல் தொடர்பு இருந்திருக்காது.
● பிற கோள்களைப் பற்றி அறிந்திருக்க இயலாது.
● புயல் மழை வருவதை அறிந்து மக்கள் பாதுகாப்பாக
இருக்க முடியாது.
● காவல்துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாது.
● மண்வளம் கனிம வளம் பற்றி அறிய முடியாது.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா!
1. மண்ணிலுள்ள – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மண்ணி + லுள்ள
ஆ) மண்ணில் + உள்ள
இ) மண் + உள்ள
ஈ) மண்ணில் + உள்ளே
[விடை : ஆ) மண்ணில் + உள்ள]
2. நிழற்படம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) நிழள் + படம்
ஆ) நிழை + படம்
இ) நிழல் + படம்
ஈ) நிலை + படம்
[விடை : இ) நிழல் + படம்]
3. உண்மை என்ற சொல்லின் பொருள்
அ) பொய்
ஆ) தவறு
இ) சரி
ஈ) மெய்
[விடை : ஈ) மெய்]
4. நற்பயன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நல்ல + பயன்
ஆ) நன்மை + பயன்
இ) நல் +
பயன்
ஈ) நற் + பயன்
[விடை : ஆ) நன்மை + பயன்]
5. அருகில் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ) பக்கத்தில்
ஆ) எதிரில்
இ) அண்மையில்
ஈ) தொலைவில்
[விடை : ஈ) தொலைவில்]
வினாக்களுக்கு விடையளிக்க
1. 'பறவைக் கப்பல்' எனக் குறிப்பிடப்படுவது எது?
விடை
பறவைக் கப்பல் எனக் குறிப்பிடப்படுவது செயற்கைக்கோள்கள்.
2. செயற்கைக்கோளினால் விளையும் பயன்களுள் இரண்டைக்
குறிப்பிடுக.
விடை
மண்வளங்களை நுட்பமாகக் காட்டுகிறது.
ஆழிப்பேரலை போன்ற பேரழிவுகள் வருவதற்கு முன்பே
அறிவித்து மனித உயிர்களைக் காக்கிறது.
இணைந்து செய்வோம்
இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் அமைந்துள்ள சொற்களைப் பாடலிலிருந்து
எடுத்து எழுதுக.
விடை
பட்டு – விட்டு
விண்வெளி – விண்ணில்
மண்ணிலுள்ள – உண்மை
அருகில் – உருவில்
கனிம வளம் – மனித
இதுவரை – அதுதான்
ஒரே ஓசையில் முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து
எழுதுக.
விடை
வந்திடுமே - பறந்திடுமே
வாருங்கள் – பாருங்கள்
சொல்லிடுமே – உதவி
எடுத்திடுமே – காட்டிடுமே
காட்டிடுமே – உணர்திடுமே
பாடலை நிறைவு செய்வோம்
பஞ்சு போன்ற மேகமே
பார்க்க நெஞ்சு மகிழுமே
காற்று வீசும் மேகமே
கலைந்தே அசைந்து
செல்லுமே
மக்கள் உள்ளம் மகிழுமே
மழையாய் வரும்
மேகமே!
வண்ணம் தீட்டி மகிழ்வோம்
சொல் உருவாக்கலாமா!
கொடுக்கப்பட்ட சொற்களின் முதலெழுத்தை மாற்றினால், செயற்கைக்கோளுடன் தொடர்புபடுத்தலாம்.
தகவல்
கோள்கள்
மழை
வெப்பம்
கனிமம்
அறிந்து கொள்வோம்
இந்தியா, வானில் செலுத்திய செயற்கைக்கோள்களுக்கு
ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இவர்கள்
இருவரும் வானவியலிலும் கணிதவியலிலும் சிறந்து விளங்கியவர்கள்.
செயல் திட்டம்
நம் நாட்டில் இதுவரை விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களின்
பெயர்களை எழுதி வருக.